Just In
- just now எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- 8 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 9 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 11 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தலைமுடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?
தலைமுடியின் வலிமையை அதிகரிக்க என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் நேச்சுரல் ஹெர்பல் ஹேர் ஆயிலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
தலையில் கையை வைத்தாலே, முடி கையோடு வருகிறதா? படுக்கையில் இருந்து எழுந்தால், தலையணையில் முடி அதிகம் ஒட்டி இருக்கா? எப்போது வீட்டைப் பெருக்கினாலும், கொத்தாக தலைமுடி கிடைக்கிறதா? அப்படியெனில் உங்கள் தலைமுடி மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100-க்கும் அதிகமான மயிர்கால்கள் உதிருமானால், உடனே தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். தலைமுடியின் வலிமையை அதிகரிக்க என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் போன்ற பலவற்றைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இப்போது நாம், தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும் ஓர் நேச்சுரல் ஹெர்பல் ஹேர் ஆயிலைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
செம்பருத்திப் பூ - 2-3
துளசி இலைகள் - சிறிது
கறிவேப்பிலை - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2
லாவெண்டர் எண்ணெய் - 10 துளிகள்
செய்முறை #1
முதலில் வெங்காயத்தின் தோலுரித்து, அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கறிவேப்பிலை, துளசி மற்றும் செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
செய்முறை #2
ஒரு வாணலியில் லாவெண்டர் எண்ணெயைத் தவிர்த்து, இதர அனைத்து எண்ணெய்களையும் ஊற்றி, குறைவான தீயில் சூடேற்ற வேண்டும். பின் அதில் வெங்காய சாற்றினை ஊற்றி கிளறி விட வேண்டும்.
செய்முறை #3
பின் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, செம்பருத்தி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கிளற வேண்டும்.
செய்முறை #4
பின்பு அதில் வெந்தயத்தை சேர்த்து, அது நிறம் மாறும் வரை சூடேற்றி இறக்கி, அறைவெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும்.
செய்முறை #5
இறுதியில் எண்ணெய் மணத்தை அதிகரித்து சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கிளறி, ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை
தலைமுடியை பகுதிகளாகப் பிரித்து, ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி, 10 நிமிடம் விரலால் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
குறிப்பு
இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆயில் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதை நன்கு காணலாம்.
உங்களுக்கு இதுப்போன்று வேறு ஏதேனும் சக்தி வாய்ந்த ஹேர் ஆயில் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.