Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க
சுவையான...அவியல்!!!

தேவையான பொருட்கள் :
சௌசௌ - 1 கப் (நீளமாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 கப் (நீளமாக நறுக்கியது)
கேரட் - 1 கப் (நீளமாக நறுக்கியது)
பூசணிக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது)
வாழைக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
தயிர் - 1/2 கப்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, அதில் உள்ள நீரை வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காய்கறிகள், அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்மு தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.
இப்போது சுவையான அவியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications