Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல பசங்களுக்கு இந்த செட்டிநாடு புட்டு செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
Chettinad Rangoon Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டுமா? உங்கள் பிள்ளைகள் ஸ்ட் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு ஒரு செட்டிநாடு ஸ்வீட்டை செய்து கொடுங்கள். அது தான் செட்டிநாடு ரங்கூன் புட்டு. இந்த புட்டு பார்க்க கேசரி போன்று காணப்படும். ஆயினும், இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.
அதுவும் வரலட்சுமி நோன்பு வரப்போகிறது. இந்த நோன்பு நாளில் லட்சுமி தேவிக்கு விதவிதமான பலகாரங்களை செய்து படைக்க விரும்புவர். நீங்களும் அப்படி விருப்பப்படுகிறீர்களா? அப்படியானால் ரவையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்யுங்கள். இந்த புட்டு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ரங்கூன் புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 10
* துருவிய தேங்காய் - 1 கப்
* ரவை - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து,
அதில் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் அதை
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து, முந்திரியுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை, தேங்காயை
சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* நீர் வற்றியதும், அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு ரங்கூன் புட்டு
தயார்.



Click it and Unblock the Notifications









