Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தைகளுக்கு 6 மாதம் ஆவதற்கு முன் தண்ணீர் கொடுப்பது ஆபத்தானதா? விளக்குகிறார் டாக்டர் பாரதி...!
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. ஆனால் மருத்துவர் உலகில் " நீரை சரியாக குடிப்பதே அழகு" என்று கூறுவார்கள். அதற்கேற்ப நமக்கு நீரின் தேவை அளவிற்கு அதிகமாக இருக்கிறது. என்னதான் நீரின் தேவை அளவிற்கு அதிகமாக இருந்தாலும், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல், அளவிற்கு அதிமாக பயன்படுத்துவதும் தேவையற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
பெரியவர்களுக்கு இந்த நிலை என்றால், குழந்தைகளுக்கு கொடுக்கும் தண்ணீரின் அளவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரை முக்கிய கடமை என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பாரதி. குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பது சார்ந்த மருத்துவரின் அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா கூடாதா?
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது சிறந்தது என்பது உலக சுகாதார நிறுவனம் நமக்கு எடுத்துரைக்கும் ஒன்று. ஏதாவது தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக குழந்தைக்கு ஃபார்முலா பால் கொடுத்தாலும், குழந்தைக்கு தண்ணீர் தவிர்த்து பால் கொடுப்பதே சிறந்தது. தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் என எதை கொடுத்தாலும், அதில் 70% இருக்க கூடிய முக்கிய பொருள் தண்ணீர்தான்.
அதிக அளவு சிறுநீர் கழிப்பது
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை 10 முதல் 15 முறையோ அல்லது அதற்கு மேலோ சிறுநீர் கழிப்பது சாதாரணமான ஒன்று, இதை நினைத்து பயப்பட வேண்டியதில்லை என்கிறார் பாரதி. உடலுக்குள் செல்லும் நீர் தான் உடலால் தேவையானவற்றை உறிஞ்சப்ப்பட்டு மீதம் இருக்கும் கழிவு சிறுநீராக வெளியேற்றப்படும். குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடிக்கும் போது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆபத்தானது அல்ல.
ஆறு மாதத்திற்கு முன் ஏன் தண்ணீர் தரக் கூடாது?
நாம் குடிக்கும் தண்ணீர், குளிர்பானங்கள், பழசாறு, அல்லது நீர் பொருட்கள் என அனைத்தும், நமது உடலில் இருக்கும் சிறுநீரகத்தால் தேவையவற்றை எடுத்துக் கொண்டு, தேவையற்றவற்றை கழிவுகளை சிறுநீராக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றி விடும். உடலின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப சிறுநீரகம் அதன் வேலையை சரியாக செய்யும். தேவையை விட அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது சிறுநீரகத்தின் பணியை அதிகரிப்பதால், நாளடைவில் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாகவே குழந்தைக்கு தாய்ப்பால் தவிர எதுவும் கொடுக்க கூடாது என கூறுகிறார்கள்.
திட உணவு சாப்பிடும் குழந்தைக்கு தண்ணீர்
குழந்தையின் ஆறு மாதத்திற்கு பிறகு, அவர்களுக்கு திட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக பழக்குவோம். அப்போது அவர்களுக்கு நான்கு வாய் உணவிற்கு பிறகு சிறிது தண்ணீர் கொடுப்பது சிறந்து. அது குழந்தைகள் விழுங்க இதமாகவும், எளிதாகவும் இருக்கும். இதனால் எந்த பாதிப்பும் வாராது என்கிறார் மருத்துவர். ஏன்னென்றால், எளிதான செரிமானத்திற்கும், குழந்தைகள் மலம் கழிக்கும் போது சிரமத்தை ஏற்படுத்தாமல் இலகுவாகவும் இருக்கும்.
தண்ணீர் குடிப்பதால் மட்டும் நீர் உடலுக்கு கிடைக்கிறதா?
நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து மட்டும், நம் உடலுக்கு போதுமான நீர் கிடைக்கிறதா என்றால் இல்லை. நாம் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தும் நீர் சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கு திட உணவை அறிமுக படுத்தும் போது, நீர் சத்துக்கள் அதிக அளவில் இருக்கும் காய்களான சௌசௌ, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை கொடுக்கலாம். ஒரு வயது குழந்தைக்கு தாய்ப்பால், நீர் சத்து நிரம்பிய உணவு பொருட்கள், மற்றும் தண்ணீர் என மொத்தமாக 800 மில்லி லிட்டர் வரை கொடுக்கலாம். குழந்தையின் எடையை பொறுத்து அவர்களுக்கான நீரின் தேவை மாறுபடும். தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து கொடுப்பது நலம்.
தண்ணீர் தவிர்த்து வேறு என்ன கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு பால் கொடுக்கலாம். அது 400-500 மில்லிக்கு மிகாமல் இருப்பது நல்லது. குழந்தைக்கு நீரை சேர்த்து அடித்து வடிகட்டிய பழச்சாறை கொடுப்பதை விட, முழு பழமாக சாப்பிட கொடுப்பது, பழத்தில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். பழச்சாறாக கொடுக்கும், பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் நார்சத்துக்கள் வெளியேறிவிடுகிறது என்பது மருத்துவரின் கருத்து. அடுத்ததாக, தாய்ப்பாலிற்கு அடுத்த அற்பதமான சுத்தமான ஒன்று இளநீர். ஆறு மாதத்திற்கு அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கலாம். இதில் இருந்து போதுமான நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து உடலுக்கு கிடைக்கிறது.
கொடுக்க கூடாதது
டீ, காபி கண்டிப்பாக கொடுக்க கூடாது. டீ, காபி குடிக்கும் குழந்தைகள், அதிக உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியோடும் இருப்பார்கள். இது நல்லது தானே என்றால், இதில் இருக்கும் பிரச்சனைகளையும் முழுதாக கேளுங்கள். டீ, காபி குடிப்பதால், குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதில் முக்கியமான ஒன்று, இது பசி உணர்வை குறைத்து, குழந்தையின் எடையை அதிகரிக்க முடியாமல் போக வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications












