Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
கர்ப்பமா இருக்கும் போது நெஞ்சு எரிச்சலா இருக்கா? இத படிங்க...
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் நெஞ்சு எரிச்சல். நிறைய கர்ப்பிணிகள் இந்த பிரச்சனைக்கு பெரிதும் அவஸ்தைப்படுவார்கள். இந்த பிரச்சனை கர்ப்பமாக இருக்கும் போது சிலருக்கு ஆரம்பத்தில் மட்டும் ஏற்படும் இல்லையெனில் பிரசவம் வரைக்கும் கூட ஏற்படும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், பெண்களின் ஹார்மோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாக சுரப்பதே ஆகும். ஏனெனில் அவை வயிற்றிற்கும், உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள வால்வானது சரியாக இயங்காமல் போகிறது. இதனால், வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாய்க்கு வந்து, எரிச்சலை உண்டாக்குகிறது.
அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருக்கும் போது வாந்தி வருவதால், பெண்களால் எதையும் சரியாக சாப்பிட முடிவதில்லை. இதனால் அசிடிட்டி ஏற்பட்டு, நெஞ்சில் எரிச்சல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை நீக்குவதற்கு சூப்பரான சில பொருட்கள் மற்றும் செயல்கள் உள்ளன. அவற்றை சாப்பிட்டாலோ அல்லது செய்தாலோ, எரிச்சலை எளிதில் தடுக்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சையை ஜூஸ் போன்று செய்து குடித்தால், நெஞ்சு எரிச்சலை விரைவில் தடுக்கலாம்.

சூயிங் கம்
உண்மையில் சூயிங் கம் சாப்பிட்டால், அதனை மெல்லும் போது, வாயில் சுரக்கும் அதிகப்படியான எச்சிலானது, வயிற்றில் சென்று, அவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் ஆபத்தை தடுத்து, எரிச்சலைத் தடுக்கும்.

இஞ்சி
இஞ்சி ஒரு சிறந்த மருத்துவப் பொருள். இந்த இஞ்சியை பயன்படுத்தி பல ஆயுர்வேத மருந்துகள் செய்யப்படுகின்றன. அதிலும் இந்த மருந்துகள் அனைத்தும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்ததாக உள்ளது. எனவே இந்த இஞ்சி கர்ப்பிணிகளுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதற்கு அவர்கள் டீ போன்று, சூடான நீரில், சிறிது இஞ்சி மற்றும் சர்க்கரையை போட்டு கொதிக்க விட்டு, குடித்தால், நெஞ்சு எரிச்சலைத் தடுக்கலாம்.

பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தை கொஞ்சம் பாலில் சேர்த்து அதை நன்றாக காய்ச்சி நெஞ்சு எரிச்சலின் போது சாப்பி்ட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

தண்ணீர்
கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆகவே அவ்வப்போது எரிச்சல் ஏற்படும் போது சிறிது நீரைக் குடித்து வர எரிச்சல் சரியாகும். குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

உணவு மாற்றங்கள்
நெஞ்சு எரிச்சல் இருக்கும் போது, அதிகமான காரம் உள்ள உணவுகள், காப்பைன் உள்ள பானங்கள் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளால் ஏற்படுவதால், அவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அவ்வப்போது, ஏதேனும் ஜூஸை சிறிது சிறிதாக குடித்துக் கொண்டு இருந்தால், எரிச்சல் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











