Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
பெற்றோர்களே! உங்க குழந்தைகள் அறிவாளியா இருக்கவும் பேசவும் நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை சாதனையாளர்களாகவும் சிறந்தவர்களாகவும் தான் வளர்க்க ஆசைப்படுவார்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அவர்களின் பேச்சு மற்றும் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால், குழந்தைகள் வளரும்போதே, அவர்களின் பேச்சாற்றலை வளர்க்க பெற்றோர்கள் உதவ வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சிறந்த தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் சில குழந்தைகள் பேசும் திறனை மற்றவர்களை விட குறைவாகவோ அல்லது தாமதமாகவோ மட்டுமே பெறுகிறார்கள்.

பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளை முன்னேற அனுமதிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சியை மேம்படுத்த உதவும் சில பரிந்துரைகள் பற்றி இங்கே காணலாம்.
உரையாடலுக்கு சாதகமான சூழலை அமைக்கவும்
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையில் சாதகமான சூழ்நிலைகளை அமைக்க வேண்டும். அது உங்களுக்கு சாதகமாகத் தோன்றாவிட்டாலும், உங்கள் குழந்தைக்கு சாதகமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெரியவர்களிடம் விஷயங்களை கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளுக்கு அமைதியான சூழல் தேவைப்படுகிறது. தினமும் உங்கள் குழந்தையுடன் செலவிடும் நேரங்களில், அவர்களுடன் உரையாடலை மேற்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையுடன் விளையாடும்போதும் வீட்டுப்பாடம் செய்யும்போதும் உரையாடுங்கள்.
கேள்விக்கு பதிலளிக்க நேரம் கொடுங்கள்
குழந்தைகளுக்கு ஒரு தலைப்பைப் பற்றி புரிந்து கொள்ளவும், அதற்கான பதிலை தெரிவிக்கவும் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. அவர்கள் பதிலளிப்பதற்கான நேரம் கொடுத்து, பொறுமையாகக் காத்திருங்கள். உங்கள் குழந்தை அந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் அவர் பதிலளிக்கிறாரா என்பதைப் பார்க்க அவர்களுக்கு துப்பு கொடுங்கள்.
நீங்கள் கொடுக்கும் இந்த நேரங்கள் உங்கள் குழந்தையின் யோசிக்கும் திறனை வளர்க்க உதவும். அடிக்கடி குழந்தையை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர்கள் பதிலளிக்கலாம்.
திறந்த மனதுடன் உரையாட வேண்டும்
உங்கள் குழந்தைகள் ஒருபோதும் கேள்வியே கேட்கக்கூடாது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். குழந்தைகளுடன் திறந்த மனதுடன் உரையாடலை மேற்கொள்ளுங்கள். இது அவர்களின் கற்றலுக்கு உதவுவதாகவும், விமர்சன சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களின் வளர்ச்சியை வளர்க்கவும் அறியப்படுகிறது.
அதிக கருத்துகள் மற்றும் குறைவான கேள்விகள்
பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் தங்கள் அறிவைப் பற்றி குழந்தைகளிடம் பேசுவதும், வினாடி வினா கேட்பதும் இயல்பானது. அதிக கேள்வி கேட்பது மற்றும் கட்டளையிடுதல் போன்றவை குழந்தைகளின் கற்றல் திறனை பாதிக்கலாம்.
எல்லாவற்றிலும், கேள்விகள் இருப்பது மனித இயல்பு. ஆனால், குழந்தைகளிடம் அடிக்கடி கேட்பது தீங்கு விளைவிக்கும். அதிக கேள்வி கேட்பதற்கு பதிலாக, அவை என்ன என்ற கருத்துடன் உரையாடலைத் தொடங்க முயற்சிக்க வேண்டும்.
வார்த்தைகளைப் பயன்படுத்தி மகிழுங்கள்
நீங்கள் குழந்தைகளிடம் பேசும்போது அல்லது படிக்கும்போது உங்கள் பிள்ளையின் வார்த்தைப் புரிதலைச் சரிபார்த்து, அவற்றின் அர்த்தங்களையும் ஒலிகளையும் விவாதிப்பதன் மூலம் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்.
இதன் மூலம் அவர்கள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடியும். உதாரணமாக, ஒரு வார்த்தையின் ஆரம்ப ஒலிகள், ரைமிங் சொற்கள் மற்றும் பல அசைகள் பற்றி உங்கள் குழந்தையிடம் விசாரியுங்கள்.



Click it and Unblock the Notifications

