41 ஆண்டுகளுக்கு பின் விண்வெளிக்கு சென்று வரலாறு படைக்கும் இரண்டாவது இந்தியர் சுபன்ஷு சுக்லா... யார் தெரியுமா?

குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா புதன்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் செய்யத் தயாராக உள்ளார். அவர் புதன்கிழமை மதியம் 12:01 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) இன் ஒரு பகுதியாகப் புறப்பட போகிறார். இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நொடி அவர் இந்த சாதனைப் பயணத்தை தொடங்கி இருப்பார்.

ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்து கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா விண்வெளிக்குத் திரும்புவதை இந்த பயணம் குறிக்கிறது. ஷக்ஸ் என்று அழைக்கப்படும் சுபன்ஷு சுக்லா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் Ax-4 பயணத்தில் 14 நாள் அறிவியல் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புறப்படுவார்.

Shubhanshu Shukla In Space Great Milestone by Second Indian After 41 Years

Axiom Space-ன் திட்டம்

இந்த திட்டமானது, விண்வெளியை அணுகக்கூடியதாகவும், விண்வெளி பயணத்தை விலை குறைவானதாகவும் மாற்றவும், இறுதியில் பழைய சர்வதேச விண்வெளி நிலையத்தை மாற்றி விட்டு ஒரு தனியார் விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ள ஒரு தனியார் விண்வெளி நிறுவனமான Axiom Space-ன் ஒரு பகுதியாகும்.

மிஷன் பைலட்டாகப் பணியாற்றும் சுக்லா, SpaceX-ன் நம்பகமான டிராகன் விண்கலத்தில் பால்கன்-9 ராக்கெட்டில் ஏறி, இன்று பிற்பகல் 12:01 மணிக்கு இந்திய நேரப்படி திட்டமிடப்பட்ட லிஃப்ட்-ஆஃப்-க்காக பயணம் செய்யப்போகிறார்.

ஏவுதல் பணி தொடங்கப்பட்டது

பல்வேறு தாமதங்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மிஷனுக்கு, பல விண்வெளி பயணங்களை மேற்கொண்ட மூத்த அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமை தாங்குகிறார். ஜூலை மாதத்தில் விமானத்தின் சுமூகமான செயல்பாட்டிற்கும், மிஷனை வழிநடத்துவதற்கும், சுமூகமான ஏவுதல், டாக்கிங் மற்றும் ஸ்பிளாஷ் டவுன் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டதைத் தொடர்ந்து, டிராகன் விண்கலம் ஃபால்கன்-9 மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் விண்கலம் 28 மணி நேரத்திற்கும் மேலாக புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் பயணித்து, விண்வெளி நிலையத்தை அடைந்து, சீரமைத்து அதை இணைத்துக் கொள்ளும். புளோரிடாவிலிருந்து ஏவுதல் சரியான நேரத்தில் நடந்தால், ஜூன் 26 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு இணைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

சுக்லாவின் பொறுப்பு

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் தனது 14 நாள் பயணத்தின் போது, ​​நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட ஏழு இந்திய அறிவியல் ஆய்வுகளை வழிநடத்தும் பொறுப்பை சுக்லா வகிப்பார்.

ஆக்ஸியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4) இல் இந்தியாவின் பங்கேற்பு, இந்தியாவின் லட்சிய திட்டங்களில் ஒன்றான ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கும், விண்வெளியில் நிலையான இருப்புக்கான அதன் நீண்டகால பார்வைக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று இஸ்ரோவின் நுண் ஈர்ப்பு தளங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான குழுத் தலைவர் துஷார் பட்னிஸ், ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் ஆய்வுகள்

இந்தியா சார்பான ஏழு சோதனைகளில், விதை ஆய்வுகள் நுண் ஈர்ப்பு விசை முளைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராயும். மற்ற சோதனைகள், விண்வெளியில் மின்னணு காட்சிகளைப் பயன்படுத்தி டார்டிகிரேடுகளின் (நீர் கரடிகள்) உயிர்வாழும் வழிமுறைகள், தசை மீளுருவாக்கம் மற்றும் அறிவாற்றல் செயல்திறன் ஆகியவற்றை ஆராயும். எதிர்பாராமல் நீளும் பயணங்களின் போது விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் உடலியல் மற்றும் உளவியல் சவால்களைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வுகள் முக்கியமானவை.

சுக்லா விண்வெளியில் இருந்து பிரதமர் மோடியுடனும், பல இந்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுடனும் இரண்டு சமூக நல நிகழ்வுகளில் பேசுவார் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, June 25, 2025, 14:30 [IST]
Desktop Bottom Promotion