Just In
- 1 hr ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 6 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 7 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த 5 ராசி பெண்கள் நாடகமாடுவதில் கில்லாடிகளாம்..இவங்க நினைச்சத சாதிக்க என்ன வேணாலும் பண்ணுவாங்களாம்!
அனைத்து விஷ்யங்களுக்கும் ஓவராக உணர்ச்சிவசப்படுவது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். அனைத்திற்கும் ட்ராமா செய்யும் செயல்களைச் சமாளிக்க அனைவருக்கும் பொறுமை இல்லை.
அனைத்து விஷ்யங்களுக்கும் ஓவராக உணர்ச்சிவசப்படுவது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். அனைத்திற்கும் ட்ராமா செய்யும் செயல்களைச் சமாளிக்க அனைவருக்கும் பொறுமை இல்லை. அத்தகையவர்கள் தங்களைப் பற்றியே அனைவரும் சிந்திக்க வேண்டுமென்று இதனை செய்கிறார்கள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளை ஒருபோதும் கருத்தில் கொள்ள மாட்டார்கள்.
இந்த நபர்கள் எல்லா நேரங்களிலும் அனைவரின் கவனத்தையும் மையமாகக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். ஜோதிடம் பன்னிரண்டு இராசி அறிகுறிகளின் உதவியுடன் மக்கள் தங்கள் ஆளுமை எப்படி இருக்கிறது என்பதை தீர்மானிக்க எளிதாக்குகிறது. எனவே மிகப்பெரிய நாடக ராணிகளாக இருக்கும் பெண்கள் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்களாக என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
இவர்கள் தங்கள் கருத்துக்களை வைக்கும் போது மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள், ஆனால் அதில் நாடகத்தை சேர்க்காமல் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒரு சாதாரணமான சண்டையைக் கூட, ஒவ்வொரு சூழ்நிலையையும் பெரிய விவகாரமாக்க விரும்புகிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் ஏதேனும் சேதம் விளைவிப்பதற்கு, எல்லாவற்றையும் பெரிய பிரச்சினையாக மாற்றுவதற்கு முன் யாராவது இவர்களைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் இவர்கள் இருக்குமிடம் போர்க்களமாக மாறும்.
விருச்சிகம்
இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களைப் பற்றி இவர்கள் மற்றவர்களிடம் மிகவும் பெரிதாக நாடகத்தன்மையுடன் கூறுவார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படும் போது, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ஒழுங்கற்ற முறையில் அனைத்தையும் மழுங்கடிப்பார்கள். அவர்கள் பெரும்பாலான உண்மைகளை பெரிதுபடுத்த முனைகிறார்கள். இவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களையுமே மற்றவர்கள் சாதனையாக பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
MOST READ: இந்த 5 ராசிக்காரங்க உலகின் மிகச்சிறந்த கணவராக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கும்பம்
பொதுவாக, கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் இவர்கள் கோபமாக இருக்கும்போது, இவர்கள் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இது வரும்போது இவர்கள் மிகவும் கணிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே அதீத நாடகமிடும் கும்ப ராசிக்காரர்களை கையாள்வது மிகவும் கடினமானதாகும். காரணமே இல்லாமல் இவர்கள் நாடகமாடுவார்கள்.
கடகம்
இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது மிகவும் சோகமான மனநிலையுடன் இருப்பார்கள். இவர்கள் ஒரு கணம் நன்றாக செயல்படுகிறார்கள், ஆனால் அடுத்தவர் தங்கள் உணர்ச்சிகளுக்கு சரியாக பதிலளிக்காதபோது இவர்கள் ஒரு குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். கடக ராசிக்காரர்கள் நிராகரிப்புகள் ஏற்படும் போது சரியாக செயல்பட மாட்டார்கள், அப்போதுதான் நாடகம் அவர்களைப் பின்தொடர்கிறது.
MOST READ: பெண்கள் நீண்ட காலம் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் அவங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
சிம்மம்
இவர்கள் நாடகம் போடுவதில் மகாராணிகளாக இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கான கவனத்தை விரும்புகிறார்கள், ஏனென்றால் இவர்கள் சிறந்தவர்கள் என்ற உண்மையை இவர்கள் மிகவும் நம்புகிறார்கள். அவர்கள் மிகவும் வியத்தகு மற்றும் ஆணவம் மற்றும் அகங்காரத்துடன் விஷயங்களை மிகைப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த நாடகத்தை எல்லாம் தாண்டி இவர்கள் அதிக இரக்கமுள்ளவர்கள்.