Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
145 நாட்கள் மகரத்தில் இருக்கும் சனியால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...
மகர ராசியை அடைந்த வக்ர சனி மகரத்தில் 145 நாட்கள், அதாவது அக்டோபர் வரை இருப்பார். இந்த சனி இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவைத் திறக்கும்.

நவகிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சனியின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைக் கொடுப்பவராக கருதப்படுகிறார். அதாவது, நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நற்பலன்களையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு அசுப பலன்களையும் கொடுப்பவர் சனி பகவான்.

சனிப்பெயர்ச்சி 2022
சனி பகவான் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் பயணித்து வந்தார். ஆனால் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதன் பின் ஜூன் 05 ஆம் தேதி மகர ராசியை நோக்கி வக்ர நிலையில் பயணிக்க தொடங்கினார். பின்னர் ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி மகர ராசியை அடைந்தார். மகர ராசியை அடைந்த வக்ர சனி மகரத்தில் 145 நாட்கள், அதாவது அக்டோபர் வரை இருப்பார். இந்த சனி இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவைத் திறக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
ஜோதிடத்தின் படி, மகரத்தில் இருக்கும் வக்ர சனியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கும். மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உள்ளார். இது தொழில் மற்றும் வேலையின் வீடு. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் கூடும். புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் மற்றும் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.

மீனம்
மகரத்தில் சனியின் வருகையால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்குகிறது. ஏனெனில் மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் மீன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்களில் பணம் அதிகம் சம்பாதிப்பீர்கள். இக்காலத்தில் புதிய வணிக உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் நன்றாக இருக்கும். மறுபுறம் பணிபுரிபவர்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். இக்காலத்தில் வாகனம், சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள் மற்றும் அதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஏனெனில் தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உள்ளார். இந்த வீடு பணம் மற்றும் பேச்சின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே இக்காலத்தில் பங்குச் சந்தை மற்றும் ஊக லாட்டரிகளில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மார்கெட்டிங் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாகவும், சாதகமாகவும் இருக்கும். வாகனம் மற்றும் நிலம் வாங்குவதற்கு சாதகமான காலம். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளதால், ஆரோக்கியம் சற்று மோசமடைய வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கு, தனுசு ராசிக்காரர்கள் புஷ்பராக ரத்தின கல்லை அணியலாம்.



Click it and Unblock the Notifications