தீபாவளியன்று சாமி கும்பிடும்போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க... அதான் உங்களுக்கு நல்லது!

இந்தியாவின் மிகவும் பிரபலமான இந்து பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி மிக அருகில் வந்துவிட்டது. நரகாசுரனை அழித்து பூமியை காப்பாற்றியதை நினைவுகூறும் வகையில் இது கொண்டாடப்பட்டாலும், இந்த திருவிழா பெரிய நோக்கத்திற்காக கொண்டாடப்படு

இந்தியாவின் மிகவும் பிரபலமான இந்து பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி மிக அருகில் வந்துவிட்டது. நரகாசுரனை அழித்து பூமியை காப்பாற்றியதை நினைவுகூறும் வகையில் இது கொண்டாடப்பட்டாலும், இந்த திருவிழா பெரிய நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது, அது தீமையின் மீது நன்மையின் வெற்றியாகும்.

Things Should Not to For Diwali Puja in Tamil

இந்த நாளில் லட்சுமி பூஜை செய்பவர்கள் ஆண்டு முழுவதும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது, இருப்பினும் லட்சுமி பூஜைக்கு வரும்போது, ​​​​நீங்கள் செய்யக்கூடாதவைகளும் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசியை வணங்குவது

துளசியை வணங்குவது

விஷ்ணுவின் மறு அவதாரமான ஷாலிகிராமுடன் துளசி திருமணம் செய்து கொண்டார் என்றும், விஷ்ணுவும் லட்சுமியும் கணவன்-மனைவியாக இருப்பதால், லட்சுமி தேவியை வணங்கும் போது துளசியை வணங்கக் கூடாது என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்வது தேவியின் கோபத்தைத் தூண்டும். இருப்பினும், விஷ்ணு பூஜை மற்றும் மற்ற அனைத்து வகையான பூஜைகளின் போது துளசியை சேர்த்துக்கொள்ளலாம்.

பூக்களின் நிறம்

பூக்களின் நிறம்

லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற பூக்களை அர்ப்பணிக்க கூடாது. லக்ஷ்மி தேவி திருமணமான பெண் மற்றும் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற பூக்களை மட்டுமே அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். லட்சுமி சிலையை வெள்ளை நிற விரிப்பில் வைக்கக் கூடாது. உண்மையில், சனி பகவானைத் தவிர அனைத்து கடவுள்களையும் பிரார்த்தனை செய்யும் போது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.

விஷ்ணுவை வழிபட வேண்டும்

விஷ்ணுவை வழிபட வேண்டும்

லக்ஷ்மி தேவியை வணங்கும் போது பகவான் விஷ்ணுவை எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். விஷ்ணுவும், லக்ஷ்மியும் கணவன்-மனைவி என்பதால், லக்ஷ்மி தேவியை வணங்கும் போது அவர்களை எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயக-லட்சுமி பூஜை முடிந்தவுடன் விஷ்ணுவை வணங்கலாம்.

தெற்கு திசை

தெற்கு திசை

பூஜை முடிந்ததும், பூஜையறையின் தெற்கு திசையில் பிரசாதத்தை வைக்கவும். பின்னர் நீங்கள் பூஜையறையின் சரியான திசையில் அனைத்து பூக்களையும் வைக்க வேண்டும். இதுமட்டுமின்றி, தீபாவளி கொண்டாடுவதற்கு முன், குடும்பத்தில் உள்ள அனைவரும் பிரசாதம் சாப்பிட்டு, விநாயக-லட்சுமி பூஜையில் பங்கேற்க வேண்டும். தீபாவளி அன்று என்னென்ன செய்ய வேண்டுமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கோலம்

கோலம்

ரங்கோலி என்பது வெறும் அலங்காரம் அல்ல, உங்கள் வீட்டில் அழகான கோலமிடுவது உங்கள் வீட்டிற்கு செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. எனவே மறக்காமல் உங்கள் வீட்டு வாசலை கோலத்தால் அலங்கரியுங்கள்.

தானம் செய்யுங்கள்

தானம் செய்யுங்கள்

இந்த தீபாவளியை உங்களுக்கானதாக மட்டுமல்லாமல் முடிந்தவரை மற்றவர்களுக்கும் சிறப்பானதாக மாற்றுங்கள். இந்த தீபாவளிக்கு ஏழைகளுக்கு ஒரு போர்வை, சில இனிப்புகள் அல்லது சில தானங்களை செய்யுங்கள். இது உண்மையிலேயே உங்கள் நாளை சிறப்பானதாக மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion