Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தீபாவளியன்று சாமி கும்பிடும்போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க... அதான் உங்களுக்கு நல்லது!
இந்தியாவின் மிகவும் பிரபலமான இந்து பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி மிக அருகில் வந்துவிட்டது. நரகாசுரனை அழித்து பூமியை காப்பாற்றியதை நினைவுகூறும் வகையில் இது கொண்டாடப்பட்டாலும், இந்த திருவிழா பெரிய நோக்கத்திற்காக கொண்டாடப்படு
இந்தியாவின் மிகவும் பிரபலமான இந்து பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி மிக அருகில் வந்துவிட்டது. நரகாசுரனை அழித்து பூமியை காப்பாற்றியதை நினைவுகூறும் வகையில் இது கொண்டாடப்பட்டாலும், இந்த திருவிழா பெரிய நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது, அது தீமையின் மீது நன்மையின் வெற்றியாகும்.

இந்த நாளில் லட்சுமி பூஜை செய்பவர்கள் ஆண்டு முழுவதும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது, இருப்பினும் லட்சுமி பூஜைக்கு வரும்போது, நீங்கள் செய்யக்கூடாதவைகளும் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

துளசியை வணங்குவது
விஷ்ணுவின் மறு அவதாரமான ஷாலிகிராமுடன் துளசி திருமணம் செய்து கொண்டார் என்றும், விஷ்ணுவும் லட்சுமியும் கணவன்-மனைவியாக இருப்பதால், லட்சுமி தேவியை வணங்கும் போது துளசியை வணங்கக் கூடாது என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்வது தேவியின் கோபத்தைத் தூண்டும். இருப்பினும், விஷ்ணு பூஜை மற்றும் மற்ற அனைத்து வகையான பூஜைகளின் போது துளசியை சேர்த்துக்கொள்ளலாம்.

பூக்களின் நிறம்
லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற பூக்களை அர்ப்பணிக்க கூடாது. லக்ஷ்மி தேவி திருமணமான பெண் மற்றும் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற பூக்களை மட்டுமே அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். லட்சுமி சிலையை வெள்ளை நிற விரிப்பில் வைக்கக் கூடாது. உண்மையில், சனி பகவானைத் தவிர அனைத்து கடவுள்களையும் பிரார்த்தனை செய்யும் போது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.

விஷ்ணுவை வழிபட வேண்டும்
லக்ஷ்மி தேவியை வணங்கும் போது பகவான் விஷ்ணுவை எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். விஷ்ணுவும், லக்ஷ்மியும் கணவன்-மனைவி என்பதால், லக்ஷ்மி தேவியை வணங்கும் போது அவர்களை எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயக-லட்சுமி பூஜை முடிந்தவுடன் விஷ்ணுவை வணங்கலாம்.

தெற்கு திசை
பூஜை முடிந்ததும், பூஜையறையின் தெற்கு திசையில் பிரசாதத்தை வைக்கவும். பின்னர் நீங்கள் பூஜையறையின் சரியான திசையில் அனைத்து பூக்களையும் வைக்க வேண்டும். இதுமட்டுமின்றி, தீபாவளி கொண்டாடுவதற்கு முன், குடும்பத்தில் உள்ள அனைவரும் பிரசாதம் சாப்பிட்டு, விநாயக-லட்சுமி பூஜையில் பங்கேற்க வேண்டும். தீபாவளி அன்று என்னென்ன செய்ய வேண்டுமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கோலம்
ரங்கோலி என்பது வெறும் அலங்காரம் அல்ல, உங்கள் வீட்டில் அழகான கோலமிடுவது உங்கள் வீட்டிற்கு செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. எனவே மறக்காமல் உங்கள் வீட்டு வாசலை கோலத்தால் அலங்கரியுங்கள்.

தானம் செய்யுங்கள்
இந்த தீபாவளியை உங்களுக்கானதாக மட்டுமல்லாமல் முடிந்தவரை மற்றவர்களுக்கும் சிறப்பானதாக மாற்றுங்கள். இந்த தீபாவளிக்கு ஏழைகளுக்கு ஒரு போர்வை, சில இனிப்புகள் அல்லது சில தானங்களை செய்யுங்கள். இது உண்மையிலேயே உங்கள் நாளை சிறப்பானதாக மாற்றும்.



Click it and Unblock the Notifications