Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
சாஸ்திரங்களின் படி திருமணமானவர்கள் வாரத்தின் இந்த 3 நாட்களில் உடலுறவு கொள்ளக்கூடாதாம் ஏன் தெரியுமா?
கர்ப்ப சன்ஸ்காரம் ஒரு குழந்தையின் மீது சாதகமற்ற நேரம் ஏற்படுத்தும் விளைவையும், குழந்தையின் மனநிலை, மனநலம் மற்றும் பல உள்ளிட்ட சில அதிர்ச்சியூட்டும் விளைவுகளை அது எவ்வாறு தூண்டும் என்பதையும் விவாதிக்கிறது.
இந்து மதத்தில், ஒரு ஆன்மாவின் பயணம் பிறக்காத கருவில் நுழையும் நேரத்திலிருந்து தொடங்குகிறது, மேலும் அதன் கல்வியும். கர்ப்ப சன்ஸ்காரத்தின்படி, கருவறையில் கரு உருவான காலத்திலிருந்தே பொருள், மரபு மற்றும் உலகியல் குணங்களை வழங்குவது பொருத்தமானதாக இருக்க வேண்டும். சாஸ்திரங்களின் படி, கருவை உருவாக்குவது பொருத்தமான நேரத்தில் இருப்பது அவசியம் என்றும், இந்த உலகத்திற்கு ஒரு உயிரை கொண்டு வருவதற்கு முன் தம்பதிகள் முழு சிந்தனையை நம்பியிருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகிறது.

குழந்தைகளின் உபநயனம், அன்னப்ராஷணம், முண்டன், நாமகரணம், திருமணம் என எல்லாவற்றுக்கும் எப்போதும் ஒரு மங்களகரமான காலமும் நேரமும் உண்டோ அதேபோல அவர்கள் உருவாவதற்கும் பொருத்தமான காலநேரம் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் சந்தர்ப்பத்தில், அவர்கள் ஒரு நல்ல நேரத்தில் கருத்தரிக்கப்படுவது மிகவும் முக்கியம்.

கர்ப்ப சன்ஸ்காரம்
கர்ப்ப சன்ஸ்காரம் ஒரு குழந்தையின் மீது சாதகமற்ற நேரம் ஏற்படுத்தும் விளைவையும், குழந்தையின் மனநிலை, மனநலம் மற்றும் பல உள்ளிட்ட சில அதிர்ச்சியூட்டும் விளைவுகளை அது எவ்வாறு தூண்டும் என்பதையும் விவாதிக்கிறது.

புனித நூல்கள்
ஒரு சில இந்து புனித நூல்களில், நம்பிக்கைக்குரிய (தேதி மற்றும் நேரம்) மற்றும் சாதகமற்ற (தேதி மற்றும் நேரம்) காலங்கள் இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன, அவை சில நோக்கங்களுக்காக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும். குழந்தை பெற விரும்புக்குறவர்கள் குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்லது. அது என்னென்ன நாட்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

செவ்வாய்
வேதங்களின்படி, இந்த நாள் கருத்தரிப்பதற்கு ஏற்றதாகக் கருதப்படுவதில்லை, ஏனெனில் இந்த நாளை ஆளும் கிரகம் செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு நல்லதாக கருதப்படவில்லை. இந்த நாளில் கருவுற்ற ஒரு குழந்தை, கொடூரமான மற்றும் வன்முறையான இயல்புடையதாக வளர்கிறது, மேலும் அவர்களின் பிற்கால வாழ்க்கையில் வெற்றிகளை அடைவதில் நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிடும்.

சனிக்கிழமை
சாஸ்திரங்களின்படி, கருத்தரிப்பதற்கு இந்த நாள் சாதகமற்றது. இந்த நாளை ஆளும் கிரகம் சனி, இது சிறு வயதிலிருந்தே குழந்தைக்கு அவநம்பிக்கையைத் தூண்டுகிறது. மேலும், குழந்தை உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

ஞாயிறு
தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்குவதற்காக, அதாவது தங்கள் சந்ததியினரைத் திட்டமிடுவதற்காக இந்த நாளைத் தவிர்க்க வேண்டும் என்று பண்டைய வேதங்கள் எச்சரிக்கின்றன. இந்த நாளை ஆளும் கிரகம் சூரியன் மற்றும் சாஸ்திரங்களின்படி, இந்த நாள் முழுவதுமாக சூரியனை வணங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை உருவாகும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்?
ஞாயிற்றுக்கிழமை உருவாகும் குழந்தைகள் சூரியனின் சக்தியின் பிரகாசமான செல்வாக்கு கட்டுப்பாடற்ற கோபம், உடலில் வெப்பம் தொடர்பான வியாதிகள் மற்றும் குழந்தையின் பலவீனமான சுயமரியாதையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் அசுரர்களுக்கு இருக்கும் குணமாகும்.

சுப நாட்கள்
குழந்தை உருவாக திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகியவை மிகவும் மங்களகரமானவை என்று சாஸ்திரங்கள் மற்றும் ஜோதிடம் இரண்டும் விளக்குகின்றன. இந்த நாட்களில் பிறந்தவர்கள் அல்லது கருத்தரித்தவர்கள் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையுடனும், வெற்றியை ஈர்ப்பவர்களாகவும் வளர்கிறார்கள்.



Click it and Unblock the Notifications