Just In
- 2 hrs ago
வார ராசிபலன் (28.02.2021 முதல் 06.03.2021 வரை) – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…
- 13 hrs ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- 14 hrs ago
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
Don't Miss
- News
சரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன?.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா?
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா?
" வினை தீர்க்கும் விநாயகன் " என்று பிள்ளையாரை கூற காரணம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் கடவுளாக பிள்ளையார் இருப்பதுதான். இந்து மதத்தை பொறுத்தவரை மக்கள் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது விநாயகர்தான். பிள்ளையாரை வழிபடுவதோ அவரின் ஆசீர்வாதத்தை பெறுவதோ மிகவும் எளிமையான ஒன்றாகும்.
இந்து மதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும் சரி, சுபகாரியமாக இருந்தாலும் சரி விநாயகர் இல்லாமலோ அவரை வணங்காமலோ செய்ய முடியாது. தனது அருள் மூலம் நமக்கு தேவையானவற்றை செய்து தர இவர் எப்போதும் தயராய் இருப்பார். விநாயகரை வழிபடுவதற்கு அவருக்கு மிகவும் பிடித்தவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் விநாயகர் அதிகம் விரும்பும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பிள்ளையாரை ஈர்ப்பது எப்படி?
பிள்ளையாரை ஈர்ப்பதற்கு பல வழிகள் இருக்கிறது அதில் மிகவும் எளிதான வழி என்னவென்றால் புதன் கிழமையில் கொழுக்கட்டைகளை வைத்து பிள்ளையாரை வழிபடுவதுதான். அனுமன் மற்றும் பைரவரை போல பிள்ளையாருக்கும் குங்குமம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தெரியுமா உங்களுக்கு?

ஏன் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்?
புதன் கிழமையில் பிள்ளையாரை குங்குமம் வைத்து வழிபடுவது உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும், வலிகளில் இருந்தும் விடுதலை அளிக்கும்.

குங்குமம் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
காலையில் எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற ஆடையணிந்து பிள்ளையாருக்கு குங்குமம் வைத்து வழிபடுவது உங்களுடைய வேண்டுதல்களின் மீது நல்ல பலனை தரும்.

நெய் அல்லது மல்லிகை எண்ணெய்
குங்குமத்தை நெய் அல்லது மல்லிகை எண்ணெயில் கலந்து அதனை வெள்ளி அல்லது தங்க நாணயத்தில் வைத்து பிள்ளையாரின் மீது வைக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்க்காது உங்களின் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தையும் வழங்கும். பிள்ளையாரின் அருளை பெற உதவும் மற்ற பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

எருக்கை மலர்
எருக்கை மலர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கும் சக்தி உள்ளது. பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து வழிபடுபவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

சங்கு
இந்து மதத்தின் ஒரு முக்கிய பகுதியாக சங்கு விளங்குகிறது. இதன் ஒலியானது கடவுளின் மீது உண்மையான பக்தியை எழுப்பக்கூடும். பிள்ளையாரும் தன் கையில் சங்கை வைத்திருப்பார். பிள்ளையார் பூஜையின் போது சங்கு ஒலிப்பது நல்லதாகும்.

வாழைப்பழம்
அந்ததந்த பருவகாலத்தில் கிடைக்கும் எந்த பழத்தை வேண்டுமென்றாலும் விநாயகருக்கு வைத்து வழிபடலாம் ஆனால் பிள்ளையாருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும், வாழை இலையும் மிகவும் பிடிக்கும்.

வெள்ளை மலர்கள்
பிள்ளையாருக்கு வெள்ளை நிற மலர்களை வைத்து வழிபடுவது வெற்றியையும், புகழையும் சேர்க்கும். செம்பருத்தி பூவை வைத்து கூட பிள்ளையாரை வழிபடலாம். ஏனெனில் பிள்ளையாருக்கு இதுவும் மிகவும் பிடித்த மலராகும்.

அருகம்புல்
பிள்ளையாருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் குழந்தை வரத்தை வழங்கும். அருகம்புல் அல்லது மலர்கள் வைத்து வழிபடும்போது புஷ்பாஞ்சலி மந்திரத்தை கூறி வழிபட்டால் பிள்ளையார் உங்களின் அனைத்து கடந்த கால தவறுகளையும் மன்னித்து விடுவார்.