Just In
- 1 hr ago 10 நிமிடத்தில் கடப்பா கார சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago Today Rasi Palan 26 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுப்பது நல்லது..
- 9 hrs ago மேஷ ராசியில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாத தொடக்கம் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago இதுல உங்க நெற்றி எந்த மாதிரி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
Don't Miss
- Sports IPL மறக்க முடியுமா- 49 ரன்னில் ஆல் அவுட் ஆன ஆர்சிபி.. கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Movies Kiran - என்னது இணையத்தில் விபசாரம் செய்கிறேனா?.. பார்ன் படம் எல்லாம் செய்யவில்லை.. ஓபனாக பேசிய கிரண்
- News எப்படி இருக்கீங்க! காய்கறி வியாபாரம் எப்படியிருக்கு? தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு முதல்வர் விசிட்
- Technology வெளுத்துக்கட்டுது ஆர்டர்.. ரூ.20000 போதும்.. QUAD கேமரா.. 3D டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance SBI வாடிக்கையாளரா நீங்க? புதிய கட்டணம்.. இத படிக்காம ஏடிஎம் பக்கம் போகாதீங்க
- Automobiles ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய இந்த கார்ய சித்தி மந்திரத்தை கூறி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்
பொதுவாக சாதாரணமாக ஆஞ்சனேயரை வணங்கினாலே அவர் எளிதில் மனமிறங்கிவிடுவார். அதிலும் அவருக்கு பிடித்த முறையில் வழிபடும்போது உங்கள் மீதான அவரின் கருணை பன்மடங்கு அதிகரிக்கும்.
அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு கடவுள் என்றால் அது ஆஞ்சநேயர்தான். இராமனின் பக்தனான வாயுபுத்திரன் அனுமன் செய்த சாகசங்களுக்கும், அவரின் ஆற்றலுக்கும் எல்லையே இல்லை. இன்றும் இவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். கடவுள்களிலேயே மிகவும் எளிதில் மனமிறங்கி அருள்புரியும் கடவுள் என்றால் அது அனுமன்தான்.
பொதுவாக சாதாரணமாக ஆஞ்சனேயரை வணங்கினாலே அவர் எளிதில் மனமிறங்கிவிடுவார். அதிலும் அவருக்கு பிடித்த முறையில் வழிபடும்போது உங்கள் மீதான அவரின் கருணை பன்மடங்கு அதிகரிக்கும். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த நிறம் சிவப்புதான். எனவே அவரை வழிபடும்போது சிவப்பு வண்ண பூக்களை கொண்டு வழிபடுங்கள். மந்திரங்கள் என்று வரும்போது பல ஆஞ்சநேய மந்திரங்கள் இருந்தாலும் ஒருசில மந்திரங்கள் ஆஞ்சநேயரை அதிகம் ஈர்க்கும். அதில் ஒன்றுதான் கார்ய சித்தி மந்திரம். அந்த மந்திரத்தின் மகிமையையும், அர்த்தத்தத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிகளை வழங்கும் கார்ய சித்தி மந்திரம்
மிகசக்தி வாய்ந்த கடவுள்களில் ஒருவரான அனுமன். வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் உயரத்தை விட அதிகளவு உயரத்தை அடைய ஆஞ்சநேயரைதான் வணங்கவேண்டும். இந்த மந்திரங்கள் கூறி ஆஞ்சநேயரை வழிபடுவது வளர்ச்சி மட்டுமின்றி தன்னிறைவு, ஒழுக்கம் போன்றவற்றையும் வழங்கும். அனுமனே மிகப்பெரிய பக்தனாக இருப்பதால் தன்னுடைய பக்தர்களின் வேண்டுதல்களை எளிதில் புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்.
கார்ய சித்தி பொருள்
கார்ய என்பதன் பொருள் முயற்சி சித்தி என்பதன் பொருள் தன்னிறைவு அல்லது வெற்றி. ஒரு முயற்சியில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினால் உங்கள் முயற்சியுடன் சேர்த்து இந்த மந்திரத்தையும் கூறுவது உங்கள் வெற்றியின் வாய்ப்பை அதிகரிக்கும். உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கார்ய சித்தி மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூற சிறப்பான நாள் என்றால் அது சனிக்கிழமைதான்.
எப்படி கூற வேண்டும்?
உங்கள் முயற்சிகளை மேலும் கடுமையாக்கவும், வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கவும் சனிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஆஞ்சநேயர் முன் அமர்ந்து கூறுங்கள். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லவும். ஆஞ்சநேயர் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை கூறவும். இதனை 40 நாட்கள் தொடர்ந்து செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது நீங்கள் சனிக்கிழமைகளில் அதிக வெற்றியை பெறுவதை நீங்களே உணர்வீர்கள்.
கார்ய சித்தி மந்திரம் 1
முதல் மந்திரமான இது உங்கள் எதிரிகளை சமாளித்து வெற்றியை ஈட்ட உதவும். உங்களுக்கு தொடர்ந்து யாரேனும் தொல்லை கொடுத்து வந்தால், அந்த தொல்லையிலிருந்து தப்பிக்கவும், அவர்களை சமாளிக்கவும் இந்த மந்திரத்தை கூறி வழிபடுங்கள்.
" த்வாமாஸ்மின் கார்ய நிர்யோக - பிரமாணம் ஹரி சத்மா - ஹனுமான் யத்னமாஸ்தாய - துக்க காய கரூ பவா "
MOST
READ:
தன்
வாயாலேயே
தங்களை
டேமேஜ்
செய்துக்
கொண்ட
பிரபலங்கள்-
2018
#Top10
மந்திரத்தின் பொருள்
இந்த மந்திரத்தை ஒருபோதும் உங்கள் எதிரிகளை அழிக்க வேண்டும் என்று உபயோகிக்காதீர்கள். அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்து வெளியேற மட்டும் வேண்டுங்கள் மீதியை ஆஞ்சநேயர் பார்த்துக்கொள்வார். சுயநலமில்லாமல் நீங்கள் செயல்படும்போது நீங்கள் வெற்றியை நெருங்கிவிடுவீர்கள், உங்கள் எதிரிகள் உங்கள் பாதையிலிருந்து தானாக விலகிவிடுவார்கள்.
கார்ய சித்தி மந்திரம் 2
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பல தடைகள் இருக்கும்போது நமது வெற்றிக்கு பல பிரச்சினைகளும், இடையூறுகளும் இருக்கும். எப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கிறீர்களோ அப்போது இந்த மந்திரத்தை கூறி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.
மந்திரத்தின் சிறப்புகள்
இந்த மந்திரத்தின் கூடுதல் சிறப்பு என்பது இந்த மந்திரத்தை முதல் முதலாக கூறியது சீதைதான். இராவணன் பிடியில் சிக்கியிருக்கும்போது வாழ்க்கையின் முக்கியமான இடத்தில் தடைபட்ட சீதாதேவி இராமபிரானை நினைத்து இந்த மந்திரத்தை கூறினார். இந்த மந்திரத்தை கூறிய சில நாட்களில்தான் இராமயண போர் ஏற்பட்டு இராவணன் அழிக்கப்பட்டு சீதை விடுவிக்கப்பட்டார்.
" அசாத்ய சாதக ஸ்வாமின் - அசாத்யம் தவா கிம் வடா - ராம தூதா கிருப சிந்தோ - மட் கார்யம் சாத்ய பிரபோ "
கார்ய சித்தி மந்திரம் 3
உங்களிடம் இருக்கும் பணபலம், அறிவுபலம் , ஆள்பலம் என அனைத்தும் கொடுக்க முடியாத வெற்றியை உங்களுக்கு தெய்வ பழம் கொடுக்க இயலும். நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் அனுமனின் அனுகிரகம் கிடைக்க இந்த மந்திரத்தை கூறி வழிபடுங்கள். இந்த மந்திரத்தை கூறி உங்கள் முயற்சிகளை செய்யும்போது அனுமனே உங்கள் உடனிருப்பது போன்ற தன்னம்பிக்கை உங்களுக்குள் எழும்.
" அரே டூ சல் சல் ஹனுமன் சல் ஆர் நா சாலே டு துஜஹே ராம்கி ஆன் "