For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழை வெள்ளத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கடந்த வாரம் பெருமழையினால் அவதிப்பட்டு வந்த மும்பையில் பெண்ணொருவர் சந்தித்தப் பிரச்சனை தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

|

பெருமழை பாதிப்பிலிருந்து மும்பை நகரம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் வெள்ள பாதிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்த பெண்ணை மும்பை வாசிகள் செய்த செயல் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் வீட்டிலிருந்து காரில் வெளியேறிய குஷ்னுமா என்னும் பெண்மணி வீட்டை விட்டு சிறிது தூரம் வந்ததும் சாலையில் அதிக நீர் இருந்ததால் அங்கிருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அப்பார்ட்மெண்ட்வாசிகள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடும் மழை :

கடும் மழை :

மும்பையில் பணிபுரியும் குஷ்னுமா கடந்த வாரம் கடும் மழையில் சிக்கிக் கொண்டார். சாலையில் அதிகமான நீர் இருந்ததாலும், அந்த தண்ணீர் வற்றியபிறகே காரை செலுத்த முடியும் என்பதால் காருடன் அங்கிருக்கும் ஓர் அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அப்பார்ட்மெண்ட் வாசி :

அப்பார்ட்மெண்ட் வாசி :

இவர் காருடன் உள்ளே நுழைவதைப் பார்த்த அந்த அப்பார்ட்மெண்ட் வாசி ஒருவர், சத்தம் போட்டு வெளியேறுமாறு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அத்துடன் காரின் டயரை பஞ்சர் செய்தும், அப்பார்ட்மெண்ட் கதவினை மூடியும் இங்கிருந்து வெளியேற முடியாது என்றும் மிரட்டியுள்ளார்.

பயம் :

பயம் :

இதனால் பயந்து போன குஷ்னுமா காரின் சாவியை அவர்களிடமே கொடுத்து விட்டு வெளியேற நினைத்த போது தான் அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு நபர் விசாரித்து ஆறுதல் சொல்லியுள்ளார் அத்துடன் உதவ முன்வந்துள்ளார். அவரைப்பார்த்து இன்னும் சிலரும் உதவ முன்வந்துள்ளனர்.

Image Courtesy

சென்னை வெள்ளம் :

சென்னை வெள்ளம் :

சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து கொண்டு மனிதத்துடன் செயல்பட்ட அதே நேரத்தில் மும்பையில் நடைப்பெற்ற இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

https://www.facebook.com/596803661/videos/10156542814833662/

Read more about: insync pulse
English summary

Shocking! A woman has been insulted by other Mumbaikars

Shocking! A woman has been insulted by other Mumbaikars
Desktop Bottom Promotion