Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
மழை வெள்ளத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
கடந்த வாரம் பெருமழையினால் அவதிப்பட்டு வந்த மும்பையில் பெண்ணொருவர் சந்தித்தப் பிரச்சனை தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
பெருமழை பாதிப்பிலிருந்து மும்பை நகரம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் வெள்ள பாதிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்த பெண்ணை மும்பை வாசிகள் செய்த செயல் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் வீட்டிலிருந்து காரில் வெளியேறிய குஷ்னுமா என்னும் பெண்மணி வீட்டை விட்டு சிறிது தூரம் வந்ததும் சாலையில் அதிக நீர் இருந்ததால் அங்கிருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அப்பார்ட்மெண்ட்வாசிகள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடும் மழை :
மும்பையில் பணிபுரியும் குஷ்னுமா கடந்த வாரம் கடும் மழையில் சிக்கிக் கொண்டார். சாலையில் அதிகமான நீர் இருந்ததாலும், அந்த தண்ணீர் வற்றியபிறகே காரை செலுத்த முடியும் என்பதால் காருடன் அங்கிருக்கும் ஓர் அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அப்பார்ட்மெண்ட் வாசி :
இவர் காருடன் உள்ளே நுழைவதைப் பார்த்த அந்த அப்பார்ட்மெண்ட் வாசி ஒருவர், சத்தம் போட்டு வெளியேறுமாறு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அத்துடன் காரின் டயரை பஞ்சர் செய்தும், அப்பார்ட்மெண்ட் கதவினை மூடியும் இங்கிருந்து வெளியேற முடியாது என்றும் மிரட்டியுள்ளார்.

பயம் :
இதனால் பயந்து போன குஷ்னுமா காரின் சாவியை அவர்களிடமே கொடுத்து விட்டு வெளியேற நினைத்த போது தான் அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு நபர் விசாரித்து ஆறுதல் சொல்லியுள்ளார் அத்துடன் உதவ முன்வந்துள்ளார். அவரைப்பார்த்து இன்னும் சிலரும் உதவ முன்வந்துள்ளனர்.

சென்னை வெள்ளம் :
சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து கொண்டு மனிதத்துடன் செயல்பட்ட அதே நேரத்தில் மும்பையில் நடைப்பெற்ற இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/596803661/videos/10156542814833662/



Click it and Unblock the Notifications