Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
மழை வெள்ளத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
கடந்த வாரம் பெருமழையினால் அவதிப்பட்டு வந்த மும்பையில் பெண்ணொருவர் சந்தித்தப் பிரச்சனை தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
பெருமழை பாதிப்பிலிருந்து மும்பை நகரம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் வெள்ள பாதிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்த பெண்ணை மும்பை வாசிகள் செய்த செயல் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் வீட்டிலிருந்து காரில் வெளியேறிய குஷ்னுமா என்னும் பெண்மணி வீட்டை விட்டு சிறிது தூரம் வந்ததும் சாலையில் அதிக நீர் இருந்ததால் அங்கிருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அப்பார்ட்மெண்ட்வாசிகள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடும் மழை :
மும்பையில் பணிபுரியும் குஷ்னுமா கடந்த வாரம் கடும் மழையில் சிக்கிக் கொண்டார். சாலையில் அதிகமான நீர் இருந்ததாலும், அந்த தண்ணீர் வற்றியபிறகே காரை செலுத்த முடியும் என்பதால் காருடன் அங்கிருக்கும் ஓர் அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அப்பார்ட்மெண்ட் வாசி :
இவர் காருடன் உள்ளே நுழைவதைப் பார்த்த அந்த அப்பார்ட்மெண்ட் வாசி ஒருவர், சத்தம் போட்டு வெளியேறுமாறு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அத்துடன் காரின் டயரை பஞ்சர் செய்தும், அப்பார்ட்மெண்ட் கதவினை மூடியும் இங்கிருந்து வெளியேற முடியாது என்றும் மிரட்டியுள்ளார்.

பயம் :
இதனால் பயந்து போன குஷ்னுமா காரின் சாவியை அவர்களிடமே கொடுத்து விட்டு வெளியேற நினைத்த போது தான் அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு நபர் விசாரித்து ஆறுதல் சொல்லியுள்ளார் அத்துடன் உதவ முன்வந்துள்ளார். அவரைப்பார்த்து இன்னும் சிலரும் உதவ முன்வந்துள்ளனர்.

சென்னை வெள்ளம் :
சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து கொண்டு மனிதத்துடன் செயல்பட்ட அதே நேரத்தில் மும்பையில் நடைப்பெற்ற இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/596803661/videos/10156542814833662/



Click it and Unblock the Notifications