Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
இப்படி ஒரு ஜெயில் இருந்தா, 4 கொலை, 5 கொள்ளை-னு சாதாரணமா செஞ்சுட்டு போவாயிங்க!
நார்வே பாஸ்டாய் சிறைசாலை, உலகின் முதல் சுற்றுசூழலியல் சிறை
இப்படி ஒரு ஜெயில் இருந்தா, யார் வேண்டுமானாலும் நாலு கொலை, ஐந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட விரும்புவார்கள். ஓரிரு ஆண்டுகள் தண்டனை பெற்று உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நார்வே பாஸ்டாய் சிறைக்கு தான் சென்று வர வ்நெடும்.
ஆம், ஒரு காலத்தில் கொடூரமான சிறைசாலை என பெயர்பெற்று, கிளர்ச்சி உண்டாகி மூடப்பட்ட சிறைசாலை. இப்போது உலகின் உல்லாச, தாராளவாத சிறையாக மாறியுள்ளது...

சிறைசாலை வரலாறு!
இந்த சிறைசாலை ஒரு காலத்தில் மிகவும் கொடூரமானதாக திகழ்ந்து வந்தது. பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற வழக்கில் சிக்கியவர்களுக்கு இந்த சிறையில் தான் தண்டனை வழங்கப்படும்.

1915-ல்
1915-ல் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் சிறைசாலை கொடுமைகளை எதிர்த்து கிளர்ச்சி உண்டாக்கினர். அவர்கள் இந்த இடத்தை விட்டு தப்பிக்க முயற்சித்தனர்.
இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இந்த தீவிற்கு இராணுவம் அனுப்பப்பட்டது. பிறகு 1953-ல் இது முழுமையாக மூடப்பட்டது. அதன்பின் 1970-ல் அரசே இந்த இடத்தை கையகப்படுத்தி கொண்டது.
1982ல்!
பிறகு 115 கைதிகள் கொள்ளளவுடன் இந்த சிறை மீண்டும் 1982ல் புதிதாக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும், உலகிலேயே தாராளவாத நிலை கொண்ட சிறை என்ற பெயரும் பெற்றது.

தனித்தன்மை!
இந்த சிறைக்கென நிறைய தனித்தன்மை இருக்கின்றன. டிவி, சமையலறை, படுக்கையறை தினமும் காலை எழுந்தால் 8.30 முதல் மாலை 3.30 வரை வேலை.

விளையாட்டுகள்!
இங்கே சிறைசாலையில் அடைப்பட்டு இருக்கும் கைதிகள் பொழுதை கழிக்க, குதிரை ஏற்றம், மீன் பிடித்தல், டென்னிஸ், ரன்னிங், நீச்சல், ப்ரைவேட் பீச் என பல வசதிகள் இருக்கின்றன.

பாதுகாவலர்கள்!
இந்த சிறையை பாதுகாக்க வெறும் ஐந்தே பாதுகாவலர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இங்கே கைதிகளுக்கு யூனிபார்ம் கிடையாது.
சிறையை சுற்றி தடுப்பு சுவர் இல்லை. இந்த தீவில் அவர்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த சிறையில் 69 வேலையாட்கள் இருக்கின்றனர்.
ஒரே ஒரு முறை தான்!
இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஐரோப்பிய சிறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த சதவிதத்தில்.
மேலும், கடந்த 33 வருடங்களாக இயங்கி வரும் இந்த சிறையில் ஒரே ஒரு முறை தான் கைதி தப்பிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.



Click it and Unblock the Notifications