Latest Updates
-
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க..
இப்படி ஒரு ஜெயில் இருந்தா, 4 கொலை, 5 கொள்ளை-னு சாதாரணமா செஞ்சுட்டு போவாயிங்க!
நார்வே பாஸ்டாய் சிறைசாலை, உலகின் முதல் சுற்றுசூழலியல் சிறை
இப்படி ஒரு ஜெயில் இருந்தா, யார் வேண்டுமானாலும் நாலு கொலை, ஐந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட விரும்புவார்கள். ஓரிரு ஆண்டுகள் தண்டனை பெற்று உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நார்வே பாஸ்டாய் சிறைக்கு தான் சென்று வர வ்நெடும்.
ஆம், ஒரு காலத்தில் கொடூரமான சிறைசாலை என பெயர்பெற்று, கிளர்ச்சி உண்டாகி மூடப்பட்ட சிறைசாலை. இப்போது உலகின் உல்லாச, தாராளவாத சிறையாக மாறியுள்ளது...

சிறைசாலை வரலாறு!
இந்த சிறைசாலை ஒரு காலத்தில் மிகவும் கொடூரமானதாக திகழ்ந்து வந்தது. பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற வழக்கில் சிக்கியவர்களுக்கு இந்த சிறையில் தான் தண்டனை வழங்கப்படும்.

1915-ல்
1915-ல் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் சிறைசாலை கொடுமைகளை எதிர்த்து கிளர்ச்சி உண்டாக்கினர். அவர்கள் இந்த இடத்தை விட்டு தப்பிக்க முயற்சித்தனர்.
இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இந்த தீவிற்கு இராணுவம் அனுப்பப்பட்டது. பிறகு 1953-ல் இது முழுமையாக மூடப்பட்டது. அதன்பின் 1970-ல் அரசே இந்த இடத்தை கையகப்படுத்தி கொண்டது.
1982ல்!
பிறகு 115 கைதிகள் கொள்ளளவுடன் இந்த சிறை மீண்டும் 1982ல் புதிதாக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும், உலகிலேயே தாராளவாத நிலை கொண்ட சிறை என்ற பெயரும் பெற்றது.

தனித்தன்மை!
இந்த சிறைக்கென நிறைய தனித்தன்மை இருக்கின்றன. டிவி, சமையலறை, படுக்கையறை தினமும் காலை எழுந்தால் 8.30 முதல் மாலை 3.30 வரை வேலை.

விளையாட்டுகள்!
இங்கே சிறைசாலையில் அடைப்பட்டு இருக்கும் கைதிகள் பொழுதை கழிக்க, குதிரை ஏற்றம், மீன் பிடித்தல், டென்னிஸ், ரன்னிங், நீச்சல், ப்ரைவேட் பீச் என பல வசதிகள் இருக்கின்றன.

பாதுகாவலர்கள்!
இந்த சிறையை பாதுகாக்க வெறும் ஐந்தே பாதுகாவலர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இங்கே கைதிகளுக்கு யூனிபார்ம் கிடையாது.
சிறையை சுற்றி தடுப்பு சுவர் இல்லை. இந்த தீவில் அவர்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த சிறையில் 69 வேலையாட்கள் இருக்கின்றனர்.
ஒரே ஒரு முறை தான்!
இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஐரோப்பிய சிறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த சதவிதத்தில்.
மேலும், கடந்த 33 வருடங்களாக இயங்கி வரும் இந்த சிறையில் ஒரே ஒரு முறை தான் கைதி தப்பிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.



Click it and Unblock the Notifications