Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?

Mothers day 2026: உலகம் முழுவதும் கொண்டாடப்படும் அன்னையர் தினம், நமக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அம்மாக்களை கௌரவிப்பதற்காகவும், அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் அம்மாவின் பங்கு என்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை நாம் நன்கு அறிவோம், ஆனால் அவர்களுக்குரிய அங்கீகாரத்தை நாம் கொடுக்கிறோமோ என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

Mothers day 2026 Date History Significance and Why It Is Celebrated

அன்னையர் தினம் என்பது, அவர்களின் அன்பு, தியாகங்கள் மற்றும் எல்லையற்ற பராமரிப்பு ஆகியவற்றைப் பாராட்டி நன்றி தெரிவிப்பதற்கும், அவர்கள் நமக்காக இதுவரை அளித்த, இனிமேலும் அளிக்கப்போகிற அன்புக்கும், ஆதரவிற்கும் உளப்பூர்வமான மற்றும் உண்மையான ஒரு நன்றியை அவர்களுக்குத் தெரிவிப்பதற்குரிய ஒரு தினமாகும்.

அன்னையர் தினம் எப்போதாவது கொண்டாடப்படுகிறது?

பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினம் மே மாதம் 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படும். இது எப்போதும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

Mothers day 2026 Date History Significance and Why It Is Celebrated

அன்னையர் தினத்தின் வரலாறு

தற்போது அன்னையர் தினம் வாழ்த்துக்கள், பரிசுகள் மற்றும் சாக்லேட்டுகளுடன் ஒரு சாதாரண நாள் போல தோன்றினாலும், இதன் வரலாறு என்பது ஒரு நூற்றாண்டுக்கும் முன்பிருந்து தொடங்குகிறது. 'அன்னா ஜார்விஸ்' எனும் பெண்மணியே அன்னையர் தினத்தை உருவாக்கியவர் என்று கூறப்படுகிறது. 1905-ஆம் ஆண்டில் தனது தாயார் காலமான பிறகு, மக்கள் தங்கள் அம்மாக்களைப் போற்றி மதிப்பதற்கும், அவர்களுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்கும் ஏற்ற வகையில் ஒரு நாளை உருவாக்க அன்னா விரும்பினார். அன்னாவின் தாயாரான 'ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ்' (Ann Reeves Jarvis), அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பெண்கள் மற்றும் படைவீரர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர் ஆவார்; தாய்மார்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு நாளை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதே அன்னாவின் தொலைநோக்குச் சிந்தனையாக அமைந்திருந்தது.

அவரது நீண்டகால முயற்சிகள் பலனளித்தன. 1914-ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை 'அன்னையர் தினம்' என்றும், ஒரு விடுமுறை நாளாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அன்னையர் தினம் ஏன் முக்கியமானது?

அன்னையர் தினம் என்பது வெறும் வாழ்த்து அட்டைகளை வழங்குவது அல்லது பரிசுகளை வாங்குவது மட்டுமல்ல. அது உங்கள் அம்மாவிற்கும், உங்களின் மதிப்பிற்குரிய பெண்களுக்கும் உங்கள் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு நாளாகும். தாய்மார்கள் இரவும் பகலும் இடைவிடாமல் உழைக்கிறார்கள், பெரும்பாலும் ஓய்வோ அல்லது அதற்கான நன்றியோ எதிர்பார்க்காமல் பிள்ளைகளை வளர்ப்பதற்கும், குடும்பத்தைப் பராமரிப்பதற்கும், மற்றவர்களின் தேவைகளைத் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அவர்கள் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். குடும்பத்தைப் பராமரிப்பதற்காகத் தாய்மார்கள் கண்விழித்துக் கழித்த இரவுகளுக்கும், அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய அவர்கள் தங்கள் தோள்களில் சுமக்கும் முடிவற்ற பொறுப்புகளுக்கும் செலுத்தும் ஒரு நன்றிக்கடனாகவே தாய்மார்கள் தினம்.கொண்டாடப்படுகிறது.

பண்டைய உலகில் அன்னையர் தினம்

அன்னையர் தினம் தற்போது உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டாலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது சில கலாச்சாரங்களில் பரவலாக கொண்டாடப்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ரியா (Rhea) மற்றும் சைபெலே (Cybele) ஆகிய பெண் தெய்வங்களைப் போற்றும் வகையில் விழாக்களைக் கொண்டாடி வந்தனர். இவ்விரு பெண் தெய்வங்களும் தாய்மை, வளமை, வேளாண்மை மற்றும் இயற்கை ஆகியவற்றின் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். மேலும், "மதரிங் சண்டே" எனப்படும் கிறிஸ்தவப் பண்டிகையும் ஒரு பக்திபூர்வமான நாளாகக் கருதப்பட்டது. இந்நாளில் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள முதன்மைத் தேவாலயமாகிய "தாய் தேவாலயத்திற்கு" மீண்டும் சென்று, சிறப்புப் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வது வழக்கம். பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது இது சமயசார்பற்று அனைத்து தாய்மார்களையும் கௌரவிக்கும் நாளாக மாறியுள்ளது.

Story first published: Tuesday, April 28, 2026, 19:40 [IST]
Desktop Bottom Promotion