Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த தருணங்களில் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் உங்களுக்கு நல்லது...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவவாதி, பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சாணக்கிய நீதியில் அவரது வாழ்க்கை தரிசனங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான அறிவுரைகள் உள்ளன. அவரது எழுத்துக்களில் நீங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பற்றிய ஆழமான அறிவையும், வழிகாட்டுதலையும் பெறலாம்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒருவர் எப்போது பேச வேண்டும், வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறார். இதனை கடைபிடித்தால் ஒருவர் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

பேச்சின் முக்கியத்துவம்
ஆச்சார்ய சாணக்கியரின் அறிவுரையையின் படி, பேசும் போது, யாரிடம், என்ன பேசுகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். நாக்கு மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மக்கள் அதை அடிக்கடி கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்கள் பின்னர் வருத்தப்படுவார்கள். வில்லில் இருந்து வெளிவரும் அம்பு எப்படி திரும்பப் பெற முடியாதோ, அதே போல் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளையும் திரும்பப் பெற முடியாது. அதனால்தான் பேசுவதற்கு முன், உங்களுக்கு முன்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்களிடம் கெட்ட வார்த்தை பேசக்கூடாது
மக்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களின் கோபத்திற்கு முதலில் இலக்காவது அவர்களுடைய பெற்றோர்கள்தான். இதனை நாமே பலமுறை செய்திருப்போம். மக்கள் தங்கள் பெற்றோரிடம் மிகவும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அந்த நேரத்தில், நாக்கு அவர்களின் அறிவை மீறுகிறது. இதனால் நீங்கள் பெரிய சாபத்திற்கு ஆளாகலாம்.
குடும்பத்தில் எப்போது அமைதியாக இருக்க வேண்டும்?
சாணக்கிய நீதியின் படி குடும்பத்தில் பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள், அவர்களைப் பேசவிடுங்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதி படி, நண்பர்கள் பேசும்போது, அவர்கள் பேசுவதைக் குறுக்கிடாமல் முழுமையாகக் கேட்க வேண்டும். இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பேசி முடித்த பின் நிம்மதியாக உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
எதிர்வினைகளை கவனிக்க வேண்டும்
ஒரு நபருடன் பேசும்போது, அவர்களின் எதிர்வினைகளை கவனமாகக் கவனியுங்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் அல்லது அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை அவர்களின் வெளிப்பாடுகள் மற்றும் எதிர்வினைகளிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எப்போது அமைதியாக இருக்க வேண்டும்
குடிகாரர்கள், வன்முறையாளர்கள், கோபக்காரர்கள், ஆபாசமான சிந்தனை கொண்டவர்கள், கொடூரமான எண்ணம் கொண்டவர்கள், குடிபோதையில் அல்லது மயக்கமடைந்தவர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். இவர்களிடம் பேசுவது உங்களுக்கே ஆபத்தானதாக மாறும். மேலும், அவர்களுடன் ஏதேனும் மோதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால், மற்ற தரப்பினர் அமைதியாகக் கேட்டு, நிதானமாக பதிலளிக்க வேண்டும். வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்படும் போது தொடர்ந்து பேசுவது நிலைமையை மேலும் மோசமாக்கும்.



Click it and Unblock the Notifications
