Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த தருணங்களில் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் உங்களுக்கு நல்லது...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவவாதி, பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சாணக்கிய நீதியில் அவரது வாழ்க்கை தரிசனங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான அறிவுரைகள் உள்ளன. அவரது எழுத்துக்களில் நீங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பற்றிய ஆழமான அறிவையும், வழிகாட்டுதலையும் பெறலாம்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒருவர் எப்போது பேச வேண்டும், வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறார். இதனை கடைபிடித்தால் ஒருவர் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

பேச்சின் முக்கியத்துவம்
ஆச்சார்ய சாணக்கியரின் அறிவுரையையின் படி, பேசும் போது, யாரிடம், என்ன பேசுகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். நாக்கு மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மக்கள் அதை அடிக்கடி கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்கள் பின்னர் வருத்தப்படுவார்கள். வில்லில் இருந்து வெளிவரும் அம்பு எப்படி திரும்பப் பெற முடியாதோ, அதே போல் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளையும் திரும்பப் பெற முடியாது. அதனால்தான் பேசுவதற்கு முன், உங்களுக்கு முன்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்களிடம் கெட்ட வார்த்தை பேசக்கூடாது
மக்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களின் கோபத்திற்கு முதலில் இலக்காவது அவர்களுடைய பெற்றோர்கள்தான். இதனை நாமே பலமுறை செய்திருப்போம். மக்கள் தங்கள் பெற்றோரிடம் மிகவும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அந்த நேரத்தில், நாக்கு அவர்களின் அறிவை மீறுகிறது. இதனால் நீங்கள் பெரிய சாபத்திற்கு ஆளாகலாம்.
குடும்பத்தில் எப்போது அமைதியாக இருக்க வேண்டும்?
சாணக்கிய நீதியின் படி குடும்பத்தில் பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள், அவர்களைப் பேசவிடுங்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதி படி, நண்பர்கள் பேசும்போது, அவர்கள் பேசுவதைக் குறுக்கிடாமல் முழுமையாகக் கேட்க வேண்டும். இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பேசி முடித்த பின் நிம்மதியாக உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
எதிர்வினைகளை கவனிக்க வேண்டும்
ஒரு நபருடன் பேசும்போது, அவர்களின் எதிர்வினைகளை கவனமாகக் கவனியுங்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் அல்லது அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை அவர்களின் வெளிப்பாடுகள் மற்றும் எதிர்வினைகளிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எப்போது அமைதியாக இருக்க வேண்டும்
குடிகாரர்கள், வன்முறையாளர்கள், கோபக்காரர்கள், ஆபாசமான சிந்தனை கொண்டவர்கள், கொடூரமான எண்ணம் கொண்டவர்கள், குடிபோதையில் அல்லது மயக்கமடைந்தவர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். இவர்களிடம் பேசுவது உங்களுக்கே ஆபத்தானதாக மாறும். மேலும், அவர்களுடன் ஏதேனும் மோதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால், மற்ற தரப்பினர் அமைதியாகக் கேட்டு, நிதானமாக பதிலளிக்க வேண்டும். வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்படும் போது தொடர்ந்து பேசுவது நிலைமையை மேலும் மோசமாக்கும்.



Click it and Unblock the Notifications
