Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையின் பல கொள்கைகள் விளக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் சில ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். இதனால் திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டியது முக்கியம்.
வாழ்க்கைத் துணை சரியாக அமையாவிட்டால் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக பொருந்தும். ஆச்சார்ய சாணக்கியரின் இந்தக் கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், அது திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நன்மை பயக்கும்.

திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு முன், துணையைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதி படி திருமணத்திற்கு முன் துணையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தரத்தை பார்க்க வேண்டும் அழகை அல்ல
ஒருவரை திருமணம் செய்யும் முன் அவர்களின் குணங்களைப் பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் உடல் அழகை அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு நபரின் மதிப்புகளை திருமணத்திற்கு முன்னரே மதிப்பிடுவது முக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு உடல் அழகு குறையக்கூடும், ஆனால் ஒரு நபரின் மதிப்புகளும், குணநலன்களும் ஒருபோதும் குறைவதில்லை.
நேர்மை
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு மனிதன் எப்போதும் உறவுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். மனைவிக்கு உண்மையாக இருப்பவர் எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார். ஒரு நேர்மையான கணவனைக் கொண்ட பெண் தனது திருமணத்தில் எப்போதும் திருப்தியுடன் இருப்பார் மற்றும் நேர்மையான மனைவியைக் கொண்ட ஆணின் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்.
ஒழுக்கம்
அழகான பெண்ணை நோக்கியே ஒரு ஆண் எப்போதும் ஓடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு பெண் நல்லொழுக்கமுள்ளவராக இருக்க வேண்டியது அதைவிட முக்கியம். ஒரு நல்லொழுக்கமுள்ள பெண் கடினமான காலங்களில் குடும்பத்தை ஆதரிக்கிறார், அவர்களை துக்கங்களிலிருந்து விடுவிப்பார்.
அமைதி
எந்த ஒரு குடும்பமோ அல்லது உறவோ கோபத்தால் முடிவடையும் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே, திருமணத்திற்கு முன் மனைவியின் குணாதிசயங்களை சரிபார்க்க வேண்டும். கோபமான மனைவி இருந்தால், பிறகு வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவீர்கள் என்றும் சாணக்கியர் எச்சரிக்கிறார்.
கடவுள் நம்பிக்கை
திருமணத்திற்கு முன் தங்கள் துணையின் கடவுள் நம்பிக்கை எப்படிப்பட்டபோது என்பதை அறிந்து கொள்வது முக்கியம் என்கிறார் சாணக்கியர். கடவுள் செயல்களில் ஈடுபடும் ஒருவர், அவர்களின் இயல்பிலும் மிகுந்த மதநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்.
மரியாதை
கணவன் மனைவி உறவில் மரியாதை மிக முக்கியமானது என்கிறார் சாணக்கியர். கணவன்-மனைவி ஒருவரையொருவர் மதிக்காமல், பிறர் முன்னிலையில் ஒருவரையொருவர் இழிவுபடுத்தும் திருமண வாழ்க்கை துக்கங்களும் சிரமங்களும் நிறைந்ததாகவே இருக்கும். எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மதித்து வாழும் மண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
