Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையின் பல கொள்கைகள் விளக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் சில ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். இதனால் திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டியது முக்கியம்.
வாழ்க்கைத் துணை சரியாக அமையாவிட்டால் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக பொருந்தும். ஆச்சார்ய சாணக்கியரின் இந்தக் கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், அது திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நன்மை பயக்கும்.

திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு முன், துணையைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதி படி திருமணத்திற்கு முன் துணையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தரத்தை பார்க்க வேண்டும் அழகை அல்ல
ஒருவரை திருமணம் செய்யும் முன் அவர்களின் குணங்களைப் பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் உடல் அழகை அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு நபரின் மதிப்புகளை திருமணத்திற்கு முன்னரே மதிப்பிடுவது முக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு உடல் அழகு குறையக்கூடும், ஆனால் ஒரு நபரின் மதிப்புகளும், குணநலன்களும் ஒருபோதும் குறைவதில்லை.
நேர்மை
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு மனிதன் எப்போதும் உறவுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். மனைவிக்கு உண்மையாக இருப்பவர் எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார். ஒரு நேர்மையான கணவனைக் கொண்ட பெண் தனது திருமணத்தில் எப்போதும் திருப்தியுடன் இருப்பார் மற்றும் நேர்மையான மனைவியைக் கொண்ட ஆணின் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்.
ஒழுக்கம்
அழகான பெண்ணை நோக்கியே ஒரு ஆண் எப்போதும் ஓடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு பெண் நல்லொழுக்கமுள்ளவராக இருக்க வேண்டியது அதைவிட முக்கியம். ஒரு நல்லொழுக்கமுள்ள பெண் கடினமான காலங்களில் குடும்பத்தை ஆதரிக்கிறார், அவர்களை துக்கங்களிலிருந்து விடுவிப்பார்.
அமைதி
எந்த ஒரு குடும்பமோ அல்லது உறவோ கோபத்தால் முடிவடையும் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே, திருமணத்திற்கு முன் மனைவியின் குணாதிசயங்களை சரிபார்க்க வேண்டும். கோபமான மனைவி இருந்தால், பிறகு வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவீர்கள் என்றும் சாணக்கியர் எச்சரிக்கிறார்.
கடவுள் நம்பிக்கை
திருமணத்திற்கு முன் தங்கள் துணையின் கடவுள் நம்பிக்கை எப்படிப்பட்டபோது என்பதை அறிந்து கொள்வது முக்கியம் என்கிறார் சாணக்கியர். கடவுள் செயல்களில் ஈடுபடும் ஒருவர், அவர்களின் இயல்பிலும் மிகுந்த மதநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்.
மரியாதை
கணவன் மனைவி உறவில் மரியாதை மிக முக்கியமானது என்கிறார் சாணக்கியர். கணவன்-மனைவி ஒருவரையொருவர் மதிக்காமல், பிறர் முன்னிலையில் ஒருவரையொருவர் இழிவுபடுத்தும் திருமண வாழ்க்கை துக்கங்களும் சிரமங்களும் நிறைந்ததாகவே இருக்கும். எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மதித்து வாழும் மண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
