Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி பெண்கள் கணவரிடம் திருப்தியாக இல்லையென்றால் இப்படித்தான் நடந்துக்குவாங்களாம்...!
Chanakya Niti: இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனித சமூகத்தின் நலன் தொடர்பான பல கொள்கைகளை வழங்கியுள்ளார். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆச்சார்ய சாணக்கியரின் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. எனவே அவரது கொள்கைகள் இன்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
சாணக்கிய தனது சாணக்கிய நீதியில் பெண்கள் மற்றும் திருமணம் பற்றி சாணக்கியர் பல விஷயங்களை விரிவாக விவரித்துள்ளார். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பல விஷயங்களைக் கூறியுள்ளார்.

பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவர்களிடம் அதிருப்தி அடையும் போது சில அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள், கணவர் அத்தகைய அறிகுறிகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். கணவர் மீது மகிழ்ச்சியற்ற மனைவிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேச்சை குறைத்துக் கொள்வது
பெண்கள் கணவரிடம் பேச்சைக் குறைத்துக் கொள்வது அவர்களின் அதிருப்தியைக் குறிக்கிறது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. சில சமயங்களில் மனைவிகள் தங்கள் கணவர்கள் மீது கோபப்படும்போது திடீரென்று பேசுவதை நிறுத்தி விடுவார்கள். இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உங்கள் மனைவியிடம் பேசி, அவர் ஏன் அதிருப்தியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்திற்கும் கோபப்படுவது
ஒரு நல்ல மனைவி தன் கணவனை ஒருபோதும் வருத்தப்படுத்த விரும்ப மாட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் மனைவி உங்களிடம் தொடர்ந்து கோபப்பட ஆரம்பித்தால், அதாவது அவர் கோபப்பட்டு ஏதாவது ஒரு விஷயத்திற்காக சண்டையிடுகிறார் என்றால், அவர் ஏதோ ஒரு விஷயத்தில் உங்களிடம் அதிருப்தி அடைந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்களை மட்டுமே கவனித்துக் கொள்வது
பொதுவாக அனைத்து மனைவிகளும் தங்கள் கணவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. உங்கள் மனைவி திடீரென்று உங்களிடமிருந்து விலகிச் சென்றாலோ அல்லது அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்து உங்களை கவனித்துக் கொள்ளவில்லை என்றாலோ, உங்கள் மனைவி ஏதோ ஒரு காரணத்திற்காக உங்கள் மீது அதிருப்தியாக இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக உங்கள் மீது கோபமாக இருக்கலாம். அவர்களின் பிரச்சினையைப் புரிந்துகொண்டு உடனடியாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். எப்படிப்பட்ட மனைவி தனது கணவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சேமிக்கத் தெரிந்த பெண்
ஒரு பெண்ணுக்கு பணத்தை சேமிக்கத் தெரிந்தால், அவர் அதிகமாக பணம் செலவழிக்க மாட்டார் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அவர்கள் தனிப்பட்ட சேமிப்பு மூலம் பணத்தை குவிக்கிறார்கள். அவர்கள் கடினமான காலங்களில் குடும்பத்திற்கு உதவுகிறார்கள். அத்தகைய பெண்கள் நிதி நெருக்கடியில் இருக்கும் தங்கள் கணவர்களுக்கு உதவுவார்கள். அத்தகைய மனைவி தன் கணவருக்கு அதிர்ஷ்ட தேவதை என்று சாணக்கியர் கூறுகிறார்.
மென்மையாக பேசுபவர்கள்
ஒரு பெண் மென்மையான நடத்தை கொண்டவராக இருந்தால், அவர் இனிமையாகப் பேசுபவராக இருப்பார்கள். இப்படிப்பட்ட மனைவியைப் பெறும் கணவன் அதிர்ஷ்டசாலி என்கிறார் சாணக்கியர். அத்தகைய மனைவி தங்கள் குடும்பத்துடன் நல்ல உறவை வளர்த்து, குடும்பத்தின் செழிப்பை அதிகரிக்க பாடுபடுவார்கள்.
அமைதியான நடத்தை
அமைதியான நடத்தைக் கொண்ட பெண் எந்த சூழ்நிலையிலும் கோபப்பட மாட்டார் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. காலம், நேரம் மற்றும் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து சிந்திக்கவும் செயல்படவும் அவரால் முடியும். அத்தகைய பெண் தன் கணவரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றுவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications












