Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் வாழ்க்கையில் புத்திக்கூர்மையால் சாதனையாளர்களாக இருப்பார்களாம்!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர், தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணராவார். சாணக்கியரின் அறிவுரைகளும், அவற்றின் பலன்களும் அளவிட முடியாதது. வருங்கால சந்ததியினருக்கு வாழ்வில் உள்ள சந்தேகங்களை நீக்கவும், வெற்றியை அடையவும், உறவுகளை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், செல்வம் பெறவும் என வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் வெற்றிபெற சாணக்கியர் பயனுள்ள அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
சாணக்கியர் கூறிய அறிவுரைகள் இப்போது மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். மக்கள் அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவது அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் கொடுக்கும். இந்த பதிவில் வெற்றிகரமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய சாணக்கியர் கூறும் வழிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

சாணக்கிய நீதி
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு ஸ்லோகத்தில், ஒருவரின் வித்யா நிலையை அவர்களின் பயிற்சியில் நிலைத்திருப்பதாகக் கூறுகிறார், குடும்பப்பெருமை அவரது குணாதிசயங்களால் அங்கீகரிக்கப்படுகிறது, ஞானி அவரது குணங்களால் அங்கீகரிக்கப்படுகிறார், கோபம் அவரது கோபமான கண்களால் அங்கீகரிக்கப்படுகிறது என்று விளக்குகிறார்.
அறிவைப் பயன்படுத்த வேண்டும்
ஒருவர் எவ்வளவு அறிவைப் பெற்றதாகக் கூறினாலும், அந்த அறிவை பயன்படுத்தாத வரை அதனால் எந்தப் பயனும் இல்லை என்கிறார் சாணக்கியர். நாம் பெறும் அறிவை பயன்படுத்த வாழ்க்கையில் வாய்ப்புகள் வரும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர், அறிவைப் பெற்றவராக கூற தகுதியற்றவர். அறிவு நிலையான பயிற்சி மற்றும் அதனை வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலமே வெளிப்படும்.
குடும்பபெருமை
சாணக்கியர் தனது ஒரு ஸ்லோகத்தில் ஒருவரின் குணாதிசயம் அவர்களின் குடும்பப்பெயரில் நிலைத்திருப்பதாகக் கூறுகிறார். ஒருவருடைய குடும்பப் பாரம்பரியம், குடும்பத்தின் பெருமை மற்றும் தங்களின் பெருமை பற்றி தற்பெருமை பேசக் கூடாது. அந்த மகத்துவம் நம் குணத்தில் பிரதிபலிக்க வேண்டும். தனது தவறான செயல்கள் மூலம் குடும்பப் பெருமையை கெடுப்பவர்கள் அந்த குடும்பத்திற்கு சாபம் போன்றவர்கள் என்கிறார் சாணக்கியர்.
தற்பெருமை பேசக்கூடாது
ஒரு புத்திசாலி அல்லது உன்னதமான நபர் தனது திறன்கள் மற்றும் புத்திக்கூர்மைப் பற்றி ஒருபோதும் விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார். அவருடைய நற்பண்புகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அவர் புத்திசாலி என்றும் உன்னதமானவர் என்றும் அழைக்கப்படுவார். புத்திக்கூர்மை இல்லாத ஒருவர் நீண்ட காலம் புத்திசாலியாக நடிக்க முடியாது. யாராலும் தங்களுடைய குணங்களை நீண்ட காலம் மறைக்க முடியாது. எவ்வளவோ நடிக்க முயன்றாலும் அவர்களின் உண்மையான குணம் வெளிவரும்.
கோபம்
கோபம் என்பது ஒருவர் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஆயுதமாகும். ஒருவர் எந்த சூழ்நிலையிலும் தனது ஆற்றலை கோபத்தின் மூலம் வெளிப்படுத்தக்கூடாது. ஏனெனில் கோபம் உங்களின் உண்மையான நோக்கத்தை மறைத்து உங்களை ஒரு முட்டாளாக அனைவரின் முன்னிலையிலும் தோற்றமளிக்க வைக்கும். ஒரு புத்திசாலி எப்போதும் கோபப்பட மாட்டார். கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும், இல்லையெனில் அதற்கு எப்போதும் மதிப்பு இருக்காது.



Click it and Unblock the Notifications
