Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி உங்ககிட்ட இந்த 5 பழக்கங்கள் இருந்தால் நீங்கள் அதிபுத்திசாலிகளாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: இந்த உலகில் ஒரே ஒருவர் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். அது புத்திசாலிகள் மட்டுமே. செல்வந்தர்கள் கூட ஒரு காலகட்டத்தில் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை இழக்கலாம், ஆனால் புத்திசாலிகள் ஒருபோதும் அவர்களின் ஞானத்தை இழக்க மாட்டார்கள்.
பலசாலியாக இல்லாதவர்கள் கூட புத்திசாலித்தனத்தால் எளிதில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். புத்திசாலித்தனம் இல்லாமல், அதிகாரம் இருப்பதில் அர்த்தமில்லை. புத்திசாலித்தனம் என்பது ஒரு உள்ளார்ந்த திறன் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதே சமயம், நாம் நினைத்தால் நமது புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும்.

சாணக்கியர் தனது புத்திசாலித்தனம் மற்றும் தந்திரம் மூலம் சந்திரகுப்த மௌரியரின் விருப்பமான வழிகாட்டியாக மாறினார் மற்றும் அவரை ஆட்சிக்குக் கொண்டுவர தந்திரங்களை பயன்படுத்தினார். புத்திசாலியாக மாறுவதற்கு ஒருவர் கொண்டிருக்க வேண்டிய சில பழக்கங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார். சாணக்கியர் கூறும் இந்த பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குடும்ப ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது
புத்திசாலிகள் தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியிட மாட்டார்கள். அவர்களின் குடும்ப விவகாரங்கள் எப்போதும் ரகசியமாகவே இருக்கும். ஏனென்றால், சாணக்கியர் இப்படிப்பட்ட விஷயங்களை எதிரிகள் உங்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம் என்கிறார்.
வதந்திகளை நம்ப மாட்டார்கள், பரப்பவும் மாட்டார்கள்
புத்திசாலிகள் ஒருபோதும் அவதூறுகளையும், வதந்திகளையும் ஒருபோதும் பரப்ப மாட்டார்கள் அதேசமயம் நம்பவும் மாட்டார்கள். பிறரைப் பற்றிய எதிர்மறை மற்றும் வதந்திகளில் இருந்து விலகி இருக்க முயற்சிப்பார்கள். வதந்திகளை பரப்புவது தங்களுடைய நற்பெயரை கெடுக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
மருத்துவ ரகசியங்களை வெளியிட மாட்டார்கள்
புத்திசாலிகள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றி யாரிடமும் கூற மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இது போன்ற விஷயங்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒருவேளை உங்களின் எதிரிகளுக்கு இந்த விஷயங்கள் தெரிய வந்தால் அதுவே உங்களுக்கு பெரிய ஆபத்தாக மாறும்.
உணவை குறை சொல்ல மாட்டார்கள்
சாணக்கியர் உணவைக் குறை கூறாமல் இருப்பதை ஞானிகளின் அடையாளமாகக் கருதுகிறார். உணவு விஷயத்தில் அவர்களுக்கு எந்த புகாரும் இருக்காது. தாங்கள் பெற்ற உணவில் திருப்தி அடைவார்கள். அவர்கள் உணவை எப்போதும் வீணாக்க மாட்டார்கள், அதற்கு மரியாதைக் கொடுப்பார்கள்.
காதலை ரகசியமாக வைத்திருப்பவர்கள்
புத்திசாலிகள் தங்கள் காதல் வாழ்க்கையை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களின் காதல் வாழ்க்கைப் பற்றி தெரிய வந்தால் மற்றவர்கள் தேவையற்ற வதந்திகளையும் சந்தேகங்களையும் பரப்பக்கூடும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications












