Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி உங்ககிட்ட இந்த 5 பழக்கங்கள் இருந்தால் நீங்கள் அதிபுத்திசாலிகளாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: இந்த உலகில் ஒரே ஒருவர் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். அது புத்திசாலிகள் மட்டுமே. செல்வந்தர்கள் கூட ஒரு காலகட்டத்தில் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை இழக்கலாம், ஆனால் புத்திசாலிகள் ஒருபோதும் அவர்களின் ஞானத்தை இழக்க மாட்டார்கள்.
பலசாலியாக இல்லாதவர்கள் கூட புத்திசாலித்தனத்தால் எளிதில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். புத்திசாலித்தனம் இல்லாமல், அதிகாரம் இருப்பதில் அர்த்தமில்லை. புத்திசாலித்தனம் என்பது ஒரு உள்ளார்ந்த திறன் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதே சமயம், நாம் நினைத்தால் நமது புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும்.

சாணக்கியர் தனது புத்திசாலித்தனம் மற்றும் தந்திரம் மூலம் சந்திரகுப்த மௌரியரின் விருப்பமான வழிகாட்டியாக மாறினார் மற்றும் அவரை ஆட்சிக்குக் கொண்டுவர தந்திரங்களை பயன்படுத்தினார். புத்திசாலியாக மாறுவதற்கு ஒருவர் கொண்டிருக்க வேண்டிய சில பழக்கங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார். சாணக்கியர் கூறும் இந்த பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குடும்ப ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது
புத்திசாலிகள் தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியிட மாட்டார்கள். அவர்களின் குடும்ப விவகாரங்கள் எப்போதும் ரகசியமாகவே இருக்கும். ஏனென்றால், சாணக்கியர் இப்படிப்பட்ட விஷயங்களை எதிரிகள் உங்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம் என்கிறார்.
வதந்திகளை நம்ப மாட்டார்கள், பரப்பவும் மாட்டார்கள்
புத்திசாலிகள் ஒருபோதும் அவதூறுகளையும், வதந்திகளையும் ஒருபோதும் பரப்ப மாட்டார்கள் அதேசமயம் நம்பவும் மாட்டார்கள். பிறரைப் பற்றிய எதிர்மறை மற்றும் வதந்திகளில் இருந்து விலகி இருக்க முயற்சிப்பார்கள். வதந்திகளை பரப்புவது தங்களுடைய நற்பெயரை கெடுக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
மருத்துவ ரகசியங்களை வெளியிட மாட்டார்கள்
புத்திசாலிகள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றி யாரிடமும் கூற மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இது போன்ற விஷயங்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒருவேளை உங்களின் எதிரிகளுக்கு இந்த விஷயங்கள் தெரிய வந்தால் அதுவே உங்களுக்கு பெரிய ஆபத்தாக மாறும்.
உணவை குறை சொல்ல மாட்டார்கள்
சாணக்கியர் உணவைக் குறை கூறாமல் இருப்பதை ஞானிகளின் அடையாளமாகக் கருதுகிறார். உணவு விஷயத்தில் அவர்களுக்கு எந்த புகாரும் இருக்காது. தாங்கள் பெற்ற உணவில் திருப்தி அடைவார்கள். அவர்கள் உணவை எப்போதும் வீணாக்க மாட்டார்கள், அதற்கு மரியாதைக் கொடுப்பார்கள்.
காதலை ரகசியமாக வைத்திருப்பவர்கள்
புத்திசாலிகள் தங்கள் காதல் வாழ்க்கையை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களின் காதல் வாழ்க்கைப் பற்றி தெரிய வந்தால் மற்றவர்கள் தேவையற்ற வதந்திகளையும் சந்தேகங்களையும் பரப்பக்கூடும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications
