Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...
அனைவருக்குமே வீட்டு நன்கு சுத்தமாகவும், நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதிலும் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை விட, நம் வீடு அழகாக இருக்க வேண்டுமென்று பலர் நிறைய பணத்தை செலவழிப்பதுண்டு. குறிப்பாக வீட்டில் நல்ல மணம் வர வேண்டுமென்று, பல நறுமணப் பொருட்களை வாங்கி, வீட்டில் பயன்படுத்துவோம்.
இருப்பினும் அது தற்காலிகமாக, 1 அல்லது 2 மணிநேரம் மட்டும் இருக்குமே தவிர, நிரந்தரமாக இருக்காது. ஆகவே வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், அதிக பணம் செலவழித்து கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு எளிதான முறையில் நறுமணத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
சரி, இப்போது வீட்டை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் பொருட்களையும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதையும் பார்ப்போமா!!!

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் வீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சரிசமமாக கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, காற்றாடியை நோக்கி தெளித்தால், அது வீட்டில் நல்ல மணத்தை தக்க வைக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை பிழிந்து, அறையின் மூலைகளில் வைத்தால், அது அறைகளில் நல்ல மணத்தை பரவச் செய்வதோடு, மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தின் நறுமணம் பிடிக்கும் என்றால், அன்னாசிப்பழத்தை நறுக்கி, டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, கதவுகளின் முனையில் தேய்த்து விட்டால், ஜன்னல் கதவுகளை திறக்கும் போது, வெளிக்காற்று வீட்டின் உள்ளே வரும் போது நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

சிவப்பு வெங்காயம்
சமையலறையில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க வேண்டுமெனில், சிவப்பு வெங்காயத்தை நறுக்கி, சமையலறையில் வைத்தால், துர்நாற்றம் நீங்கிவிடும்.

பட்டை
பட்டை உணவில் மட்டும் நல்ல மணத்தைக் கொடுப்பதோடு, வீட்டின் அறையிலும் நல்ல நறுமணத்தை தக்க வைக்கும். அதற்கு பட்டையை ஜன்னல் கதவுகளின் அருகே வைத்தால், நல்ல மணத்துடன் இருக்கும். பட்டையின் வாசனை பிடிக்கும் என்பவர்கள் இந்த முறையை மேற்கொள்ளலாம்.

மூலிகைகள்
நல்ல மணம் கொண்ட மூலிகைகளை வீட்டின் உள்ளே வளர்த்தாலும், நல்ல நறுமணம் வீட்டை சுற்றும். அதிலும் துளசி மற்றும் ஜின்செங் போன்றவை நல்ல நறுமணமிக்க மூலிகைகளாகும்.

மலர்கள்
வீட்டின் பூ ஜாடியில் நல்ல நறுமணமிக்க பூக்களை வைத்து, வீட்டை வீட்டை அலங்கரித்தால், வீடு நறுமணத்துடன் இருப்பதோடு, வீட்டிற்கு அழகு சேர்த்தது போன்றும் இருக்கும். குறிப்பாக ரோஜா மற்றும் மல்லிகையை வைத்தால் நல்ல மணம் கிடைக்கும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து கதவுகளின் விளிம்புகளில் வைத்து, கதவுகளை திறந்து விட்டால், அது வீட்டில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கும்.

ஆரஞ்சு
சிட்ரஸ் ஆசிட் நிறைந்த அனைத்துப் பொருட்களும், வீட்டை நறுமணத்துடன் வைத்துக் கொள்ளும். அதிலும் ஆரஞ்சு பழத்தை ஊசியால் குத்தி, அதனை சமையலறையில் வைத்துவிட்டால், அது சமையலறையில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி, நல்ல நறுமணத்தை தரும்.



Click it and Unblock the Notifications