Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
எலியை ஓட ஓட விரட்டும் 14 பொருள்கள் இதுதாங்க... உடனே வாங்குங்க... விரட்டுங்க...
எலிகளை அப்படியே ஓட விடாமல் கொல்லுவதே மனித இனத்திற்கு நோய் அண்டாமல் பாதுகாக்கும் வழியாகும். ஒருவேளை அவைகளை உயிரோடு விட்டால், அவை உங்கள் வீடுகளை தங்கள் இருப்பிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கும். இதனால் பல ந
எலிகளின் மூலமாக மனித உடலுக்கு இருபது வகைக்கும் மேலான நோய் தொற்று பாதிப்புகள் உண்டாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதனை ஓரளவுக்கு அறிந்ததால் தான் பலரும் எலியைக் காணும்போது அதனை பழி வாங்கும் நோக்கத்துடன் அதனை கொல்ல முயற்சிக்கின்றனர். எலிகளை அப்படியே ஓட விடாமல் கொல்லுவதே மனித இனத்திற்கு நோய் அண்டாமல் பாதுகாக்கும் வழியாகும்.

ஒருவேளை அவைகளை உயிரோடு விட்டால், அவை உங்கள் வீடுகளை தங்கள் இருப்பிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கும். இதனால் பல நோய்கள் உங்களை தாக்கத் தொடங்கலாம். ஆகவே வீட்டுத் தீர்வுகள் மூலம் எலியை கொல்வதற்கான முறைகளை நாம் இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

எலித்தொல்லை
எலிகளைப் வீட்டுத் தீர்வுகள் மூலம் பிடிப்பதற்கு ஒரு வித சாமர்த்தியம் வேண்டும். எலிகள் மிகவும் வேகமாக தப்பிக்கும் தன்மை கொண்ட ஒரு பிராணி. ஆகவே நீங்கள் அதனை எலி வலைக்குள் பிடிக்க முயற்சிக்கும்போது அவை தப்பித்து மீண்டும் உங்கள் வீடுகளை ஆக்கரமிக்கும். நோய்களைப் பரப்பும். ஆகவே பொதுவாக எலியைப் பிடிக்க மக்கள் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் எலிகளின் விருப்ப உணவாகிய தேங்காய், தக்காளி ஆகியவற்றை எலி வலையில் ரசாயனக் கலவை சேர்த்து எலி வலையில் வைத்து எலிகளைக் கவர முயற்சிப்பார்கள். இதனை பழங்காலம் முதல் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நவ நாகரீக மக்களால் இதனை பின்பற்றுவதில் சில சங்கடங்கள் உண்டாகிறது. அவர்களுக்கு ஏற்ற விதத்தில் சில எளிமையான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெறுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

புதினா எண்ணெய்
புதினாவின் வாசனை எலிக்கு ஏற்றுக் கொள்ளாது . வீட்டுத் தீர்வுகள் மூலம் எலியை கொல்ல நினைக்கிறவர்கள், புதினா எண்ணெயில் பஞ்சை நனைத்து எலி பொந்திற்கு அருகில் வைக்கவும். இதன் வாசனை எலியின் நுரையீரலை சுருங்கச் செய்து கொன்று விடும்.

பூனையை வாங்குங்கள்
இது ஒரு பழைய தீர்வாகும். எலியை கொல்வதற்காக பூனையை வாங்கலாம். எலி எங்கிருந்தாலும் அதனை பிடித்து விழுங்கி விடும்.

மனித முடி
மனித முடியைக் கண்டாலே எலி ஓடி விடும். இதற்குக் காரணம், இந்த முடியை ஒரு வேளை எலிகள் விழுங்கி விட்டால் அதற்கு மரணம் நிச்சயம்.

அந்துருண்டை
அந்துருண்டை எலிகளைக் கொல்வதற்கு ஒரு சிறந்த தீர்வு. இந்த சிறிய வாசனை மிகுந்த உருண்டைகள் மனிதனுக்கே விஷத்தன்மையை கொடுப்பது. ஆகையால் எலிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதனை பயன்படுத்தி எலிகளை நிச்சயம் கொல்லலாம்.

அமோனியா
அமோனியா சில துளிகள் எலி பொந்தில் தெளித்து விடுவதால் எலிகளைக் கொல்லலாம் . அதன் காரமான வாசனை காரணமாக எலிகள் செத்து விடும்.

மாட்டு சாணம்
மாட்டு சாணம் பயன்படுத்தி எலிகளைக் கொல்லலாம். இந்த சாணத்தை எலிகள் உண்பதால் அதன் வயிற்றில் அழற்சி ஏற்பட்டு வாந்தி எடுத்து இறந்து விடலாம்.

பூனையின் சிறுநீர்
தண்ணீருக்கு பதிலாக, பூனையின் சிறுநீரை எலியின் பொந்திற்கு அருகில் தெளித்து விடுவதால் எலிகள் இறக்கலாம். எலிகளுக்கு பூனை சிறுநீரின் வாசனை தெரியாத காரணத்தால், அவற்றை நீர் என்று நினைத்து குடித்து இறக்க நேரிடலாம்.

ஆந்தையின் இறகுகள்
பிளாஸ்டிக் பாம்பு போன்றவற்றை அதன் பொந்திற்கு அருகில் வைப்பதால் பயந்து அவை ஓடி விடலாம். அல்லது எலிகளை பயமுறுத்த ஆந்தையின் இறகுகளை கூட அதன் பொந்தில் வைக்கலாம்.

ஒலிகளும் பயத்தை உண்டாக்கும்
அதிகமான ஒலி எலிகளுக்கு பயத்தை உண்டாக்கும் . மேலும் அவற்றின் காதுகளில் இரத்தம் வழியத் தொடங்கும். ஒலிப்பெருக்கியில் இருந்து வெளிப்படும் கூர்மையான ஒலி இயற்கையாகவே எலிகளைக் கொல்லும். இது ஒரு சிறந்த வீட்டுத் தீர்வாகும்.

மிளகு
மிளகு தூளை எலி பொந்திற்கு அருகில் தெளித்து விடுவதால் இயற்கையாக எலிகள் இறக்க நேரிடும். மிளகின் வாசம் எலிகளின் நுரையீரலை பாதிக்கும் . இதனால் மூச்சு விட முடியாமல் எலிகள் இறக்கலாம்.

பிரிஞ்சி இலை
பிரிஞ்சி இலையை எலிகள் உணவாக பார்க்கும். ஆகவே இந்த இலைகளை எலி பொந்திற்கு அருகில் வைப்பதால் அதனை உட்கொள்ளும்போது எலிகளைக் கொல்லலாம்.

வெங்காயம்
எலிகளை இயற்கையாக கொல்வதற்கு வெங்காயம் ஒரு சிறந்த தீர்வாகும். வெங்காயத்தை நறுக்கி , எலி பொந்திற்கு அருகில் வைக்கவும். இதனை உண்ணும்போது எலிகளைக் கொல்லலாம்.

பேபி பவுடர்
இயற்கை முறைகள் எலிகளைக் கொல்ல கைக்கொடுக்காத நிலையில் இந்த தீர்வை செயல்படுத்தலாம். பேபி பவுடரை எலி பொந்தில் தெளித்து விடுவதால் அதன் வாசனை எலிகளை ,மயக்க நிலைக்கு ஆளாக்கி கொல்லும்.

பூனை பெட்டி
ஒரு சிறிய கிட்டி லிட்டரை எலி பொந்திற்கு அருகில் வைக்கலாம். பூனை அதில் இருக்கும் என்ற பயத்தால் எலிகள் ஓடி விடும். மறுபடி வரவே வராது.



Click it and Unblock the Notifications











