Latest Updates
-
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
எந்த நோய்க்கு எந்த மூலிகை பலன் தரும்?- அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !!
உடலில் உண்டாகும் சிறு சிறு பிரச்சனைகளை குணமாக்கும் மூலிகைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். அவற்றப் பற்றியும் அவற்றின் சிறப்பம்சங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சிறு சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைத்தான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு மூலிகையும் ஒரு அற்புத அரு மருந்தாகும்.
நம் கண் முன்னே பல மூலிகைகள் கிடந்தாலும் அதன் பயன் மற்றும் நன்மைகளை நாம் தெரிந்து வைத்திருப்பதில்லை.

அவற்றின் பலன்களை நாம் தெரிந்து வைப்பதனால் பின்னாளில் ஒரு அவசரத்திற்கேனும் அவை உதவக் கூடும். அவ்வாறு உங்களுக்கு உதவும் வகையில் இங்கே மிகச் சாதாரணமாக நம் கண் முன் விளையும் மூலிகைச் செடிகளும் அவ்ற்றின் நன்மைகளையும் காண்போம்.

திரிபலா பொடி :
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தகரிக்கும். சரும நோய்களை குணமாக்கும். பாத வெடிப்பை மறையச் செய்யும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.

செம்பருத்திபூ பொடி :
அனைத்து வகையான இதய நோய்க்கும் சிறந்தது. செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிடுவதை போல. ஏனென்றால் செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்னைகளுக்கு, செம்பருத்தித்திப்பூ கஷாயம் நல்ல மருந்து.

குப்பைமேனி :-
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. மலச்சிக்கலை குணமாக்கும். குடல் புழுக்களை அழிக்கும். மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும்.

பாகற்காய் :
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கல்லீரலை பாதுகாக்கும். தினந்தோறும் பாகற்காய் சாறு அருந்தினால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.

மணத்தக்காளி :
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். கபம் கரையும். ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி :
சர்க்கரை,குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். அஜீரணம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி :
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி ஆகிய பற்கள் மற்றும் ஈற்கள் சம்பந்தமான நோய்களை விரடும்.



Click it and Unblock the Notifications