Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
Budget 2026: இந்த ஆண்டு காஞ்சிபுர பட்டுப்புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Budget 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01 ஆம் தேதி தனது 9 ஆவது மத்திய பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்யவுள்ளார். அதற்காக தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டிற்கு முன் நிதியமைச்சர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் இந்திய பெண் நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் நாட்டின் நீண்டகால நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக 2026 ஆம் ஆண்டின் பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் அணிந்து வரும் ஆடை எப்போதும் கவனத்தை ஈர்க்கும்.
ஏனெனில் அவர் ஒவ்வொரு ஆண்டும் அணிந்து வரும் புடவைகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றன.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் பழமையான நெசவு பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்துள்ளார். அதுவும் தங்க ஜரிகையால் கட்டம் போட்ட ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்து வந்துள்ளார்.
மேலும் இந்த புடவையானது நூல் வேலைப்பாடுகளுடன் கூடிய காபி பழுப்பு நிற பார்டர் கொண்டது. இந்த புடவைக்கு இவர் மஞ்சள் நிற முழுக்கை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, மேலே ஒரு சால்வையையும் போட்டு வந்திருந்தார். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் காஞ்சிபுர பட்டுப்புடவை தேர்ந்தெடுக்க தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை உணர்த்துவதும் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications