Latest Updates
-
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
Budget 2026: இந்த ஆண்டு காஞ்சிபுர பட்டுப்புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Budget 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01 ஆம் தேதி தனது 9 ஆவது மத்திய பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்யவுள்ளார். அதற்காக தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டிற்கு முன் நிதியமைச்சர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் இந்திய பெண் நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் நாட்டின் நீண்டகால நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக 2026 ஆம் ஆண்டின் பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் அணிந்து வரும் ஆடை எப்போதும் கவனத்தை ஈர்க்கும்.
ஏனெனில் அவர் ஒவ்வொரு ஆண்டும் அணிந்து வரும் புடவைகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றன.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் பழமையான நெசவு பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்துள்ளார். அதுவும் தங்க ஜரிகையால் கட்டம் போட்ட ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்து வந்துள்ளார்.
மேலும் இந்த புடவையானது நூல் வேலைப்பாடுகளுடன் கூடிய காபி பழுப்பு நிற பார்டர் கொண்டது. இந்த புடவைக்கு இவர் மஞ்சள் நிற முழுக்கை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, மேலே ஒரு சால்வையையும் போட்டு வந்திருந்தார். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் காஞ்சிபுர பட்டுப்புடவை தேர்ந்தெடுக்க தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை உணர்த்துவதும் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications











