Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
Budget 2026: இந்த ஆண்டு காஞ்சிபுர பட்டுப்புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Budget 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01 ஆம் தேதி தனது 9 ஆவது மத்திய பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்யவுள்ளார். அதற்காக தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டிற்கு முன் நிதியமைச்சர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் இந்திய பெண் நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் நாட்டின் நீண்டகால நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக 2026 ஆம் ஆண்டின் பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் அணிந்து வரும் ஆடை எப்போதும் கவனத்தை ஈர்க்கும்.
ஏனெனில் அவர் ஒவ்வொரு ஆண்டும் அணிந்து வரும் புடவைகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றன.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் பழமையான நெசவு பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்துள்ளார். அதுவும் தங்க ஜரிகையால் கட்டம் போட்ட ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்து வந்துள்ளார்.
மேலும் இந்த புடவையானது நூல் வேலைப்பாடுகளுடன் கூடிய காபி பழுப்பு நிற பார்டர் கொண்டது. இந்த புடவைக்கு இவர் மஞ்சள் நிற முழுக்கை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, மேலே ஒரு சால்வையையும் போட்டு வந்திருந்தார். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் காஞ்சிபுர பட்டுப்புடவை தேர்ந்தெடுக்க தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை உணர்த்துவதும் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications