Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
Budget 2026: இந்த ஆண்டு காஞ்சிபுர பட்டுப்புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Budget 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01 ஆம் தேதி தனது 9 ஆவது மத்திய பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்யவுள்ளார். அதற்காக தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டிற்கு முன் நிதியமைச்சர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் இந்திய பெண் நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் நாட்டின் நீண்டகால நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக 2026 ஆம் ஆண்டின் பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் அணிந்து வரும் ஆடை எப்போதும் கவனத்தை ஈர்க்கும்.
ஏனெனில் அவர் ஒவ்வொரு ஆண்டும் அணிந்து வரும் புடவைகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றன.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் பழமையான நெசவு பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்துள்ளார். அதுவும் தங்க ஜரிகையால் கட்டம் போட்ட ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்து வந்துள்ளார்.
மேலும் இந்த புடவையானது நூல் வேலைப்பாடுகளுடன் கூடிய காபி பழுப்பு நிற பார்டர் கொண்டது. இந்த புடவைக்கு இவர் மஞ்சள் நிற முழுக்கை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, மேலே ஒரு சால்வையையும் போட்டு வந்திருந்தார். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் காஞ்சிபுர பட்டுப்புடவை தேர்ந்தெடுக்க தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை உணர்த்துவதும் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications











