Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா? அப்ப இதுல ஒரு வழியை ட்ரை பண்ணுங்க..
உங்கள் முகம் இறந்த செல்கள் அதிகம் தேங்கி பொலிவிழந்து காணப்பட்டால், இறந்த செல்களை நீக்க ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்ப கொடுங்கள்.
நமது உடலில் ஏராளமான இயற்கை செயல்முறைகள் நடைபெறுகின்றன. அதில் புதிய சரும செல்களின் உற்பத்தி மற்றும் இறந்த சரும செல்கள் உதிர்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரும ஆரோக்கியத்திற்கு புதிய செல்களின் உற்பத்தி மட்டுமின்றி இறந்த செல்களை வெளியேற்றுவது போன்றவை அவசியமான செயலாகும். சில சமயங்களில், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் சரியாக வெளியேறாமல், சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் சரும பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், இறந்த செல்களை வெளியேற்ற வேண்டும்.

சருமத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால், சருமம் பொலிவிழந்து காணப்படும். எனவே உங்கள் முகம் இறந்த செல்கள் அதிகம் தேங்கி பொலிவிழந்து காணப்பட்டால், இறந்த செல்களை நீக்க ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்ப கொடுங்கள். கீழே சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேற்கொண்டு, உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளுங்கள்.

1. ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்
ஓட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவும். எனவே அந்த பொருளைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம்.
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசரை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

2. சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் ஸ்க்ரப்
* 1/2 கப் சர்க்கரையில், 2-3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2-3 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை சருமத்தில் தடவி மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவது நல்லது.

3. காபி ஸ்க்ரப்
* ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இறந்த செல்கள் அதிகம் உள்ள பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, சருமத்தை உலர்த்த வேண்டும்.
* இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.

4. பாதாம் ஃபேஸ் ஸ்கரப்
* 10 பாதாமை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் தோலுரித்து விட்டு, பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 10-15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் ஸ்கரப்பை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

5. கடலை மாவு
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை சருமத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
* மற்றொரு வழி, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து தயிர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.
* இவற்றை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











