பண்டைய கால இந்திய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த பொருட்கள்தான்...!

இந்திய சமையலறையில் இருக்கும் பல பொருட்கள் பண்டைய காலங்களில் அழகுசாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பல மூலிகைகளும் அழகுசாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்திய பெண்கள் தங்கள் அழகுக்காக உலகம் முழுவதும் பிரபலமானவர்கள். இந்திய பெண்களின் அழகிற்கு நமது முன்னோர்கள் வழங்கிய பல அழகுக் குறிப்புகள் முக்கிய காரணம் என்பதை ஒருபோதும் மறக்க முடியாது. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார்போல் நமது பெண்களின் அழகுக்குறிப்புக்கள் மாறிக்கொண்டே வருகிறது.

Beauty Ingredients of Ancient India

இந்திய சமையலறையில் இருக்கும் பல பொருட்கள் பண்டைய காலங்களில் அழகுசாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பல மூலிகைகளும் அழகுசாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மட்டுமின்றி இந்திய பெண்கள் தங்களின் ஒளிரும் அழகிற்கு அவர்கள் பண்டைய காலத்தில் சில வித்தியாசமான பொருட்களை பயன்படுத்தி வந்தார்கள். இந்த பதிவில் இந்திய பெண்கள் பண்டைய காலத்தில் பயன்படுத்திய வினோதமான அழகுசாதன பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசு சாணம் மற்றும் சிறுநீர்

பசு சாணம் மற்றும் சிறுநீர்

கேட்பதற்கு அருவருப்பாக இருக்கலாம், ஆனால் இது உண்மைதான். பசு பண்டைய காலங்களிலிருந்து இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் விலங்கு. இது பல வழிகளில் பயனுள்ளதாக இருப்பதுடன் அதிலிருந்து பெறப்படும் பொருட்கள் பல தயாரிப்புகளுக்கு உதவுகிறது. பசு சாணம் மற்றும் சிறுநீர் கூட பண்டைய காலத்தின் பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டன, அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, அவை தோல் தொடர்பான பல சிக்கல்களிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது. உடல் மற்றும் முகம் பொதிகளை நச்சுத்தன்மையாக்குதல், பரு சிகிச்சை மற்றும் குதிகால் சிகிச்சை ஆகியவற்றில் அவை பயன்படுத்தப்பட்டன. அழகிய சருமத்தைப் பெற எதையெல்லம் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

வெற்றிலை

வெற்றிலை

பாரம்பரிய மத சடங்குகள் மற்றும் மருத்துவத்தில்பயன்படுத்தப்பட்ட மிகவும் மதிப்பு வாய்ந்த இந்த இலைகள் இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தன. எந்தவொரு விருந்தும் வெற்றிலை இல்லாமல் முடிவு பெறாது. இந்த இலையின் ஆச்சரியம் மற்றும் மிகவும் குறைவாக அறியப்பட்ட அம்சம் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிகிச்சையளிப்பதில் அதன் பயன்பாடு ஆகும், அதற்கு காரணம் இதிலிருக்கும் நச்சுத்தன்மைகள்தான். முகாலய அரசிகள் வெற்றிலையை அதிகம் விரும்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களின் ஒளிரும் சருமத்திற்கும் வெற்றிலை முக்கிய காரணமாக அமைந்தது.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

இந்த இலை இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்காக மட்டுமின்றி அழகுசாதனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக, அவை முகம் மற்றும் முடி தயாரிப்புகளின் முக்கியமான மூலப்பொருளாக அமைந்தன. நேரடியாக உட்கொண்டாலும் அல்லது வெளிப்புறமாக முடி அல்லது முகத்தில் பயன்படுத்தப்பட்டாலும் உங்கள் சருமத்தில் அந்த காந்தத்தை சேர்ப்பதில் அல்லது உங்கள் தலைமுடிக்கு பசுமையான தோற்றத்தை கொடுக்கும்.

முத்து

முத்து

இப்போது அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருப்பதைத் தவிர, நகைகளில் அவை பரவலாகப் பயன்படுத்துவது பொதுவான அறிவாகும். ஆனால், அந்த இளமை பிரகாசத்தை சருமத்தில் சேர்த்து மென்மையாக்குவதற்கு அவை இந்திய சமுதாயத்தின் மேல்தட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டன. இந்திய அரசகுடும்பத்தினர் ஏன் முத்துக்களை அதிகம் பயன்படுத்தினார்கள் என்று இப்போது புரிகிறதா?.

 எள்

எள்

எள் விதைகள் சமையலில் மட்டுமல்ல ஆயுர்வேதத்தில் முக்கியமான இடம் வகித்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? எள் விதைகள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆரம்பத்தில், டியோடர் மரம் மற்றும் பிற பொருட்களுடன் இணைந்து, இந்த விதைகள் சிறந்த தோல் ஒளிரும் முகம் பொலிவை ஊக்குவிக்கும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

 சிவப்பு பயிறு மாவு

சிவப்பு பயிறு மாவு

புரதச்சத்து அதிகமிருக்கும் பயிறு வகைகள் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை என்று நாம் அறிவோம். ஆனால், சருமத்தை மென்மையாக்குவதற்கும், முடி உதிர்வதைத் தடுப்பதற்கும் சிவப்பு பயறு மாவு பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. எனவே அடுத்த முறை உங்கள் சருமத்தை பொலிவாக்க நினைக்கும் போது முதலில் சிவப்பு பயிறு மாவை நோக்கி செல்லுங்கள்.

 மல்லி விதைகள்

மல்லி விதைகள்

இந்த மல்லி விதைகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தே ஆண்டிசெப்டிக் பண்புகளுக்காக பயன்படுத்தப்பட்து வருகிறது. பருக்கள், முகப்பரு மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அவற்றின் பரவலான பயன்பாட்டை இது விளக்குகிறது. இது தவிர, பழைய கால பெண்கள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும், புதிய முடி வளர்ச்சியைத் தூண்டவும் இதனை பயன்படுத்தினர். இதன் ஆரோக்கிய நன்மைகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

வெந்தயம்

வெந்தயம்

பொதுவாக உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் வெந்தயமாகும், குறிப்பாக இந்திய உணவுகளில் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வயதை குறைவாக காட்டவும், முகம் மற்றும் முடியை புத்துணர்ச்சியாக வைத்திருக்க இது பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, February 8, 2020, 13:20 [IST]
Desktop Bottom Promotion