Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
வீட்டில் இதெல்லாம் இருக்கா? அப்போ உங்க கண்ணு சூப்பரா இருக்கும்!
வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே கருவளையத்தை போக்க எளிமையான குறிப்புகள்.
ஆண் பெண் என இருபாலரும் தற்போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று துவங்கி விட்டார்கள். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் கண்ணுக்கு கீழே கருவளை வருவது சகஜமாகிவிட்டது
ஹார்மோன் மாற்றம், தூக்கமின்மை,ஸ்ட்ரஸ்,உணவுப்பழக்கம் மாற்றம் போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது. இது வந்தால் விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படும். இதனை தவிர்க்க வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களைக் கொண்டு சிறந்த தீர்வினைக் காண முடியும்.

தக்காளி :
தக்காளிப்பழம் கருவளையத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி பூசி வர கருவளையம் மறைந்திடும். அதே நேரத்தில் சருமமும் சாஃப்ட்டாக இருக்கும்.
கண்களைச் சுற்றி தடவி பத்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட செய்யலாம்.

உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு பஞ்சில் ஒற்றியெடுத்து கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். அல்லது வட்டமாக உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளுங்கள் அதனை கண்களுக்கு மேலே வைத்திருந்தால் கூட போது,
இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

டீ பேக் :
மிகவும் எளிதான வழிமுறை இது. பயன்படுத்திய டீ பேக் கூட இதற்கு பயன்படுத்தலாம். டீ பேகை ப்ரிட்ஜில் வைத்து கூலாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கண்களின் மேல் பதினைந்து நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும்.
கவனம் கண்களில் டீ பேகை வைத்திருக்கும் போது கண்களை திறப்பது, கூடாது. அமைதியாக கண்களை மூடியிருக்க வேண்டும். இதனை நீங்கள் தினமும் கூட செய்யலாம்.

பாதாம் எண்ணெய் :
பாதாம் எண்ணெயில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறது. இதனால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது தினமும் இரண்டு வேளை வீதம் பாதாம் எண்ணெயினால் கண்களைச் சுற்றி மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

வெள்ளரி :
வெள்ளரி குளிர்ச்சி தரக்கூடியது. வெள்ளரியை வட்டமாக நறுக்கி அரை மணி நேரம் ப்ரீசரில் வைத்திடுங்கள். பின்னர் அதனை எடுத்து கொஞ்சம் குளிர்த்தன்மை குறைந்ததும் அதனை கண்களுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இதனால் கண்கள் சோர்ந்து போயிருந்தால் ஃபிரஷ்ஷாக தெரியும்.



Click it and Unblock the Notifications