18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-கேது .. இந்த ராசியினர்தான் இனி ராஜா..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனக்கான ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் சில aதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த மாதம் சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியில் கேது ஏற்கனவே இருக்கிறார். இது கன்னி ராசியில் கேது மற்றும் சூரியன் இணைகிறது என்று அர்த்தம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இணைவு நடைபெறுகிறது. சூரியன் மற்றும் கேதுவின் இணைவு சில ராசிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

செப்டம்பர் 16ம் தேதி இரவு 8 மணிக்கு சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.. அதன் பிறகு, அக்டோபர் 17 ஆம் தேதி காலை 8 மணியளவில் சூரியன் தனது ராசியை மாற்றுகிறார்.. அதாவது சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும். இது மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். அந்த 3 ராசிகள் யார் யார்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

sun ketu conjunction in vigro after 18 year these rasi people will get more money

கேது

ராகு கொடுப்பார்.. கேது கெடுப்பார் என்பது ஜோதிட பழமொழி. இருந்தாலும் கேது, ஞானக்காரன் என்பதால் அவரது பங்குக்கு சில நன்மைகளைச் செய்வதில் இருந்து தவறுவதில்லை.. ஒருவரது ஜாதகத்தில் கேது யோகம் தரக்கூடிய இடத்தில் இருந்தால், பல நன்மைகள் உண்டாகும். மனிதனாகப் பிறந்த ஒருவருக்கு ஏழாவது ஞானத்தை தரக்கூடிய அளவுக்கு கேதுவுக்கு சக்தி உண்டு..

சூரியன்

நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் கருதப்படுகிறார்.. சூரியன் மாதத்திற்கு ஒருமுறை இடமாற்றம் செய்யக் கூடியவர்.. சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

மகரம்

இந்த ராசியில் 9ஆம் வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் இணைவு நடக்க உள்ளது. அதனால் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். குடும்பத்துடன் எந்தப் புகழ்பெற்ற கோயிலுக்கும் செல்லலாம். அதிர்ஷ்ட பலம் இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெற முடியும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். ஆன்மிகத்தின் மீதான நாட்டமும் அதிகரிக்கும், அனைவர் மத்தியிலும் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்

சூரியன் இந்த ராசியில் 11ஆம் வீட்டில் நுழைகிறார். இதன் காரணமாக இந்த ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் இணைவு உள்ளது. இதன் விளைவாக, அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். யாத்திரைகள் செல்லலாம். பணியிடத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். உங்களின் முக்கியமான ஆசைகள் நிறைவேறும். கடனில் இருந்து விடுபடலாம்..

துலாம்

துலா ராசியில் சூரியன் 12ஆம் வீட்டில் நுழைகிறார்.. இதனால் இண்டஹ் ராசியினருக்கு சூரியனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உங்கள் மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும், சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.. பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் வரும். இந்த சூழ்நிலையில், நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம் மற்றும் உங்கள் கனவுகளை நனவாக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 4, 2024, 17:16 [IST]
Desktop Bottom Promotion