Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் பல தண்டனைகளை அனுபவிக்கப் போறாங்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் கர்மாவை வழங்கும் கிரகமான சனி, மிகவும் மெதுவாக நகரும் கிரகங்களில் ஒன்றாகும், ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை வருடங்கள் இருக்கும். சனியின் நீண்ட பயணம் என்பது 12 ராசிகளிலும் ஒரு முழு சுழற்சியை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும். சனி ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும்போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும்.
டிசம்பர் 2024 இறுதியில் வியாழன் ஆளும் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் நுழைந்தார். பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த சனிப் பெயர்ச்சி ஒருவருடைய ராசியைப் பொறுத்து அவர்களுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் பலனடையலாம், சில ராசிக்காரர்கள் பின்னடைவை சந்திக்கலாம். இந்த பதிவில், 2025 ஆம் ஆண்டு பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சனிபகவான் செல்வதால் பிரச்சினைகளை சந்திக்கப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் நடக்கும் சனிப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கும். கடக ராசியின் ஆறாவது வீட்டில் வியாழன் மற்றும் எட்டாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால், இந்த காலம் உடல்நல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம், இதனால் அடிக்கடி நோய்கள் தாக்கலாம். ஒன்பதாம் வீட்டில் சனியின் நிலை எதிர்பாராத மோதல்கள், பதட்டங்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றை வழங்கலாம், இதன் விளைவாக பதட்டமான சூழல் ஏற்படும். இந்த காலம் நிரந்தரமானது அல்ல என்பதை மறந்து விடக்கூடாது.
மார்ச் 29-க்குப் பிறகு, சனி மீனத்தில் நுழையும் போது, அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். சனியின் ராசி மாற்றம் வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும், இது அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்கான ஒரு காலகட்டத்திற்கு வழிவகுக்கும். வருடத்தின் தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தபோதிலும், இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் மிகவும் தேவையான நிவாரணம் மற்றும் பெரிய மாற்றங்களை வழங்கலாம்.
சிம்மம்
சனி சிம்ம ராசிக்காரர்களின் உறவுகள் மற்றும் கூட்டாண்மைகளின் ஏழாவது வீட்டிற்குச் செல்கிறார். இந்த சனிப் பெயர்ச்சி, அவர்களின் ஐந்தாம் மற்றும் எட்டாம் வீடுகளை ஆளும் வியாழனின் செல்வாக்குடன் இணைந்து, ஒரு நம்பிக்கைக்குரிய காலகட்டத்தை வழங்கலாம். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பண ஆதாயங்கள் மற்றும் திருமண வாய்ப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் வெற்றியை அடையலாம். இருப்பினும், சனி மீனத்தில் நுழையும் போது, அதன் தாக்கம் மங்கத் தொடங்குகிறது, மேலும் சனி அவர்களின் எட்டாவது வீட்டிற்குச் செல்கிறது.
இந்த மாற்றம் சில கடினமான தருணங்களை ஏற்படுத்தலாம் மற்றும் வாழ்க்கையின் அனைத்து சூழல்களிலும் சிரமங்கள் எழலாம். உடல்நலம் இந்த காலகட்டத்தில் கடுமையாக பாதிக்கப்படலாம், வேலையில் எதிர்பாராத தடைகளை நீங்கள் சந்திக்கலாம். குடும்பம் மற்றும் நண்பர்களிடையே பதட்டங்கள் அதிகரிக்கலாம், இதன் விளைவாக அவர்களுடன் தவறான புரிதல்கள் அல்லது தகராறுகள் ஏற்படலாம். சனியின் ராசி பெயர்ச்சி நடக்கும் போது அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
மகரம்
2025 ஆம் ஆண்டு பூரட்டாதி நட்சத்திரத்தை சனி கடக்கும்போது மகர ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும். சனியின் நிலை அவர்களின் 6 மற்றும் 7 ஆம் வீடுகளை பாதிக்கிறது, எனவே அவர்களின் அன்றாட வழக்கத்திலும், உறவுகளிலும் எதிர்பாராத சவால்களை எதிர்பாராத சவால்கள் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளால் அவர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாகலாம், இது மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எதிர்பாராத செலவுகள் அவர்களின் சேமிப்பைப் பாதிக்கலாம் மற்றும் அவர்களை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளலாம்.
தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அவற்றைத் தீர்க்க பொறுமை மற்றும் சரியான உரையாடல்கள் தேவை. சரியான திட்டமிடல் மற்றும் உறுதியுடன் இந்த சவால்களை சமாளித்து அவர்கள் வெளிவரலாம். கவனம் செலுத்துவதும், ஒழுக்கமாக இருப்பதும், எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் இந்த காலகட்டத்தை கடக்க மிகவும் அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












