Latest Updates
-
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சனிபகவான் மற்றும் புதன் உருவாக்கும் திரி ஏகாதசி யோகத்தால் அதிர்ஷ்டமடையப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனிபகவானின் அருள் இருந்தால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் வளர்ச்சியும் உயர்வும் இருக்கும். கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் சனியைப் போலவே மிக முக்கியமான கிரகமாகும். புதனின் ஆசி இல்லாமல் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியாது.
வாழ்க்கையில் வெற்றி பெறவும், சம்பாதிக்கவும், நல்ல வேலை கிடைக்கவும் புதனின் ஆசி அவசியம். 2025-ல் புதன் சூரியனிலிருந்து 3வது வீட்டிலும், சூரியன் புதனிலிருந்து 11வது வீட்டிலும் உள்ளனர். இரண்டு கிரகங்களும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலையை அடைகின்றன. இதனால் திரி ஏகாதசி யோகம் உண்டாகும். எனவே சில ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் புதன் என்ற இரு சக்திவாய்ந்த கிரகங்களாலும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
2025 பொதுவாக மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான ஆண்டாக இருக்கும். மேஷ ராசி இந்த வருடத்தில் பல கிரகங்களின் ஆசீர்வாதத்தைப் பெறப்போகிறார்கள். 2025ல் சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சுபயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரப்போகிறது. இந்த கிரகங்களின் ஆசீர்வாதத்தால் அவர்களின் பொருளாதாரச் சூழல் மேம்படும்.
அவர்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத வழிகளில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களின் கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தலாம். உறவினர்கள் மூலம் பல்வேறு நிதி உதவிகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் இப்போது அதற்கான முயற்சிகளில் தாராளமாக இறங்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் 2024-ல் முடிக்க முடியாத பல விஷயங்களை 2025-ல் வெற்றிகரமாக முடிக்கலாம். அவர்கள் விரும்பிய துறையில் வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வேலையில் அவர்களின் செயல்திறன் வெகுவாக பாராட்டப்படும், பதவி உயர்வு கிடைப்பதால் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
வீட்டிற்கு பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். அவர்களின் நீண்ட கால கனவுகள் இந்த ஆண்டில் நிறைவேறும். அவர்களின் வாழ்க்கையில் இருந்த நிதிப்பிரச்சினைகள் மறைந்து விடும். 2025-ம் ஆண்டு வியாபாரம் செய்பவர்கள் பல புதிய வாடிக்கையாளர்களைப் பெறலாம். புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடலாம். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சனிபகவான் உருவாக்கும் திரி ஏகாதசி யோகத்தால் பல நன்மைகள் கிடைக்குப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தங்கள் வருமானத்தை பல வழிகளில் அவர்கள் உயர்த்திக் கொள்ளலாம்.
புதிய முதலீடுகள் அவர்களுக்கு எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் நற்பலன்கள் கிடைக்கும் காலமிது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












