Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த 3 மாதங்களில் பிறந்தவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்களாம்... இவங்களுக்கு வாய விட கைதான் பேசும்....!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். ஒருவரின் நடத்தை என்பது அவர்களின் வளர்ப்பு, குடும்பச்சூழல் மற்றும் நட்பு வட்டாரம் போன்றவற்றை பொறுத்தது. இருப்பினும் ஒருவரின் பிறந்த ராசி, நட்சத்திரம் மற்றும் பிறந்த மாதம் போன்றவை அவர்களின் அடிப்படை ஆளுமை மற்றும் பண்புகளை நிர்ணயிக்கக்கூடும்.
ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட ஆக்ரோஷமானவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் பேசுவதில் நம்பிக்கை இல்லை, ஆனால் வன்முறையில் அதீத ஆர்வமும், நம்பிக்கையும் இருக்கும். அவர்களுக்கு கோபம் வந்தால் அது நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய வன்முறையாளர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களிடம் சண்டையிடும் குணமும், மூர்க்கத்தனமும் நிறைந்திருக்கும். அவர்கள் அச்சமற்றவர்கள், துடிப்பானவர்கள், சண்டையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், சிறிய பிரச்சினைகளுக்குக் கூட பெரிதாய் கோப்படுவார்கள்.
அவர்கள் எப்போதும் சவாலான சூழலை விரும்புவதால், அவர்கள் பெரும்பாலும் ஆக்ரோஷமான மனநிலையில் இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் எளிதில் கோபப்படுவார்கள், ஆனால் விரைவில் அமைதியாகிவிடுவார்கள்; அவர்கள் பொதுவாக மனதிற்குள் வெறுப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அடிக்கடி கோபப்படுவார்கள்.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் அமைதியானவர்களாகவும், மனஉறுதி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் அவர்கள் பொறுமை இழக்கும் போது அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் பிடிவாதமாகவும் மாறக்கூடும். அவர்கள் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள், அவர்கள் காளைகளை போன்ற மூர்க்கத்தனம் கொண்டவர்கள், ஏனெனில் அவர்கள் தூண்டப்படும் வரை அமைதியாக இருப்பார்கள், கோபப்படும் போது அவர்கள் பகுத்தறிவற்ற முறையில் கோபப்படுவார்கள்.
அவர்களுக்கு நீண்ட காலமாக பகையை மனதில் வைத்திருப்பார்கள், மேலும் தூண்டப்பட்டவுடன் வெடிக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் கோபம் படிப்படியாக வளர்ந்தாலும், அவர்கள் பொறுமையை இழக்கும்போது அது கடுமையானதாகவும், பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் வலுவான தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் உணர்ச்சிகள் அவர்களின் மோசமான ஈகோவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் அவமானப்படுத்தப் பட்டதாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டதாகவோ உணரும்போது, அவர்கள் வன்முறையில் ஈடுபடலாம். அவர்களுக்கு வலுவான சுயமரியாதை உணர்வு இருக்கும், மேலும் அதைப் பாதுகாக்க துணிச்சலுடன் போராடுவார்கள்.
அவர்கள் பொதுவாக கருணையும், தாராள குணமும் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் சுயமரியாதை புண்படுத்தப்படும்போது, அவர்கள் சிங்கம் போல கர்ஜிப்பார்கள். கோபத்தில் இருக்கும்போது அல்லது ஒருவருடன் பிரச்சினைகள் இருக்கும்போது, அவர்கள் தங்களின் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கமானவர்களாகவும், லட்சியவாதிகளாகவும் இருப்பார்கள். தங்கள் லட்சியத்தில் யாராவது குறுக்கிடும் போது அல்லது யாராவது அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்போது, அவர்கள் மூர்கமானவர்களாகவும், தீயவர்களாகவும் மாறக்கூடும். பொறுப்பில் இருக்க அல்லது தங்கள் இலக்குகளை அடைய தங்கள் பலம் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த அவர்கள் தயங்க மாட்டார்கள்.
அவர்கள் வன்முறையில் ஈடுபடாவிட்டாலும், எதிரில் இருப்பவர்கள் எழ முடியாத அளவிற்கு அவர்களின் செயல்களால் காயப்படுத்துவார்கள். ஒருவரை பழிவாங்கும் போது அவர்கள் கடினமாகவும், சமரசமற்றவர்களாகவும், வலிமையையும் கட்டுப்பாட்டையும் பயன்படுத்தி தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












