குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்னும் 5 மாசத்துக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் வரப்போகுதாம்...!

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் தெவர்களின் குருவான வியாழன் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறது. புதனுக்குப் பிறகு மிக மெதுவாக நகரும் கிரகமான வியாழன், வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறது. எனவே வியாழன் ராசிசக்கரத்தை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். ராசி மாற்றம் போலவே வியாழனின் நட்சத்திர பெயர்ச்சியும் மிகவும் முக்கியமானது.

நவம்பர் 28 ஆம் தேதி வியாழன் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். சந்திரன் செல்வாக்கு செலுத்தும் நட்சத்திரமாக ரோகிணி உள்ளது. வியாழன் வக்ரமாக ரோகிணியை அடைகிறது. வியாழன் நாளை மதியம் 1.10 மணிக்கு ரோகிணியை அடையும். ஏப்ரல் 10, 2025 வரை இதே நட்சத்திரத்தில் இருக்கும். இந்த நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது.

Jupiter Enters Rohini Nakshatra Give Luck and Prosperity to These Zodiac Signs

ஆனால் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சி மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

வியாழன் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த 5 மாத காலத்தில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். குறிப்பாக அவர்கள் நிதிரீதியாக சிறப்பான பலன்களைத் தருவார்கள். அவர்களுக்கு புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் திறக்கும்.

நீண்ட நாட்களாக முயற்சி செய்து தடைபட்டு வந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தும் உயரும். மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய முடியும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் மேலதிகாரிகளிடம் நற்பெயரை வாங்கலாம். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்த பிறகு, குருபகவான் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் நுழையப் போகிறார். கடக ராசியின் அதிபதியும் சந்திரன்தான். எனவே வியாழனின் நட்சத்திர மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.

அதிர்ஷ்ட தேவதையின் ஆதரவு அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்க முடியும். வேலையில் இருப்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இந்த காலம் நல்லது. நீண்ட கால இலக்கை அடைவது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.

சிம்மம்

குருபகவான் சிம்மத்தின் பதினொன்றாவது வீட்டில் நுழைகிறார். எனவே இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வியாழனின் நட்சத்திர மாற்றம் நன்மை தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். மேலும், வாழ்க்கையில் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது சாதகமான நேரம். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 27, 2024, 23:01 [IST]
Desktop Bottom Promotion