Latest Updates
-
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது!
குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க!
இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால இருக்க முடியாது என்று கூறுவதும், 3 வயது படிக்கும் பெண்ணிற்கு ஐலவ்யூ என்று எழுதி ராக்கெட் விடுவதும் இன்றைக்கு சகஜமாகிவிட்டது. காரணம் ஹார்மோன்களின் வேகம்தான். ஆனால் டீன் ஏஜ் பருவத்திற்கு முந்தைய அதாவது 11, 12 வயதில் பாலியல் உணர்வு ஏற்படுவது இயற்கையானதுதான் என்கின்றனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்கள்.

வயதில் மூத்த அண்ணன், மாமா, சித்தப்பா போன்றோர்கள் மூலம் இந்த வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தூண்டுதல்கள் நிகழலாம் என்கின்றனர்.
சிலருக்கு முத்தமிடுதல், தழுவுதல் போன்றவைகளினால் பாலியல் உணர்வுகள் தூண்டப்படலாம். எனவே தங்களுக்கு நேரும் சின்னச் சின்ன பிரச்சினைகளைக் கூட பெற்றோரிடம் தெரிவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
சாதாரணமாக முத்தமிடுவது வேறு பாலியல் உணர்வுகளை தூண்டுவதைப் போல முத்தமிடுவது வேறு எனவே உங்களின் குழந்தைகளுக்கு சரியான தொடுகை, தவறான தொடுகை என்ன என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதேநேரம் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்றும், அவர்களின் சிக்கல்களை தீர்க்க முயற்சி செய்யவேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
13 வயதிற்குட்பட்ட 10ல் 8 குழந்தைகள் இப்பொழுது பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகின்றனர். குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என்று கூறும் நிபுணர்கள், இது போன்ற தொந்தரவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மூலம் அவர்களின் அச்சத்தை தீர்க்க முயலவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications