Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கோடையில் குழந்தையை கூலாக வைப்பதற்கு சில டிப்ஸ்...
குழந்தைகளைப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதிலும் கோடைகாலம் ஆரம்பித்து விட்டால், அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பிறப்பதற்கு முன் கருப்பையில் குளிர்ச்சியான இடத்தில் இருந்ததால், கோடைகாலத்தில் இருக்க முடியாது. அவர்களுக்கு எப்போதும் அதிக வெப்பம் ஆகாது. ஆகவே கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்றால், அதற்கு முன்னரே குழந்தைகளை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிகம் வியர்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேண்டிய சூழ்நிலையை வீட்டிற்குள்ளேயே ஏற்படுத்தி தருவதோடு, ஒருசில செயல்களையும் மேற்கொள்ள வேண்டும். சரி, இப்போது குழந்தைகளை கோடைக்காலத்தில் குளிர்ச்சியுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

* தற்போது சூரியக் கதிர்களின் தாக்குதல் அதிகப்படியாக இருப்பதால், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய வேளையில் அழைத்து செல்வதை அறவே கூடாது.
* குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது, நல்ல காற்றோட்டமாக இருக்கும் குழந்தைகளை வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் தள்ளுவண்டியைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் இவ்வாறு தள்ளுவண்டி வாங்கும் போது, குழந்தைகளை இறுக்குமாறு இல்லாமல், சற்று இடம் அதிகமாக இருக்கும் வகையில் வாங்குவது நல்லது. அதிலும் எடைகுறைவாக உள்ள நைலானால் செய்யப்பட்ட தள்ளுவண்டியை பயன்படுத்துவது நல்லது.
* கோடை காலத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் வறட்சியானது அதிகமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு அவ்வப்போது அதிகப்படியான தண்ணீரைக் கொடுத்து வர வேண்டும். இதனால் உடல் வறட்சியை நீக்கலாம்.
இவையே குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான சில எளிமையான வழிகள்.



Click it and Unblock the Notifications