பாம்புகளை பற்றி பலரும் அறியாத திகைப்பூட்டும் தகவல்கள்!

இந்தியாவில் மொத்தம் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. சில வகையான பாம்புகளின் விஷத்தன்மை, நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகின்றது.

இந்த வகையை சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் போன்றவை. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து இரத்தம் உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் பாம்பு இந்த வகையை சேர்ந்தது ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல்கள்!

தகவல்கள்!

*ஓராண்டுக்கு பாம்புகளால் மட்டும் உலகில் ஒரு லட்சம் பேர் கொல்லப்படுகிறார்கள்.

*பிரேசிலில் இருக்கும் ஓர் தீவிற்கு மக்கள் செல்வதே இல்லை. அங்கு ஐந்து மீட்டர் தூரத்திற்கு ஓர் பாம்பு இருப்பதே இதற்கான காரணம்.

*பாம்புகளும் இரண்டு தலைகளுடன் பிறக்க வாய்ப்புகள் உண்டு. இதில், வேடிக்கை என்னவெனில், இரண்டுமே உணவு உண்ணசண்டையிட்டு கொள்ளும்.

தகவல்கள்!

தகவல்கள்!

*உலகின் முதல் பத்து விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

*பாம்புகளைவிட தேனீக்களால் தான் மனிதர்கள் அதிகளவில் கொல்லப்படுகின்றனர்.

*பாம்புகளால் அதன் வாயை 150 டிகிரி அளவிற்கு திறக்க முடியும்.

தகவல்கள்!

தகவல்கள்!

*பிளாக் மாம்பா எனும் பாம்பு கடித்து உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.

*டைட்டநோபோ எனும் பாம்பு தான் உலகிலேயே பெரிய, நீளமான, எடை அதிகமான பாம்பாகும். இது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் ஆகும்.

*பாம்புகள் மகுடியின் சப்தத்திற்கு ஏற்ப அசைவதில்லை. பாம்பாட்டியின் உடல் அசைவிற்கு ஏற்ப தான் அசையும்.

தகவல்கள்!

தகவல்கள்!

*பாம்புகள் தங்களது நாக்கை வைத்து தான் நுகர்கின்றன.

*பாம்புகளுக்கு கண்ணிமைகள் இல்லை.

*பாம்புகள் திறந்த கண்களுடன் தான் உறங்கும்.

தகவல்கள்!

தகவல்கள்!

*அமெரிக்கர்களுக்கு பாம்புகள் என்றால் மிகவும் பயம். 51% அமெரிக்கர்களுக்கு பாம்பு என்றால் பயம்.

*அதிர்வுகளை வைத்து பாம்பு மற்ற விலங்குகளின் வருகையை உணர்கின்றன.

*சில வகை பாம்புகள் இரண்டு ஆண்டுகள் கூட உணவின்றி உயிர்வாழும் திறன் கொண்டிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion