Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
வீட்டில் நேரம் போகவில்லையா? தோட்டம் போடுங்களேன்!

இதோ சில யோசனைகள்....
வீட்டில் நேரம் போகவில்லை என்று நினைக்கும் பெண்கள் தோட்டம் அமைக்கலாம். தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. எல்லோருக்கும் அது வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். அவர்கள் தங்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.
மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை ஏதேனும் லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம். புதினா செடி, கீரை வகைகளை சிறிய தொட்டிகளில் ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம். எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு , அவற்றை வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.
அது தினமும் ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் உள்ளம் ஆனந்தத்தில் கூத்தாடும். மேலும் அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது, வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது நமது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் நமது கொள்கையாக வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்று இருக்கட்டுமே!



Click it and Unblock the Notifications