Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மார்பகத்தை பெரிதாக்குவதால் புற்றுநோய் ஆபத்து: ஆய்வு முடிவு

மார்பகத்தை பெரிதாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையினால் புற்றுநோய் ஆபத்து இருமடங்கு அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மார்பகத்தை அடர்த்தியாக்கும் சிகிச்சை செய்துகொண்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மார்பத்தை பெரிதாக்கிய 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை ஆய்வு செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.
அடர்த்தியான மார்பகங்களுக்ககாக செலுத்தப்பட்ட திசுக்கள்தான் இந்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்றனவாம். அடர்த்தியான மார்பகங்களை பொருத்தியவர்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மார்பகத்தின் திசுக்கள் வெள்ளையாகவும், கருப்பாகவும் இருந்தது. இதில் வெள்ளை பகுதி அடர்த்தியாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட திசுக்கள். கருப்பு பகுதி கொழுப்பு திசுக்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் 50 வயது முதல் 74 வயதுடைய 1,177 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மார்பகத்தை அடர்த்தியாக்கியதன் மூலம் மெனோபாஸ் பருவம் முன்னதாகவே தொடங்கியது தெரியவந்தது.
ஆஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வந்துள்ளது. இதுவே மார்பகத்தின் கட்டி வளர்வதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மார்பகத்தை அடர்த்தியாக்குவதற்காக பொருத்தப்பட்ட திசுக்கள் மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு காரணமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளை வியன்னாவில் நடைபெற்ற எட்டாவது ஐரோப்பிய மார்பகப்புற்றுநோய் மாநாட்டில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications