Just In
- 20 min ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 3 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
74% இந்தியர்களுக்கு இதய நோய்: நீரிழிவின் தலைநகரம் சென்னை
உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டு நாடுமுழுவதும் மருத்துவத்துறை சார்பில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இளைய தலைமுறை பாதிப்பு
இந்தியாவில் மொத்தம் 22 முக்கிய நகரங்களில் 1.02 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர். 40 முதல் 44 வயதுடைய பெண்கள் 72 சதவிகிதம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இந்த கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதேபோல் 30 முதல் 34 வயதுடையவர்களில் 57 சதவிகிதம் பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாறிவரும் வாழ்க்கை முறை
உடல் உழைப்பு குறைந்துள்ளதும், உடற்பயிற்சி இல்லாத காரணத்தினாலும்தான் இளைய தலைமுறையினர் இதயநோய்க்கு ஆளாகின்றனர் என்று ஆய்வினை மேற்கொண்ட இதயநோய் மருத்துவ நிபுணர் சோமசுந்தரம் கூறியுள்ளார். புகைப்பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை போன்றவைகளும் இதயநோய் ஏற்படக் காரணமாகின்றன.
அதிகரிக்கும் உயிரழப்பு
1990 களில் 30-44 வயதுவரை உடைய 11,75,0000 பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 25,84,000 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 6ல் ஒரு இளைஞர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உடல்பருமனால் இதயநோய்
எல்லா நகரங்களிலும் இந்நோயின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை.. உணவுப்பழக்கங்கள், தவறான சில பழக்கங்களே இதய நோய் பாதிப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர்,டெல்லி, மும்பை, அகமதாபாத், சண்டிகர் போன்ற நகரங்களில் வசிப்போர் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனால் இதயநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 57 சதவீத பெண்களுக்கு 30 வயதிலேயே பாதிப்புகள் காணப்படுகின்றன.
நீரிழிவின் தலைநகரம்
சென்னை மாநகரை பொறுத்தவரை 23 சதவீதம் பேர் இதய நாள நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கே இந்நோய் அதிகளவில் உள்ளது. தவிர 17 சதவீதம் பேர் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக சென்னை ‘நீரிழிவின் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஐதராபாத், பெங்களூர் நகரங்கள் உள்ளன.