Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 3 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 11 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 13 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி இதை எதிர்பார்த்து மாட்டாரு
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Movies ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பெண்களே! உங்க கணவன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அப்ப என்ன பண்ணனும் தெரியுமா?
ஒரு உறவில் தொடர்பு என்பது மிகவும் அவசியமானது. தம்பதிகள் இருவரும் தொடர்பு கொள்வதுதான், அவர்களின் உறவு இணைந்திருக்க உதவுகிறது. எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கும் திறவுகோல் தொடர்பு கொள்வதுதான்
கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்சனை விவாகரத்து வரையிலும் செல்கிறது. தாம்பத்தியத்தில் நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் போலவே இன்றியமையாதது. நம்பிக்கை என்பது திருமணத்தை ஆதரிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். ஒரு உறவில் நம்பிக்கை இல்லையென்றால் அங்கு, வாக்குவாதங்கள், தவறான புரிதல்கள் மற்றும் நேர்மையின்மை வளரும். ஆனால் நீங்கள் ஏற்கனவே அந்த கட்டத்தை கடந்துவிட்டால் என்ன நடக்கும்? உங்கள் துணையை நோக்கிய சந்தேகங்கள், ரகசியம், பொறாமை போன்ற பல காரணங்களால் எழலாம்.
எனவே, இந்த நேரத்தில், உங்கள் கணவரை நம்ப முடியாதபோது நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. இக்கட்டுரையில், கணவனை நீங்கள் நம்பாத போது செய்ய வேண்டியவை பற்றி காணலாம்.
கணவரிடம் கேளுங்கள்
உங்கள் நம்பிக்கையை திரும்ப பெற உங்கள் கணவரிடம் கேளுங்கள். உங்கள் கணவர் மீது வைத்த அனைத்து நம்பிக்கையும் இழந்த பிறகு, உங்களால் முழு நம்பிக்கையையும் கொடுக்க முடியாது. நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதற்கு நேரம், பொறுமை மற்றும் நிறைய அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு தேவை. ஒரு திருமணத்தில் பாதுகாப்பைக் கோருவதுபோல அல்ல. ஆனால், இது உங்களுக்குத் தேவையானது.
உங்கள் கணவரை நிதானமாக எதிர்கொள்ளுங்கள்
உங்கள் கணவரின் துரோகத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், அவரை எதிர்கொள்ளுங்கள். ஆனால் அமைதியாக எதிர்கொள்ள வேண்டும். உங்கள் உணர்ச்சிகளைச் சரிப்படுத்த உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் கோபமாகவும், சோகமாகவும் இருக்கும்போது உங்கள் கணவரை எதிர்கொள்வது, நீங்கள் சொல்ல விரும்பாத வார்த்தைகளை வெளிப்படுத்தலாம். கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, துணைவரின் குடும்பத்தினரைக் குறை சொல்வது போன்ற விஷயங்கள் கணவன் - மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுத்தும். இவற்றை அடியோடு தவிர்க்க வேண்டும். ஒருவர் கோபமாக சத்தம் போடும் நேரத்தில் மற்றவர் அமைதியாக இருந்துவிட்டாலே பாதி பிரச்னை குறைந்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கக் கூடாது.
தொடர்பு
ஒரு உறவில் தொடர்பு என்பது மிகவும் அவசியமானது. தம்பதிகள் இருவரும் தொடர்பு கொள்வதுதான், அவர்களின் உறவு இணைந்திருக்க உதவுகிறது. எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கும் திறவுகோல் தொடர்பு கொள்வதுதான். தொடர்பு கொள்வது என்பது தம்பதிகள் இருவரும் மனம் விட்டு பேசுவது. எனவே, நீங்கள் உங்கள் கணவரை முற்றிலும் வசைபாடுவதற்கு முன், உங்கள் உணர்வுகளை நிதானமாகப் பேசி, பிறகு அவர்களிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்.
மற்றவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்
உங்கள் கணவருடன் உங்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அதற்கு நேர்மாறாக, நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை ஈடுபடுத்துவது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். ஒரு தொழில்முறை நிபுணரும் ஒரு நல்ல யோசனையை உங்களுக்கு வழங்க முடியும். ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் உங்களுக்கு மிகவும் தேவையான வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
மன்னிப்பதும் நம்புவதும் வெவ்வேறு விஷயங்கள்
ஏமாற்றும் கணவர்களை மன்னிப்பது என்பது அவர்களை மீண்டும் தங்கள் வாழ்க்கையில் அனுமதிப்பது என்று நம்பும்போது பெரும்பாலான மக்கள் தவறு செய்கிறார்கள். இது அப்படி இருக்கக்கூடாது. உங்கள் கணவர் முதலில் உங்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். மன்னிப்பு என்பது உங்கள் வாழ்க்கையில் மீண்டும் நுழைவதற்கு நீங்கள் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. வித்தியாசம் தெரியும்.
இறுதிகுறிப்பு
தம்பதிகள் தங்களுக்குள் மீண்டும் பிணைப்பை ஏற்படுத்த செயற்பாடுகளை ஒன்றாக செய்ய வேண்டும். தம்பதியர் அவ்வப்போது ஒன்றாக ட்ரெக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து யோகா, பாட்டு என ஏதாவது கலையைக் கற்கலாம். இது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை அதிகரிக்கும்.