Just In
- 16 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...!
தொடர்ச்சியாக தங்கள் துணையை ஏமாற்றுபவர்கள் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியற்ற தன்மைக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். விஷயங்களைச் செயல்படுத்துவது தங்களது கூட்டாளியின் வேலை என்று அவர்கள் நினைக்கலாம்.
மக்கள் ஏமாற்றுவதற்கும் ஏமாறுவதற்கும் நூற்றுக்கணக்கான காரணங்கள் உள்ளன. உங்களுக்கு மிகவும் பிடித்தவர் உங்களுக்கு துரோகம் செய்யும்போது அவர்களின் மனதில் சரியாக என்ன நடக்கிறது என்பதைக் குறிக்க முடியாது. ஒவ்வொரு நபரும் மோசடிக்கு ஒரு காரணத்தைக் கூறலாம். மற்றவர்களும் வேறுபட்ட பல காரணங்களை சாக்குப்போக்குகளாக கொண்டிருக்கலாம். திருமண உறவில் பல சிக்கல்கள் ஏற்படுவது சாதாரணம்தான் என்றாலும், தங்கள் துணை தன்னை ஏமாற்றுகிறார் என்பதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது.
ஒருவர் திருமணத்திற்கு புறம்பான உறவில் மோசடியில் துரோகத்தில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், தொடர்ச்சியாக ஏமாற்றுபவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் உள்ளன. அவர்கள் ஏன் அதை ஒரு பழக்கமாக மாற்றுகின்றன என்பதை விளக்க இது உதவும். எனவே, இக்கட்டுரையில் தொடர்ந்து ஏமாற்றும் நபர்களைப் பற்றிய சில உண்மைகளை தெரிந்துகொள்ளலாம்.
எப்போதும் தவறை நியாயப்படுத்த முயற்சிப்பது
தொடர்ச்சியாக கள்ள உறவில் ஈடுபட்டு ஏமாற்றுபவர்கள் உறவில் விஷயங்கள் தவறாக நடக்கும்போது தங்கள் கூட்டாளரை குறை கூறுவது மிகவும் இயல்பானது. இதனால் அவர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்த முடியும். அவர்கள் தங்கள் துணையின் பாலியல், ஆதரவு அல்லது கவனக்குறைவு என்று குற்றம் சாட்டக்கூடும். இது முக்கியமாக இரு கூட்டாளர்களுக்கிடையில் தொடர்பு இல்லாததால் தான் நடக்கிறது.
MOST READ: காமசூத்ராவில் கூறியுள்ள 'இந்த' விஷயங்கள செஞ்சா... உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்!
தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள்
தொடர்ச்சியாக ஏமாற்றுபவர்கள் எப்போதுமே தங்கள் கூட்டாளர்களால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் அதை வேறு எங்காவது கண்டுபிடிப்பார்கள். உறவில் அவர்கள் விரும்பாத விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசாததே இதற்குக் காரணம்.
மகிழ்ச்சியற்ற தன்மை
தொடர்ச்சியாக தங்கள் துணையை ஏமாற்றுபவர்கள் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியற்ற தன்மைக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். விஷயங்களைச் செயல்படுத்துவது தங்களது கூட்டாளியின் வேலை என்று அவர்கள் நினைக்கலாம். எப்போதும் ஏமாற்றுபவர்கள் தங்கள் கூட்டாளியால் தான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம் என்று கருதுகிறார்கள். எனவே விஷயங்கள் தவறாகப் போகும் தருணத்தில், ஏமாற்றுவதைத் தவிர வேறு அதை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியாது.
தனியாக இருக்க பயப்படுகிறார்கள்
வழக்கமாக ஏமாற்றும் நபர்கள் கைவிடப்படுவார்கள் என்ற பயத்தை கையாள்வதற்கான ஒரு வழியாக தனியாக இருக்க பயப்படலாம். இது குறைந்த சுயமரியாதையிலிருந்து தோன்றக்கூடும். பல நபர்களுடன் இருப்பதன் மூலம், அவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், பல உறவுகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
MOST READ: உடலுறவுக்கு முன்பு நீங்க செய்யும் 'இந்த' விஷயம்தான் உங்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை தருமாம்...!
விரும்பத்தகாததாக உணர்கிறார்கள்
சிலர் தங்கள் சொந்த பாதுகாப்பின்மை மற்றும் அவர்கள் விரும்பத்தகாதவர்கள் என்ற ஆழ்ந்த பயம் காரணமாக மீண்டும் மீண்டும் பல உறவுகளில் ஏமாற்றுகிறார்கள். வேறொரு நபருடனான தொடர்பை உண்மையிலேயே அனுபவிக்கும் அளவுக்கு பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று அவர்கள் ஒருபோதும் சவால் விடுவதில்லை.
மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்
வேறொருவர் தங்களை மகிழ்ச்சியாக மாற்றுவார் என்று அவர்கள் எப்போதும் நினைக்கிறார்கள். அதனால், அவர்கள் வேறு பல உறவுகளில் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைத்து கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். தங்களது தற்போதைய கூட்டாளருடன் உண்மையான தொடர்பைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் கூட்டாளியின் குறைபாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள். அதே நேரத்தில் ஒரு அந்நியன் அவர்களுக்கு அதிக உற்சாகத்தையும் நிறைவையும் அளிப்பார் என்று கருதுகின்றனர்.