Just In
- 1 hr ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 8 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தவறான ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தமாம்... உஷார்!
திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமானதுதான். அதற்காக உங்கள் துணையை விட்டு நீங்கள் விலக வேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம்.
திருமணமான புதிதில் கணவன், மனைவி இருவருமே காதல் மயக்கத்தில்தான் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்குமே பொருந்தும். நீங்கள் தவறான நபர்களை திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.
திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமானதுதான். அதற்காக உங்கள் துணையை விட்டு நீங்கள் விலக வேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம். ஆனால் நீங்கள் தவறான நபரை திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்று உறுதியாக தெரிய வந்தால் உடனடியாக அந்த உறவில் இருந்து வெளியேறுவது நல்லது. நீங்கள் தவறான நபரை திருமணம் செய்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் உறவில் நடக்கும் சில சம்பவங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்போதும் சோகமாக இருப்பது
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும், ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. சோகமாக இருப்பதோ அல்லது மகிழ்ச்சியின்றி இருப்பதோ அசாதாரணமானதல்ல, ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகும் உங்கள் துணையால் உங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை என்றால் அது நிச்சயம் கவலைப்பட வேண்டிய விஷயம்தான். ஒவ்வொரு நாளையும் கடத்துவது என்பதே உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம். அப்படியிருந்தால் உங்கள் பிரச்சினைக்கான காரணம் உங்களின் வாழ்க்கைத்துணைதான்.
சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் சகஜமாவது
நீங்களும் உங்கள் துணையும் எல்லாவற்றையும் பற்றி வாதிடுகிறீர்களா? இது ஒரு வழக்கமான செயலாகிவிட்டதா? சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஒரு உறவின் மிகவும் பொதுவான அம்சங்களாக இருந்தாலும், அது தினமும் நடந்தால் அது நிச்சயமாக கவலைக்குரிய ஒரு காரணமாகும். நாளடைவில் இது மிகவும் மோசமானதாக மாறும், அது நடக்கும்போது நீங்களே உணர்வீர்கள். உங்கள் திருமணத்தில் உங்களுக்கு அதிகமான மோதல்கள் இருந்தால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மனப்பொருத்தம் இல்லை என்று அர்த்தம். நீங்கள் சண்டைகளை தவிர்க்க நினைத்தாலும் சண்டை வந்தால் உங்கள் துணை மீதுதான் தவறு.
முரண்பட்ட முன்னுரிமைகள்
உங்கள் உறவின் வலிமையை தீர்மானிப்பதில் முன்னுரிமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஒரு திருமணத்தில், நிதி, வேலை இலக்குகள் அல்லது நீண்ட கால திட்டங்கள் போன்ற கவனம் தேவைப்படும் பல விஷயங்கள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது நீங்களும் உங்கள் மனைவியும் ஒரே பக்கத்தில் இல்லை என்றால், அது உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு குழப்பத்தை உருவாக்கக்கூடும். எதிர்கால திட்டமில்லாதவர்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்றவர்கள்.
MOST READ: சாணக்கிய நீதி படி உங்களின் இந்த ரகசியங்களை வெளியே கூறினால் உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம் தெரியுமா?
நேர்மை இல்லாமல் இருப்பது
நேர்மைதான் எந்தவொரு உறவுக்கும் அடிப்படையாகும். இது உங்கள் உறவில் வெளிப்படைத்தன்மையை தீர்மானிக்கிறது மற்றும் உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இடையிலான சமநிலையை பராமரிக்கிறது. நீங்கள் தொடர்ந்து உங்கள் கூட்டாளரிடம் பொய் சொல்கிறீர்கள் மற்றும் பணம், குடும்பம் மற்றும் துரோகத்துடன் ஏதாவது சம்பந்தப்பட்ட பெரிய சிக்கல்களை மறைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், நீங்கள் ஒரு படி பின்வாங்கி உங்கள் திருமணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உங்கள் துணையின் நேர்மையின்மையை நீங்கள் உறுதியாக தெரிந்து கொண்டால் அதற்குமேல் அந்த உறவில் நீங்கள் இருப்பதில் பயனில்லை.
பேசுவதற்கு எதுவும் இல்லை
ஆரோக்கியமான உறவில் உரையாடல்கள் என்பது மிகவும் முக்கியமானது. உங்கள் இருவருக்கும் பொதுவான விஷயங்கள் இருக்கிறதா என்பது முக்கியமல்ல, நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் மௌனத்தை உடைத்து பல மணி நேரம் பேச முடியும். ஆகையால், நீங்களும் உங்கள் மனைவியும் அதிகம் பேசவில்லை அல்லது பேசுவதில் ஆர்வம் இல்லையென்றால், நீங்கள் ஒருவருக்கொருவர் ஆர்வத்தை இழந்துவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறியாகும், இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். உங்களுக்கு உங்கள் துணை மீது ஆர்வம் இல்லையென்றால் நிச்சயம் நீங்கள் தவறான ஒரு உறவில் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
தனிமையே நண்பராக மாறுவது
நீங்கள் திருமணமாகி, உங்கள் மனைவியுடன் இருப்பதை விட தனியாக இருப்பது உங்களுக்கு வசதியாக இருந்தால், உங்கள் திருமணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இது பெண்களுக்கும் பொருந்தும். திருமணம் என்பது தோழமை மற்றும் பொருந்தக்கூடிய தன்மை பற்றியது என்றாலும், நீங்கள் தனியாக இருக்கும்போது நீங்கள் மிகவும் சிறந்தவர் என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் திருமணத்தில் ஏதோ சரியாக இல்லை. தவறான நபருடன் திருமண உறவில் இருப்பது உங்களுக்கு தனிமையை உணர்த்தும். உங்களுக்கு துணையாக நீங்கள் இருப்பது மட்டுமே உங்களுக்கு ஆதரவாக இருந்தால் உங்கள் திருமணத்திற்கு அர்த்தமே இல்லை.
MOST READ: வெறும் வயிற்றில் செய்யும் இந்த செயல்கள் மற்றும் சாப்பிடும் உணவுகள் உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்
வேறொருவரைப் பற்றி சிந்திப்பது
இது மிகவும் சர்ச்சைக்குரியது, ஆனால் தவிர்க்க முடியாத அறிகுறியாகும், இது உங்கள் திருமணம் சிக்கலில் இருப்பதைக் குறிக்கிறது. நாம் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட மனிதர்கள், எல்லாவற்றிலும் அன்பை நாடுகிறோம். இருப்பினும், நீங்கள் திருமணமாகி, உங்கள் துணையைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து அன்பை நாடுகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கேத் தெரியும். இந்த எண்ணம் வந்துவிட்டால் உங்கள் துணை சரி இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எப்போதும் அவமதிப்பது
உங்கள் துணை எப்போதும் மற்றவர்கள் முன் அவமதிப்பது நீங்கள் தவறான ஒரு நபரை திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை உணர்த்தும் வலிமையான அறிகுறியாகும். திருமணம் என்பது உங்கள் துணையை சிறப்பாக மதித்து கவனித்து மேம்படுத்துவதே தவிர, அவரை அவமதிப்பதும், அவர்களின் பலவீனங்களை சுட்டிக்காட்டுவதும் அல்ல. இந்த சம்பவம் அடிக்கடி நடந்தால் நீங்கள் மோசமானவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
MOST READ: நம் முன்னோர்கள் 'அந்த' விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா?
என்ன செய்ய வேண்டும்?
சில நேரங்களில் நாம் எங்கள் திருமணத்தில் ஒரு கடினமான கட்டத்தை கடக்கும்போது, அதிகமாக உணரப்படுவது இயல்பு. சண்டைகள், தவறான தகவல்தொடர்பு, விரக்தி போன்றவை நீங்கள் தவறான நபரை திருமணம் செய்து கொண்டதாக நினைக்கக்கூடும். ஆனால் அது உங்களை அவ்வாறு சிந்திக்க வைக்கும் சூழ்நிலைகள். இருப்பினும், மேலே குறிப்பிட்ட அனைத்து அறிகுறிகளும் உங்கள் வாழ்க்கையில் நிகழ்கின்றன என்று நீங்கள் உணர்ந்தால், அது நீங்களும் உங்கள் துணையும் ஒன்றாக இருக்க வேண்டாமா என்று உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்பங்களில் நீங்கள் உதவியை நாட வேண்டும். சரியான உதவி பெற்று தீர்வை பெற முயற்சித்தாலும் உங்கள் திருமண உறவு மேம்படவில்லை என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று சிந்திக்க வேண்டிய நேரமிது.