Just In
- 22 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
Don't Miss
- News கொக்கரிக்கிறார் சிவக்குமார்.. பேசாமலிருக்கிறார் ஸ்டாலின்.. காங்கிரஸ் வந்தாலே பிரச்சனை.. யார் பாருங்க
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
குழந்தை இல்லாத வாழ்க்கையும் இனிமை தான். எப்படி தெரியுமா?
குழந்தை இல்லாத வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கை அழகானது. ஆனால் திருமண வாழ்க்கையில் குழந்தைகள் இல்லாமல் போவது கூட அழகானது தான். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையை அழகாக்கிக்கொள்ள வேண்டும்.
மருத்துவர் உங்களால் குழந்தை பெற முடியாது என்று கூறியவுடன் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை. முதலில் அந்த உண்மையை புரிந்து கொள்ள சற்று சிரமமாக தான் இருக்கும். அடுத்தது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம்.
இது சற்று பெரிய பிரச்சனை தான். உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்காக வாழுங்கள். இங்கே எப்படி உங்கள் வாழ்க்கையை மற்றவர் கண்டு வியக்கும் படி மாற்றிக்கொள்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
#1
முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் சோகத்தை வெளியேற்றுங்கள். உங்கள் துணையிடம் பேசி உங்களுக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஆதரவின்றி இருக்கும் ஒரு குழந்தைக்கு தாய் தந்தை பாசம் கிடைக்கும். உங்களுக்கும் பிள்ளை பாசம் கிடைக்கும்.
#2
உங்களது சேமிப்பு தொகையை பயன்படுத்தி வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள். புது புது இடங்களுக்கு சென்று பலதரப்பட்ட மக்களை சந்திப்பதன் மூலம் உங்களது மனதில் உள்ள சோகங்கள் மறையும்.
#3
செல்ல பிராணிகளை வளர்த்துங்கள். அவை உங்களிடம் குழந்தையை போல பாசமாக நடந்து கொள்ளும். நாய், பூனை, கிளிகள் ஆகியவற்றை வளர்பதன் மூலம் உங்கள் வீடு குதுகலமாக இருக்கும்.
#4
உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் காய்கறிகள், பூக்கள் என சில செடிகளை வளர்பதன் மூலம் உங்களது மனம் லேசாகும். இது உங்களது குழந்தை வளர்வதை போல கொஞ்சம் கொஞ்சமாக வளர்வது மனதிற்கு இதமாக இருக்கும்.
#5
உங்களது வாழ்க்கையில் அடைய விரும்பும் இடத்தை அடைய போராடுவதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இதனால் உங்களுக்கு பெயர், புகழ், பணம் அனைத்தும் கிடைக்கும். குறிப்பாக தனிமை உணர்வு குறையும்.
#6
விளையாட்டு தனமான வாழ்க்கை உங்கள் வாழ்வில் உள்ள சோகத்தை போக்கும். உங்களது பொழுதுபோக்குகள், சமையல் கற்றுக்கொள்வது, எழுதுவது, பிடித்த புத்தகத்தை படிப்பது என உங்கள் நேரத்தை உங்கள் துணையுடன் சேர்ந்து கழியுங்கள்.
#7
இறை நம்பிக்கை ஒருவரது மனதை அமைதியாக மாற்றும். இது உங்களது சோகங்களை போக்கி மனதை ஒருநிலைப்படுத்தும். உங்கள் துணைக்கும் இறை நம்பிக்கை இருந்தால், இருவரும் சேர்ந்து கோவில்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள்.