For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் திருமணம் செய்தவர்களுக்கு இப்படியும் தண்டனை கிடைக்கும்... உஷார்! My story # 96

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை துவங்கும் முன்னரே முடித்து வைக்கப்பட்ட சோகக் கதை.

|

அம்முக்குட்டி சம்மத்தா சாப்டுவியாம் அம்மா அப்போதான் கத சொல்வேன்... சரியா என்று மகளை சமாதனப்படுத்தி ஒரு தோசையை முழுங்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிறதே... என்று அலுத்துக் கொண்டாள்.

நீ கத சொல்லு என்று சிணுங்க...

தாத்தாட்ட சொல்லவா? தாத்தா மொட்டமாடில வச்சு பூட்டிருவாரு... என்று மிரட்ட கண்களை உருட்டியபடி கன்னத்தில் அடைத்து வைத்திருக்கும் உணவை முழுங்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு கதை சொல்ல வேண்டுமே எப்படிச் சொல்ல, எதிலிருந்து ஆரம்பிக்க காட்டில் உலாவரும் சிங்கத்தைப் பற்றி சொல்லவா, அல்லது கடலிலும் நிலத்திலும் மாறி மாறி வாழும் அதிசிய மீனைப்பற்றியா? அல்லது ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டி அற்புத விளக்கை தேடிக் கண்டுபிடிக்கும் இளவரசனைப்பற்றியா?

எதைச்சொல்ல.... அவளுக்கு எதுவும் தோன்றவில்லை. கதை ஆரம்பித்து விட்டால் முடிக்க வேண்டுமே... அதை விட அவள் நடுநடுவே கேட்கும் வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே.

யோசித்தால்.... என்னைப் பற்றி ஆம், என்னைப்பற்றியே சொல்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Emotional story of a girl about her husband

Emotional story of a girl about her husband
Story first published: Wednesday, December 6, 2017, 13:31 [IST]
Desktop Bottom Promotion