Just In
- 18 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 28 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 2 hrs ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Movies டோவினோ தாமஸுடன் லிப் லாக் காட்சியில் நடித்த பாவனா...முகம் சுளித்த ஃபேன்ஸ்!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம்? தம்பதிகள் கூறும் பதில்கள்!
Quora எனும் இணையத்தில் கூட்டுக்குடும்பத்தில் வாழும் தம்பதிகள் மத்தியில் தாம்பத்தியம் எவ்வாறு நிலவுகிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் பலவிதமான பதில்கள் அளித்துள்ளனர். இளம் தம்பதிகளில் இருந்து, திருமணமாகி பல வருடமான தம்பதிகள் வரை பலரும் இந்த கேள்விக்கு அவரவர் பார்வையில் பதில்கள் பதிவு செய்திருந்தனர்.
புருஷன்கிட்டே இந்த 12 குவாலிட்டி கண்டிப்பா இருக்கணும்னு பொண்ணுக எதிர்பாக்குறாங்கப்பு!
பெரும்பாலும் அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று அசௌகரியமானதாக தான் இருக்கிறது என கூறுகின்றனர். பெரியோர், சிறியவர்கள் அனைவரும் உறங்கிய பிறகும் கூட தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று சிரமமானதாக இருக்கும் எனவும் சிலர் பதில் அளித்துள்ளனர்.
உங்க மனைவியின் சோகத்தை போக்க இத முயற்சி பண்ணியிருக்கீங்களா?
இயல்பாகவே கூட்டுக் குடும்பம் என்று வந்துவிட்டால் உடுத்தும் உடையில் இருந்து, கணவன், மனைவி கொஞ்சம் கொஞ்சிக் கொள்ள வேண்டும் எனிலும் கூட நீண்ட தயக்கத்திற்கு பிறகு தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்...
பதில் #1
விளக்குகள் அணைத்த பிறகும் கூட உணர்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஆங்காங்கே உறக்கத்தில் சிலரின் சிறு அசைவுகளும் கூட சத்தத்தை உண்டாக்கும், அது பதட்டத்தை உண்டாக்கும். அனைவரும் உறங்கிவிட்டனரா என சோதிக்க வேண்டும், இதற்கு பதிலாக வார இறுதிகளில் எங்கேனும் அருகே வெளியிடங்களுக்கு பிக்னிக் சென்று வந்து விடலாம். இல்லையேல் குடும்பத்தைபிக்னிக் அனுப்பி விடலாம்.
#அபூர்வா
பதில் #2
உடை அணியும் விஷயத்தில் நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஸ்கர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் அணிய முடியாது கால்கள் மறைக்கும் அளவிலான நீளமான உடைகளை தான் தேர்வு செய்ய வேண்டும். இதையும் தாண்டி கணவருக்கு உணர்ச்சி ஏற்பட்டால், அனைவரும் உறங்கும் வரை காத்திருக்க தான் வேண்டும்.
#ரிச்சா
பதில் #3
இந்திய சமுதாயத்தில் ஓர் கட்டமைப்பு கோளாறு இருக்கிறது. குழந்தை பருவத்தில் மட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகும் கூட குழந்தைகள் மீது பெற்றோர் ஆதிக்கம் செலுத்துவது தவறு என்கிறார். குழந்தைகளும் கேள்விகள் கேட்க தயங்குவது தவறு என பெயர் கூறாத ஒருவர் பதிலளித்துள்ளார்.
பதில் #4
நெருக்கம் என்பதை தவிர்த்து, ஒரு மருமகள் கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே கடினம். கணவன், மனைவி உடனான உறவே இதனால் பதிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அம்மாவுடன் தான் இருப்பேன் என்றால் என்ன தான் செய்ய.
#வித்யா
பதில் #5
நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். இருபது வயதாக இருக்கும் போது திருமணம் நடந்தது. நான், கணவர் மற்றும் மாமியார் சிறு அறை கொண்ட வீட்டில் தான் தங்கியிருந்தோம். கணவர் கட்டிலில், மாமியார் தரையில், நான் சமையல் அறை அருகில் என தான் உறங்குவோம். தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முனைவதே மிகவும் சிரமம். இதில் உணர்சிகளை பூர்த்தி செய்துக் கொள்வது மிகவும் கடினம்.
#பெயர் தெரியாத ஒருவர்
பதில் #6
வார இறுதி விடுமுறை, வார நாட்களில் வரும் விடுமுறை வரும் போது தம்பதிகள் வீட்டில் கூறுவதில்லை. எங்கேனும் லாங் டிரைவ் சென்று விடுவார்கள். சில வார இறுதிகளில் அலுவலக வேலை என கூறு சுற்றுலா சென்றுவிடுவார்கள்.
#பெயர் தெரியாத நபர்
பதில் #7
பல அறைகள் கொண்ட வீடுகளில் நள்ளிரவில் தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். இந்நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக கருதலாம். ஆயினும், யாரேனும் நீர் குடிக்க அல்லது என்ன நடக்கிறது என்பதை அறிந்து எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
#பெயர் தெரியாத நபர்
பதில் #8
கூட்டுக் குடும்பத்தில் நாங்கள் தனி அறையில் தான் இருக்கிறோம். எனவே, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பெரிய பிரச்சனை இல்லை. இங்கு பிரச்சனை என்னவெனில் அனைத்தும் சத்தமின்றி நடக்க வேண்டும். முக்கியமாக மறுநாள் ஆணுறையை யாருக்கும் தெரியாமல் வெளியேற்ற வேண்டும்.
#பெயர் தெரியாத நபர்
பதில் #9
இது ஒன்றும் விகாரமான செயல் அல்ல. எப்படியும் குடும்பத்தார், பெற்றோர் வெளி அறையில் தான் இருப்பார்கள். என்ன திருமணத்திற்கு பிறகு தம்பதிகளாக இருப்பவர்கள் அட்டாச்டு பாத்ரூம் இருப்பது போன்ற படுக்கையறைய தேர்வு செய்துக் கொள்வது நல்லது.
#முஹம்மது
பதில் #10
தொடக்கத்தில் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஏனெனில், மற்றவர் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம். உறங்காமல் இருக்கலாம். அந்நேரத்தில் படுக்கையறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சிரமமாக தான் இருக்கும். முக்கியமாக வீட்டில் பருவ வயதினர் இருந்தால் தான் மிகவும் அசௌகரியமான உணர்வு தரும்.
#அருண்
சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய்..!!