Just In
- 4 hrs ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 7 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 7 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 9 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News
பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Movies
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Technology
ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு பிடித்தவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போகக் காரணம் உங்களின் இந்த செயல்தான்...!
அனைவருக்குமே பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் அனைவருக்கும் பிடித்தவராக இருப்பது என்பது யாருக்குமே கிடைக்காத வரமாகும். நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் நம்மை வெறுப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். உங்களை வெறுக்க நீங்கள் தவறான காரியங்களை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.
நீங்கள் சரியான காரியங்கள் அல்லது சாதாரண செயல்கள் என நினைத்தும் செய்யும் செயல்கள் கூட மற்றவர்கள் உங்களை வெறுக்க காரணமாக மாறிவிடும். உங்களின் எந்தெந்த செயல்களால் உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வெறுக்கத் தொடங்குகிறார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்போனை நோண்டுவது
ஒருவரிடம் நீங்கள் பேசத் தொடங்கும்போது அவர்கள் தங்கள் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். அதேபோலத்தான் நீங்கள் இதனை செய்யும்போது மற்றவர்களுக்கும் உங்கள் மீது கோபம் வரும். எந்த காரணமாக இருந்தாலும் இதனை செய்வது எதிரில் இருப்பவர்களுக்கு எரிச்சலையும், அவமரியாதையையும் ஏற்படுத்தும். எதிரில் இருப்பவர்களை மதித்து பேசும்போதே நீங்கள் அவர்களுக்கு பிடித்தவர்களாக மாறிவிடுவீர்கள்.

அதிகமாக பகிர்ந்து கொள்வது
உங்களின் ரகசியங்களை நீங்கள் யாரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள், எவ்வளவு பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பது உங்களின் தனிப்பட்ட தோற்றத்தை நிர்வாகிப்பதில் முக்கியப்பங்கை வகிக்கிறது. எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவர்களிடம் குறிப்பிட்ட அளவான ரகசியங்களை மட்டும்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரை நீங்கள் சந்தித்தால் உங்களைப் பற்றிய உணமைகளையும், ரகசியங்களையும் உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். குறைந்தபட்சம் சிறிது காலமாவது எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் சோகக் கதைகளை கூறுவதற்குப் பதிலாக அவர்களின் மீது அக்கறை செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள். எப்போதும் உங்களைப் பற்றியே பேசிக்கொண்டே இருப்பது உங்கள் உடனிருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
MOST READ: 70,000 பேரை பாலியல் அடிமையாக வைத்திருந்த அரசனுக்கு நேர்ந்த கொடூர முடிவு என்ன தெரியுமா?

கிசுகிசு
வதந்திகள் பரப்புவது என்பது நாம் அனைவரும் அடிக்கடி செய்யும் ஒரு செயலாகும். ஆனால் நீங்கள் எவ்வளவு வதந்திகளை பரப்புகிறீர்கள் என்பதற்கு ஒரு எல்லை உள்ளது. பெரிய மனது உடையவர்கள் கருத்துக்களை விவாதிப்பார்கள், சராசரி மனது உடையவர்கள் நிகழ்வுகளைப் பறரி விவாதிப்பார்கள், ஆனால் சிறிய மனது கொண்டவர்கள் மட்டுமே மக்களைப் பற்ரீ விவாதிப்பார்கள். எனவே மற்றவர்களைப் பற்றி அதிகம் வதந்திகளை பரப்புவது உங்களை மற்றவர்கள் வெறுக்க காரணமாகி விடும்.

வெளிப்படையாக இல்லாமல் இருப்பது
ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்துவிட்டு பேசுபவர்களிடம் விவாதிப்பதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. தான் நினைப்பதுதான் சரி என்று நினைப்பவர்கள் எப்பொழுதும் வேடிக்கையானவர்களாக இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பதன் முக்கியமான அங்கம் மற்றவர்கள் சொல்வதை கேட்பதும், அவர்கள் கூறும் கருத்துக்கு மரியாதை அளிப்பதும்தான். மற்றவர்கள் கூறும் அனைத்தையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் திறந்த மனதுடன் அவர்கள் பேசுவதை கேட்பது நல்லது.

ஆர்வமாக இல்லாமல் இருப்பது
மற்றவர்கள் எப்பொழுதும் பேச்சை நிறுத்துவார்கள் நீங்கள் எப்பொழுது பேசத் தொடங்கலாம் என்று நினைப்பது மற்றவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வமின்மையை குறிக்கும். மற்றவர்களின் பேச்சுக்களில் நீங்கள் காட்டும் ஆர்வமின்மை உங்களுக்கு அவர்களின் வெறுப்பைத்தான் பெற்றுத்தரும். இப்படிப்பட்டவர்களாக ஒருபோதும் இருக்காதீர்கள். மற்றவர்கள் பேச்சை போலி ஆர்வத்துடனாவது கேட்க கற்றுக்கொள்ளுங்கள்.
MOST READ: சுயஇன்பத்திற்கு பிறகு இதையெல்லாம் கண்டிப்பா பண்ணனுமாம்... இல்லைனா ஆபத்துதான்...!

தற்பெருமை
தற்பெருமை என்பது உங்களிடம் இருக்கும் மிகவும் மோசமான குணங்களில் ஒன்றாகும். எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் இந்த ஒற்றைக்குணம் உங்களை அனைவரையும் வெறுக்கும்படி செய்யும். அதிலும் மற்றவர்களை சிறுமைப்படுத்தி உங்களை பெருமையாக பேசிக் கொள்வது உங்களை அனைவரையும் வெறுக்க வைக்கும்.