Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 3 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 11 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 13 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- News எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி இதை எதிர்பார்த்து மாட்டாரு
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
மரியாதை என்பது ஒவ்வொரு உறவின் முக்கியமான தூண். ஒரு ஆண் தனது துணையை அவர்கள் உண்மையில் யார் என்று மதிக்க வேண்டும் மற்றும் பாராட்ட வேண்டும்.
ஒரு உறவில் தம்பதிகள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ தம்பதிகள் இருவரும் பல விஷயங்களை முயற்சிக்க வேண்டும். ஏனெனில், ஒரு உறவைத் தொடங்குவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் எல்லா வழிகளிலும் ஒரு நல்ல உணர்வை கொடுக்கும். வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு உங்களை நகர்த்தி செல்லும், இருப்பினும், அன்புடனும் பொறுமையுடனும் அதைத் தொடர இரு கூட்டாளிகளிடமிருந்தும் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் துணையிடம் தங்கள் அன்பு, மரியாதை மற்றும் கருணை ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் விஷயங்களை வித்தியாசமாக கையாளத் தெரிந்திருக்கலாம். ஒரு நிறைவான உறவைப் பேணுவது மற்றும் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும்.
உறவுகளைக் கையாள்வதில் நன்கு தேர்ச்சி பெற்ற ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் அல்லது விதிவிலக்காக புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அவர்களுக்கென்று சில நல்ல குணங்கள் இருக்க வேண்டும். உறவுகளை நன்கு கையாளத் தெரிந்த ஒரு ஆண்களின் சில குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்
ஆதரவாக இருப்பது
ஒரு ஆதரவான கணவன் அல்லது காதலன் தனது துணையின் முயற்சிகளை ஊக்குவித்து ஆதரவளிப்பான். அவர் ஒருபோதும் தனது பங்குதாரர் தனது இலக்குகளை அடைய முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிக்கமாட்டார். உண்மையில், வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும் அவர் உங்களுக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருப்பார். அவர் தனது துணையை ஆதரித்து ஆறுதல் கூறுவதைத் தவிர, அவர்களை கொண்டாடவும் செய்வார்கள்.
உங்களை மதிப்பது
மரியாதை என்பது ஒவ்வொரு உறவின் முக்கியமான தூண். ஒரு ஆண் தனது துணையை அவர்கள் உண்மையில் யார் என்று மதிக்க வேண்டும் மற்றும் பாராட்ட வேண்டும். மேலும் அவர் தனது துணையிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்க வேண்டும். மரியாதைக்குரிய பண்பு ஒரு நபரின் உணர்திறன், ஆளுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிற்கு எல்லாவற்றையும் விட அதிக மதிப்பை அளிக்கிறது. ஒரு நல்ல ஆண் ஒரு பெண்ணின் மதிப்புகள் மற்றும் வாழ்க்கையின் இலட்சியங்களை மதிக்கிறான்.
நம்பகமானவராக இருப்பது
ஒரு உறவில் துணையை பாதுகாப்பாகவும் எளிதாகவும் உணர வைப்பதுதான் நம்பகத்தன்மையை வரையறுக்கிறது. அன்பும் மரியாதையும் நம்பிக்கை இல்லாமல் அமையாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தன் துணையின் நம்பிக்கையை முதலில் வென்றெடுக்க வேண்டும். பின்னர், அதை பாதுக்காக்க வேண்டும் என்பதை அவர் உணர வேண்டும். ஒரு உறவில் தம்பதிகள் இருவரும் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
அவர் தனது செயல்களை பேச அனுமதிக்கிறார்
அவர்களின் வாக்குறுதிகளுக்கு ஏற்ப ஆண்களின் செயல்கள் அவர்களை சுற்றி இருப்பது இனிமையானவர்கள் என்பதை நிரூபிக்கிறது. அது சவாலாக இருக்கும்போது, அவர் தனது வார்த்தையைக் கடைப்பிடிப்பார். வாக்குறுதிகளை மீற மாட்டார். அர்த்தமில்லாத எதையும் அவர் ஒருபோதும் சொல்வதில்லை. எனவே அவரது வார்த்தைகள் ஒருபோதும் தவறாக இருக்காது. இது அவர்களின் பங்குதாரர் நம்பிக்கையை வளர்க்க அனுமதிக்கிறது மற்றும் அவர் சொல்வதையே செய்கிறார் என்பதை அவர் தொடர்ந்து நிரூபிப்பதால் அவர்களின் உறவை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. இந்த உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாக செல்லும்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்
மனம் விட்டு பேசுவது உறவை வலுவாகவும் மதிப்புமிக்கதாகவும் ஆக்குகிறது. தயக்கமோ பயமோ இல்லாமல் தன் மனதில் பட்டதை சொல்லும் மனிதன் என்றென்றும் செல்ல வேண்டியவன். அவருக்கு ஏதாவது கருத்து வேறுபாடு வரும்போது, தயங்காமல் இல்லை என்று சொல்வார். அவர் கோபத்தை இழக்காமல் அவருக்கு சங்கடமான விஷயங்களைப் பற்றி வாதிடலாம். அவர் நேர்மையானவராக இருப்பார் மற்றும் சமமான நிலையில் தனது கூட்டாளரிடம் உரையாற்றுவார். உங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அல்லது நீங்கள் பொருத்தமாக இருக்கும் வேறு எந்த நடவடிக்கையையும் தேர்வு செய்ய உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார்.
உங்கள் தேவைகளை அவர் அறிவார்
தேவைகள் ஒரு பங்குதாரரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத் தேவைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்த இரண்டு முக்கிய அம்சங்களையும் ஒரு மனிதன் அறிந்திருந்தால், அவனே நல்ல துணை. அவர் அன்பு காட்டுவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர்காலத்திற்கான ஆழமான உரையாடல்களை விரும்புபவராகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் தனது துணைக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அதைத் தொடர அவர்களை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் முயற்சிக்க வேண்டும்.
அதிகமாக நேசிப்பது
அதிகமாக நேசிப்பதைத் தவிர காதலுக்கு வேறென்ன வேண்டும். அன்பு இல்லாமல், கவனிப்பு, மரியாதை, நம்பிக்கை மற்றும் பிற உணர்ச்சிகளுக்கு இடமில்லை. இந்த உணர்வுகளை ஒன்றிணைப்பது காதல். ஒரு மனிதன் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் உங்களை அதிகமாக நேசிக்க தொடங்கியிருந்தால், உன்னிடம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருந்தால், அவன் எல்லாவற்றிலும் சிறந்த தரத்தைப் பெற்றிருக்கிறான். எனவே உறவை எப்படி நன்றாகக் கையாள்வது என்பது உங்கள் கணவனுக்கு அல்லது காதலனுக்கு நன்றாகத் தெரியும்.