Just In
- 22 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தன் கூட படிக்கும் மாணவிக்கு யாருக்கும் தெரியாம தாலி கட்டிய 10 ஆம் மாணவன்... அட கொடுமையே?
பள்ளி மாணவன் ஒருவன் தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு யாருக்கும் தெரியாமல் தாலி கட்டியிருக்கிறார். அது பற்றி இங்கே பார்ப்போம். முழுதாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிங்க.
நாட்டுல என்னென்மோ கொடுமையெல்லாம் நடக்குதுனு தினமும் கேள்விப்படறோம். ஆனா அதுக்குனு இப்படியெல்லாமா கொடுமை நடக்கணும்? நீங்களே சொல்லுங்க. பொதுவாக அந்த காலத்துல தான் பொண்ணுங்க தலை நிமிர்ந்து நடக்கக் கூடாது. வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது. படிக்கக்கூடாதுனு எக்கச்சக்க கட்டுப்பாடுகள். ஆனால் இந்த காலத்தில் பெண்கள் நுழையாத இடமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி எவ்வளவோ சுதந்திரமும் முன்னேற்றமும் வந்துவிட்டாலும் கூட, பெண் குழந்தைகளை தைரியமாக வெளியில் அனுப்ப முடியவில்லை.
சரி வெளியில் சென்றால் தான் பிள்ளைகளுக்கு பிரச்சினை என்று வீட்டில் யாரேனும் ஒருவர் பெண் பிள்ளையை பள்ளிக்கு வாசல் வரை கொண்டு போய் விட்டுவிட்டு வந்தாலும் கூட, இப்படியெல்லாம் கொடுமை நடந்தால் பாவம் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள். போட்டு குழப்பினதெல்லாம் போதும். மொதல்ல விஷயத்துக்க வாங்கனு சொல்றீங்களா? இதோ வந்துடறோம்.
அரசுப் பள்ளிக்கூடம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களின் நிலைமையைப் பற்றி உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியமெல்லாம் கிடையாது. ஆம். பாதி பள்ளியில் குழந்தைகளுக்கு எந்தவித வசதியும் இருக்காது. கழிப்பிட வசதி சுத்தம். அதேபோல ஆசிரியர் பற்றாக்குறை இப்படி பல காரணங்களால் மாணவர்கள் சீரழிந்து போகிறார்கள் என்றால், அவ்வப்போது இதுபோல் நடக்கும் சில சம்பவங்கள் மற்ற மாணவர்களையும் கெடுத்துவிடுகிறது. அப்படி என்ன தான் நடந்தது என்று தானே கேட்கிறீர்கள்.
இந்த சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்திருக்குங்க.
MOST READ: குடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்?
600 மாணவர்கள்
இந்த பகுதியில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப் புறங்களில் இருந்து வந்து இந்த பள்ளியில் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கிட்டதட்ட 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இது மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இருக்கிறது.
காதல்
அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரை சில மாதங்களாகக் காதலித்து வந்திருக்கிறார். சினிமா பாணியில் தங்களுடைய வீட்டில் தங்களுடைய காதலுக்கு எதிர்காலத்தில் எதிர்ப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்று கோக்குமாக்காக யோசித்த மாணவன் இதற்கு ஒரு திட்டம் போட்டான். அந்த திட்டம் எனன தெரியுமா?
MOST READ: கப்பீஸ் செம லக்கி தான்... 'தளபதி 63' ல விஜய் கூடவே நடிக்கவும் பாடவும் போறாராம்
தாலி கட்டிவிட்டான்
பள்ளிக்கு வந்த அந்த மாணவன், யாரும் அருகில் இல்லாத வேளையில் அந்த பெண்ணை தனியாக அழைத்து, தான் பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் கட்டியிருக்கிறான். அந்த பெண்ணும் அவன் மீது காதல் வயப்பட்டிருந்ததால் எதுவும் சொல்லவில்லை. அதன்பின் இருவரும் யாரிடமும் சொல்லாமல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்
நண்பர்களிடம் பெருமையடித்தான்
இது யாருக்கும் தெரியாமல் இப்படியே இருக்க சில நாட்கள் கழித்து, அந்த மாணவனோ தன்னுடைய நண்பர்களுடன் தான் அந்த மாணவியைத் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாகப் பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இது பள்ளி முழுக்க பரவியது.
பெண்ணின் பெற்றோர்
பள்ளி முழுவதும் மட்டுமல்லாது அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கும் இந்த சம்பவம் தெரிய வந்தது. உடனே பெண்ணை அழைத்து அடித்து உதைத்து தாலியை அறுத்து எறிந்துவிட்டனர். அதோடு விடாமல் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் தகராறு செய்துள்ளனர்.
MOST READ: இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
இடைநீக்கம்
விசாரணையில் மாணவர்கள் இருவரின் சம்மதத்தாலும் தான் இது நடந்தது என்றாலும் கூட, படிக்க வந்த இடத்தில் மாணவியின் மனநலையை மாற்றி, இதுபோன்ற தவறான செயலுக்குத் தூண்டியதால் பள்ளியில் இருந்து அந்த மாணவன் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டான். பொதுத்தேர்வு மட்டும் வந்து எழுதிவிட்டுப் போகும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
இப்படியும் இன்னைக்கு மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுபோன்ற விஷயங்களை எங்கிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. பெற்றோர்கள் தான் எப்போதும் கண் கொத்திப் பாம்பாக இருந்து தங்களுடைய பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டியிருக்கிறது.