For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3 குழந்தைகள், 25 வயதில் கணவர் மரணம், 50 வயதில் கண்ட முதல் காதல்!

3 குழந்தைகள், 25 வயதில் கணவர் மரணம், 50 வயதில் கண்ட முதல் காதல்!

By Staff
|

இது வங்காள தேசத்தை சேர்த்த புகைப்பட கலைஞர் மற்றும் மனிநேய ஆர்வலருமான ஜிஎம்பி ஆகாஷ் என்பவரது முகநூலில் பதிவு செய்யப்பட்ட மனதை உருக்கும் உண்மை கதையின் தமிழாக்கம்...

என் கணவர் இறந்த போது, எனக்கு வயது 25. எங்களுக்கு மூன்று குழந்தைகள். கணவரின் இறுதி சடங்களை செய்ய, என்னிடம் இருந்த இரண்டு தங்க வளையல்களை விற்றேன். அப்போது எனக்கு உதவவோ, உறுதுணையாக இருக்கவோ யாரும் இல்லை. எங்கே செல்வது, என்ன செய்வது என்ற புரியாமல் நட்டாத்தில் நின்றுக் கொண்டிருந்தேன். நான் பிழைக்க என் கையில் எதுவுமே இல்லை. நாட்களை கடக்க, பசியாற சாலை ஓரங்களில் ரொட்டி விற்க துவங்கினேன்.

ரொட்டி விற்ற பணத்தை சிறுக, சிறுக சேமித்தேன். கடந்த இருபது வருடங்களில் ரொட்டி, முட்டைகள் விற்று எனது குழந்தைகளை பாதுகாத்து, உணவளித்து, படிக்க வைத்து வருகிறேன். இந்த இருபது வருடமாக என்னால் இந்த சிறிய வீட்டுக்கு வாடகை அளித்து, எனது உணவகத்தை மட்டுமே நடத்தி வர முடிகிறது. இதன் மூலம் வருமானம் வைத்து என் குழந்தைகளுக்காக சொந்த கிராமத்தில் சிறிய இடத்தை வாங்கி வைத்துள்ளேன். அங்கே அவர்களுக்காக வீடும் கட்டிவிட்டேன். அவர்கள் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Meet The Woman Who Fall in Love in Age of 50!

My husband died and left me with my three children when I was 25 years old. I had to sell my only pair of gold bangles for the funeral of my husband.
Desktop Bottom Promotion