For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

22வருடங்களாக பெண்ணை தனியறையில் அடைத்து சித்திரவதை ! My Story #168

இருபத்திரெண்டு வருடங்களாக தனியறையில் அடைத்து கொடுமை செய்யப்பட்ட பெண்.

|

கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. தன் மேல் அடி விழுவதைப் போல கதவில் விழுகிற ஒவ்வொரு அடிக்கும் பயந்து நடுங்கி பின்னால் சென்று கொண்டிருந்தாள். ஒரு துளி வெளிச்சம் அந்த அறையில் இருந்திருக்கவில்லை. அருகில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாது தட்டுத் தடுமாறி தனக்கு பிடிமானம் ஏதும் கிடைத்திடுமா என்று கால்களால் துளாவினால்.

பாவம் சூம்பிப் போய்கிடக்கும் அவற்றால் இவளுக்கு உதவி செய்யத்தான் முடியவில்லை. இம்முறை உள்ளே யார் வந்தாலும் அடித்து விட்டு தப்பித்திட வேண்டும் என்று முனைப்புடன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கட்டப்பட்டிருந்த கைகளை அவிழ்க்க போராடியபடி கால்களால் அங்கேயிங்கே என துலாவினாள். கட்டப்பட்டிருக்கும் பிடியிலிருந்து அவிழ்த்து கொண்டு போய் விட்டுவிட வேண்டும் என்று மனம் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தது.

சத்தம் அதிகமானது. இவளுக்கும் படபடப்பு இரட்டிப்பானது. கதவை அடிக்கிற வேகத்தைப் பார்த்தால் இம்முறை அந்த அரக்கனோடு இன்னும் பலர் வந்திருப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டாள். தன்னால் இங்கிருந்து ஒரு அடி கூட நகரமுடியவில்லை என்று கத்தி அரற்றினாள்.

சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது. விவரம் தெரிந்து இதுவரை இவ்வளவு விசாலமாக இரண்டு கதவுகளையும் திறந்ததேயில்லை. கண்ணே கூசுகிறது. பின்னால் திரும்பிப் பார்த்தால் சட்டைப் பேண்ட் போட்டுக் கொண்டு பலரும் மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு நிற்கிறார்கள். தங்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl Lives 22 Years In Secret Room.

Girl Lives 22 Years In Secret Room.
Story first published: Tuesday, February 6, 2018, 17:55 [IST]
Desktop Bottom Promotion