Just In
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 2 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 7 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
22வருடங்களாக பெண்ணை தனியறையில் அடைத்து சித்திரவதை ! My Story #168
இருபத்திரெண்டு வருடங்களாக தனியறையில் அடைத்து கொடுமை செய்யப்பட்ட பெண்.
கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. தன் மேல் அடி விழுவதைப் போல கதவில் விழுகிற ஒவ்வொரு அடிக்கும் பயந்து நடுங்கி பின்னால் சென்று கொண்டிருந்தாள். ஒரு துளி வெளிச்சம் அந்த அறையில் இருந்திருக்கவில்லை. அருகில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாது தட்டுத் தடுமாறி தனக்கு பிடிமானம் ஏதும் கிடைத்திடுமா என்று கால்களால் துளாவினால்.
பாவம் சூம்பிப் போய்கிடக்கும் அவற்றால் இவளுக்கு உதவி செய்யத்தான் முடியவில்லை. இம்முறை உள்ளே யார் வந்தாலும் அடித்து விட்டு தப்பித்திட வேண்டும் என்று முனைப்புடன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கட்டப்பட்டிருந்த கைகளை அவிழ்க்க போராடியபடி கால்களால் அங்கேயிங்கே என துலாவினாள். கட்டப்பட்டிருக்கும் பிடியிலிருந்து அவிழ்த்து கொண்டு போய் விட்டுவிட வேண்டும் என்று மனம் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தது.
சத்தம் அதிகமானது. இவளுக்கும் படபடப்பு இரட்டிப்பானது. கதவை அடிக்கிற வேகத்தைப் பார்த்தால் இம்முறை அந்த அரக்கனோடு இன்னும் பலர் வந்திருப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டாள். தன்னால் இங்கிருந்து ஒரு அடி கூட நகரமுடியவில்லை என்று கத்தி அரற்றினாள்.
சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது. விவரம் தெரிந்து இதுவரை இவ்வளவு விசாலமாக இரண்டு கதவுகளையும் திறந்ததேயில்லை. கண்ணே கூசுகிறது. பின்னால் திரும்பிப் பார்த்தால் சட்டைப் பேண்ட் போட்டுக் கொண்டு பலரும் மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு நிற்கிறார்கள். தங்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசுகிறார்கள்.